Thursday, June 29, 2006

தைத்த கவிதைகள் சில

புத்தகம் படித்தல் என்பது நம்மைப்போன்ற பலருக்கும் பிடித்தமான ஒன்று இல்லையா.சில புத்தகத்தின் பக்கங்கள் சில சமயம் நம்மை பாதித்து அதை
நினைவில் நிறுத்தும்படியும் செய்து விடும்.உதாரணத்திற்க்கு பொன்னியின் செல்வன் வாசிக்கும் போது பூங்குழலி தன் காதலர்கள் எனக்கூறி வந்தியதேவனிடம் கொள்ளிவாய் பிசாசுகளை காட்டும் பகுதியில் பயந்தே
போனேன்.அதே மாதிரி கடல்புறா வாசித்தப்போது அநாபயசோழனின் தீர்ப்புக்காக நீதிமன்றகாட்சியில் காஞ்சனாதேவி வில்லில் நாண் ஏற்றி
இளையபல்லவனுடன் தோன்றுவது அப்படியே என் கண்ணில் திரைகாட்சியாக விரிந்தது.
நான் கோவில் செல்லும் பொழுதுகளில் சிலசமயம் காசிஆனந்தனின் நறுக்குகள் நினைவில் வரும்.சில எழுத்துக்கள் ஒருவகையில் அனைவரையும் பாதிக்கும் என்பதில் மாற்று கருத்துகள் இல்லை என நினைக்கிறேன்.

அதுபோல் காம உணர்வுகளை அடிப்படையாக கொண்டு நா.மகுடேஸ்வரனின் காமகடும்புனல் நூலில் என் மனதை தைத்தவைகளில் சில இவை.


உடுப்புகள் கிழித்து
உறுப்புகள் கிள்ளிக்கீறி
மானபங்கப்படுத்தினான்
'உன்தாயாருடையதைப்
போலிருந்ததா'என்றாள்
மானபங்கப்பட்டவள்.


'முறையல்லாதன செய்கிறாய்...
சொன்னால் கேள்அண்ணா....'
கண்ணீர் மல்கப் பேசு தோழி
உன்னை வன்புணரவந்தவன்
திகைத்து நிற்கட்டும்.


இப்பொழுதுதெரிகிறது
பிரம்மச்சாரியம்
கடும்நோன்பு
முதிர்கன்னிமை
கொடிய பட்டினி

ஆணின் வாழ்வோட்டத்தில்
நிச்சயம் ஒளிந்திருக்கிறாள்
இன்னொருத்தி
தாயல்லாத
தாரமல்லாத
சகோதரியல்லாத
மகள்லத்தாத
பரஸ்திரி

மரணப்படுக்கையில் இருப்பவரின்
ஞாபகத்திலாடும்
கடைசி முகங்களிலன்று
ஒரு வேசியினூடதாக
இருக்கலாம்.



என்னெய அடீங்கொ
கொல்லுங்கொ
கண்டதுண்டமொ வெட்டிப்போடுங்கொ
காவலுக்கு ஆள் போடுங்கொ
நீங்கொ பாத்து வெச்சிருக்கிறே
மாப்புள்ளைக்கெ என்னெக் கட்டி வெய்யுங்கொ
கட்டிக்கெறென்.
அவனுக்கு புள்ளெ பெத்துத்தரச்சொல்லுங்கொ
பெத்துக்கெறென்
ஆனா
என்னிக்காவது ஒரு நா
எங்கெய்யாவது ஒரு வாட்டி
அவரு வந்து 'வா போயர்றலாம்'னு
கூப்புட்டுப்போட்டார்னு வெய்ங்கொ
என்றெ அப்பன் மேலே சந்தியாமச் சொல்றென்
போட்டெதும் போட்டபெடி கெடக்கெ
அப்பிடியெ அவருகூடப்போயிர்ருவென்....ஆமா....


தலைப்பிற்கும் என்னை இந்தலைப்பில் எழுதத்தூண்டிய முகமூடிக்கு நன்றி