Monday, January 29, 2007

How to convert new blogger

பிளாக்கர் புதிய சேவைக்கு எவ்வாறு மாறுவது என்பதை கிழே படங்களுடன் சின்ன விளக்கம். அத்தோடு தமிழ்மண கருவிப்பட்டை மற்றும் நண்பர்கள் கோபி மற்றும் ஜெகத் ஆகியோர் சரி செய்த பின்னூட்ட பிரச்சினை நிரலியும் சேர்த்துள்ளேன். படித்து பார்த்து இப்பதிவு எவ்வகையில் உதவியா இருந்தது எனச்சொல்லுங்கள்.

அதற்குமுன்னர் உங்களுக்கு தேவையான அடைபலகையை தரவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள்.

1)

polo
polo.txt
Hosted by eSnips


2)

bmw
bmw.txt
Hosted by eSnips

3)

tree
tree.txt
Hosted by eSnips


வேண்டிய அடைபலகையை தரவிறக்கம் செய்து உங்கள் Desktop'ல் சேகரித்துக் கொள்ளுங்கள்.

இனி வழிமுறைகள்:-



(Fig:1)

உங்களின் பிளாக்கர் கணக்கில் லாகின் செய்யதவுடன் வட்டமிட்ட பகுதி தென்படும் அதை அழுத்துங்கள்



(Fig:2)

உங்களின் கணக்குமுகவரி மற்றும் கடவுச்சொல்லை கொடுத்து டிக் மார்க் செய்து Continue அழுத்துங்கள்.



(Fig:3)


மேற்கண்டவாறு உங்களின் பிளாக், ஒன்றுக்கு மேற்ப்பட்டவையாக இருந்தால் அதையும் வரிசையாக காண்பிக்கும். இப்போ வேறேன்ன Continue அழுத்துங்கள்.




(Fig:4)


இப்போழுது உங்களின் ஜிமெயில் முகவரி கொடுக்க வேண்டும். முன்னாடி ஜிமெயில், பிளாக்கர்க்கு தனித்தனியே முகவரி இருந்தது, தற்பொழுது மேம்படுத்தப்பட்ட பிளாக்கர் கணக்கில் உங்களின் ஜிமெயில் ஐடியும் இணைக்கப்படும். ஆகவே உங்களின் பிரதான ஜிமெயில் ஐடி கொடுத்தால் செளகரியமா இருக்கும்.




(Fig:5)


இவ்வாறு ஒரு செய்தி வந்தெதனில் உங்களின் வலைப்பூ புதிதாக பூக்கவிருக்கிறது என்று பொருள். பூத்து முடிந்ததும் தனியாக மயில் வரும்.





(Fig:6)


முன்னாரே குறிப்பிட்டபடி உங்களின் ஜிமெயில் ஐடி இனிமேல் பிளாக்கரின் ஐடியாக இருக்கும்.





(Fig:7)


மறுபடியும் உங்களின் ஜிமெயில் முகவரி மூலம் லாகின் செய்து அடைபலகை(Template) சொடுக்குங்கள்.




(Fig:8)


கதையை படிக்க பொறுமை இருந்தால் படித்து பார்த்துவிட்டு, அடைப்பலகை மேம்படுத்தும் சுட்டியை சுட்டுங்கள்.




(Fig:9)



வரும் பக்கத்தை ஒன்றும் செய்யாமல் அப்பிடியே சேமியுங்கள்.



(Fig:10)



Upgrade Completed. என்ற செய்தி வந்து விட்டதா'ன்னு உறுதி செய்துக் கொள்ளுங்கள்.




(Fig:11)


இனிமேல் நம்முடைய தனிப்பட்ட (த.ம கருவிப்பட்டை+பின்னூட்ட ஜாங்கிரி நீக்கும் நிரலி) அடைபலகையை உங்களின் Desktop சேமித்து அதை திரும்பவும் Browse செய்து Upload செய்யுங்கள். இம்முறையும் Your changes have been saved. என்ற செய்தி வருகிறது என உறுதி செய்து கொள்ளுங்கள்.





(Fig:12)


இது புதிய பிளாக்கரின் தனிப்பட்ட அதுவும் மேம்பட்ட சேவைகளில் ஒன்று, பழைய HTML+CSS முறையில் நம்மால் Drag Drop செய்யமுடியாது, இப்புதிய சேவை மூலம் நமக்கு தேவையான தலைப்புகளில் Page Element உருவாக்கலாம்.





(Fig:13)

இப்படத்த பாருங்கள். எவ்வளவு எளிதாக element உருவாக்கலாமென்று.


புது பிளாக்கரின் மேம்படுத்தப்பட்ட சேவைகள்:-

1) எளிதான இடைமுகப்பு
2) Drog and Drop வசதி
3) பின்னூட்டங்களில் தனித்தனி வண்ணங்களாக காட்டலாம்
4) அதர் ஆப்சனில் மற்றவர் ஐடி கொண்டு பின்னூட்டமுடியாது.
5) செய்தியோடைகள் இலகுவாக இணைக்கலாம்.
6) XML கொண்டு இயங்குவதால் விரைவாக இருக்கும்
7) ஒரே சொடுக்கில் பதிவுகளை பதிவேற்றமுடியும் (single click publishing)
8) Sidebar'ல் வேண்டிய சுட்டுகளை உருவாக்கலாம்.

Thursday, January 18, 2007

மஞ்சுவிரட்டு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு கொஞ்சவருஷத்துக்கு முன்னாடி வேடிக்கை பார்க்க போயிருந்தோம். பின்னே நீயெல்லாம் என்ன மாடு பிடிக்கவா போயிருக்க போறேன்னு காமெடியெல்லாம் பண்ணபிடாது. என்னாங்கய்யா வருச வருசமும் மாடு தலை தெறிக்க ஓடி வருது ,அதுக பின்னாடி நாலு பேத்திலிருத்து நாப்பது பேரு வரைக்கும் ஓடி விரட்டுறாங்க. அதிலே யாருக்கும் பிடி குடுக்கமே ரெண்டு பேத்தயாவது கொம்பாலே குத்தி கிழிக்குது, இல்லேன்னா தூக்கி விட்டுடெறியது, இப்பிடியெல்லாம் செய்தியா டிவியிலே பார்த்திட்டு இல்லேன்னா நீயூஸ் பேப்பரிலே படிச்சு பார்த்திட்டு வீரம் பொங்கோன்னு பொங்கி என்னாடா நம்மளே மாதிரி இருக்கிற மனுசங்க தானே அந்த வீரவிளையாட்டெல்லாம் விளையாடுறாங்க.

நம்மளும் ஓரமா கொஞ்சகாணு ஒரு இடத்தே பிடிச்சு வேடிக்கை பார்த்துட்டு வந்திரலாமின்னு எங்க கோஷ்டியிலே முடிவு பண்ணி அலங்காநல்லூர்'க்கு வண்டி கட்டுனோம், அப்போல்லாம் பாண்டிய மகாராசா பேரு போட்டுதானே ஊருக்குள்ளே பஸ்ஸெல்லாம் ஓடும். அதிலே படி ஏறுற இடத்திலே கிடைச்ச இம்முனுகாணு இடத்திலே நாலு பேரு தொங்கிட்டு போனோம், மருத சனம பூராப் பேரும் பஸ்ஸிலே இருக்கிறமாதிரி பேக்கூட்டமய்யா. ஜல்லிக்கட்டு ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே ஒரு மணிநேரத்துக்குள்ளே போயி சேர்ந்தாச்சு, ஆனா அதுக்குள்ளே எங்களை மாதிரியே கொள்ள சனங்க அங்கேனே காத்து கிடந்தாங்க.



ம்ஹீம் சீக்கிரமே வந்தாச்சு, வந்ததுக்கு ஜல்லிக்கட்டை பத்தி ஏதாவது தகவல் சேகரிக்கனுமின்னு நாலஞ்சு பேத்துக்கிட்டே விசாரிச்சாம், முதலில் சிக்கினது ஒரு வயதான பெரியவர்:

"ஐயா , எதுக்கு மாட்டை துரத்திறதுக்கு ஜல்லிக்கட்டுன்னு பேரு வைச்சிங்க???"ன்னு எடுத்தவுடனே எகத்தாளமா ஒரு கேள்வி கேட்டோம், அதுக்கு அந்த பெரியவர் ஒன்னை மாதிரி எத்தனை பேரை பார்த்திருப்பேன்னு சொல்லுறமாதிரி பார்வை பார்த்திட்டு "அப்பே அது ஜல்லியில்லே சல்லி!!!! அந்தகாலங்களில் நம்ம புழங்குற காசுக்கு சல்லின்னு பேரு இருந்தாச்சு, அதே முடிப்புலே கட்டி மாட்டு கழுத்திலே தொங்கவிட்டுறுவாங்க, அதே அத்திட்டு வர்றதுக்குதானோ என்னவோ சல்லிக்கட்டுன்னு வந்துச்சு"ன்னு பதில் சொன்னாரு. "அப்பிடியா நாமேதான் சொல்வழக்கிலே சல்லிக்கட்டே ஜல்லிக்கட்டு'ன்னு சொல்லுறோமோ?? சரிய்யா அதெயென் மஞ்சு விரட்டுன்னு பேரு வந்துச்சு"ன்னு அடுத்த கேள்வி கேட்டோம்.



"ஏலே எதயும் உருப்படியா தெரிச்சு வைச்சிருக்கமாட்டிங்களா, பட்டணத்திலே இருக்கிற பயலுக பூராவும் இப்பிடிதாய்யா போட்டு கொடாய்றீங்க, மஞ்சுவிரட்டுன்னா மஞ்சின்னு ஒரு மாலை செஞ்சு மாட்டுக கழுத்திலே தொங்கவிட்டுறுப்பாக, அதே அத்தெறியிற தானாலே கூட அந்த பேரு வந்திருக்கலாம் ,ஆனா முழுசா தெரியாதுப்பே"ன்னு ஜகா வாங்கிருச்சு பெருசு. அடுத்தடுத்து அவர் சொல்லுற பதிலிலே மேலும் தெரிஞ்சுக்கிறனுமின்னு ஆர்வத்திலே நிறைய கேள்வி கேட்டோம், அதிலே இப்போதைக்கு எனக்கு ரெண்டு மூணு தான் ஞாபகத்திலே இருக்கு.



வாடிவாசல்'ன்னா மாடுக வரிசையிலே வர்றதுக்காக பிரத்யோகமா அமைக்கப்பட்ட கொஞ்சம் குறுகலான வாசல், அது முனியாண்டி கோயில் சன்னதிக்கு ஓட்டி இருக்கும், இன்னும் வாடிவாசல் பத்தி விளக்கமா சொன்னாரு நாந்தான் மறந்திட்டேன். எதுக்கு இந்த ரத்தம் பார்க்கிற விளையாட்டுன்னு கேட்டதுக்கு "தமிழனுக்கு வீரந்தாய்யா அழகு, விலை ஒசந்த சொக்கா மாட்டுனா அழகாயிருவானா தமிழன்???, தமிழன் தன்னோட வீரதீரத்தை உலகத்துக்கு நிருபிச்சு காட்டுற விளையாட்டு தான் இந்த மஞ்சுவிரட்டு பந்தயமெல்லாம்!."



அவருக்கிட்டே பேசிமுடிச்சிட்டு அங்கே நடக்கிற எல்லாத்தையும் கவனிக்க ஆரம்பிச்சோம்.மாடுகளுக்கு நல்ல அலங்காரம் செய்யப்பட்டு கொம்பை ஊசி முனைக்கு ஈடா தீட்டி செதுக்கிவிட்டுறுந்தாங்க, அதுப்போக மாடுக மேலே கலர்ப்பொடிகளை தூவி கொம்புக்கு வர்ணம் பூசி கூட்டத்திலே ஓடிவர்றப்போ அடையாளம் தெரியதுறக்காக அந்த அலங்காரமெல்லாம் உபயோகப்படும். இப்பிடியே பிராக்கு பார்த்திட்டே இருக்கிறப்போ விரட்டு ஆரம்பிக்க போகுதுன்னு சொன்னவுடனே ஓடிப்போயி ஒரு கரண்டு கம்பத்துக்கிட்டே இருந்த சின்ன இடத்திலே ரெண்டு பேரும் தொங்கிட்டே பார்த்தோம், அப்பிடியே நேரமாக நேரமாக முண்டியடிச்சு முன்னுக்கு வந்து மாடு ஓடி வர்ற பாதைக்கு முன்னாடி வந்துச்சாசு, ஆஹா நாம்மெல்லும் வீரதீரத்தே நிருபிச்சு முன்னுக்கு வந்தாச்சுன்னு நினைச்சா அதுதான் வினையே.



மாடு ஓடி வர்றப்போ தூசி அம்புட்டும் நம்மதலையிலே விழுகுது, எல்லாப்பேரும் முண்டியடிச்சு பார்க்கனுமின்னு வந்து நம்ம மேலேதாய்யா சாயறாய்ங்கே, அந்தா இந்தாதான் ஜல்லிக்கட்டு ஆரம்பிச்சதது, யப்பே என்னா சத்தம், ஆராவாரம் ஒவ்வோரு மாடும் வாடிவாசலிருந்து வெளியே வர்றோப்போ பார்க்க நமக்கு உசுரு போயி திரும்ப வருது.



ஆனா வாசலில் மேலே உடகார்த்திட்டு மாடு வெளியே வந்ததும் சடக்கென்னு கிழே குதிச்சு அது மதிலை பிடிக்க பின்னாடியே துரத்தி ஓடுறாங்ங்க, அதுக என்னாடானா மூர்க்கதனமா எல்லாபேரையும் தூக்கி எறியுதுக, கிழே விழுந்தும் நம்ம பயலுக அதுகளை விடவே கூடாதுன்னு பின்னாடியே ஓடி மறுபடியும் மதிலை தவ்வி சவாரி போறாங்க. அதிலே ஆனா அமளிதுமளியிலே எல்லாக்கூட்டமும் ஒன்னுக்குமேலே ஒன்னா விழ சாமி அன்னிக்கு உசுரு தப்பினதே பெரியவிசயம்.

Tuesday, January 16, 2007

ஜல்லிப் பதிவு

ஹீம் இன்னிக்கு நம்ம பொங்கல் அதுவுமா இங்கே பொட்டி தட்டுறே வேலைக்கு வந்தாச்சு, சரி பண்டிகை அதுவுமா வந்துருக்கோமே கொஞ்சம் நிம்மதியா இருக்கலாமின்னு பார்த்தா வேலை வேலைன்னு அதே ஆணியே இன்னிக்கும் பிடுங்க விட்டானுக. இன்னிக்கு எவ்வளோ பெரிய நாளு அதுவும் நம்மளுக்கு சோறு போடுறே விவசாயிக்கு உதவியா இருக்கிற ஜிவராசிக்கு நன்றி சொல்லுற நாளு. அதுகளுக்கு குளிப்பாட்டி நல்லா சிங்காரிச்சு கலரு பெயிண்ட்ல்லாம் கொம்புலே அடிச்சு பார்க்கவே களையா இருக்குங்க. இந்த நாளிலே அதையெல்லாம் நேரடியா கண்ணாலே கண்டு ரசிக்க முடியாமே பண்ணின எங்க டேமேஜருக்கு கண்டனங்கள் சொல்லி இங்கே ஜல்லியடிச்சுக்கிறேன்.


கிழே இருக்கிற படங்கள் இந்த இடத்திலிருந்து சுட்டது.





Monday, January 1, 2007

வாழ்த்துக்களும்,நன்றிகளும்

ஊரெல்லாம் இன்னிக்கு லிவுன்னு தெரியும், ஆனா எங்க கம்பெனி ஆளுகளுக்கு அதெல்லாம் தெரியாதாம். அதுனானலே இன்னிக்கு ஆபிஸ் வரவைச்சிட்டாங்க. சரி வருஷ பிறப்பு அதுவுமா வேலைக்கு வந்தாச்சு இன்னிக்குன்னு என்னத்தை உருப்படியா செய்யுறது யோச்சுப் பார்த்ததிலே.......

புத்தாண்டு வாழ்த்து சொல்லி பதிவே போட்டு இந்த வருசத்து நம்ம வலைப்பூ பதியும் திறமையை ஆரம்பிக்கலாமின்னு அந்த நல்ல காரியத்தையும் செஞ்சுட்டேங்க.

நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

(கொஞ்சகானு பீட்டருங்கோ)

Recipe for a Happy New Year

Take twelve whole months,
Clean them thoroughly of all bitterness, hate, and jealousy ,
Make them just as fresh and clean as possible.

Now cut each month into twenty-eight, thirty, or thirty-one different parts,
but don't make up the whole batch at once.
Prepare it one day at a time out of these ingredients.

Mix well into each day one part of faith,one part of patience, one part of courage,
and one part of work.

Add to each day one part of hope,faithfulness, generosity, and kindness.
Blend with one part prayer,one part meditation, and one good deed.
Season the whole with a dash of good spirits,a sprinkle of fun, a pinch of play,
and a cupful of good humor.

Pour all of this into a vessel of love.
Cook thoroughly over radiant joy ,
garnish with a smile,
and serve with quietness, unselfishness,
and cheerfulness.

You're bound to have a happy new year 2 00 7 .

Hey, one sec I forgot to tell u what I have done

I have opened an account for you, which will function from 1st January 2007 in the bank of blessings. I have deposited 365 days full of joy, happiness, blessings, good health and riches and above all lots of Love.

I want you to have a

Joyful January ,
Flowering February,
Memorable March,
Awesome April,
Mellow May,
Jamboree June,
Judicious July ,
August full of Amity,
Sensational September,
Outstanding October,
Noble November ,
Delightful December.




பதிவோட தலைப்பில் நன்றின்னு போட்டதுக்கான காரணம், என்னோட நந்தன் கதை தேன்கூடு போட்டியிலே நாலாவது இடம் பிடிச்சிருக்கு. பெருமை தரும் வெற்றியோடு இவ்வருடத்தை ஆரம்பிச்சாச்சு, இப்பெருமையை எனக்கு அளித்த தேன்கூடு குழுமதினருக்கும், நடுவர் குழுவினருக்கும், ஓட்டு போட்ட நண்பர்கள்,அனைவருக்கும் என்னுடைய சிரம் தாழ்ந்த நன்றிகள்.