Monday, June 26, 2006

தன்னிலை விளக்கம்

தமிழ் வலைப்பூ நண்பர்களுக்கு முதற்கண் என்னுடைய ஆத்மார்த்தமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

விளக்கம்-1

என்னுடைய உருப்படியான முந்தையப்பதிவு பற்றிய தன்னிலை விளக்கம் இது. அதில் எனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் என்று தெளிவாகவே குறிப்பிட்டுள்ளேன்.ஆனாலும் ஏதோ ஒரு நெருடலாக அந்துமணி அமைந்துவிட்டதாக பின்னூட்டத்தில் சில நண்பர்கள் கேட்டு இருந்தனர்.சின்ன விளக்கமதற்கு நான் சிறிய வயதிலிருந்து வாரமலரில் அந்துமணியின் பகுதியை படித்து வருகிறேன்.அந்துமணியின் பின்புலம்,சாதி,இன்னும் பிற விசயங்கள் எனக்கு தேவையாக தோன்றவில்லை அவரின் எழுத்துக்களை பிடித்துப்போனதற்கு.தெளிவாகவே எடுத்து சொன்னேன் என்னை பொறுத்த வரை அந்துமணி ஒரு கதாபாத்திரமென,ஆனாலும் இன்றக்கு வந்த ஒரு பின்னூட்டம் இது

ஜாதிவெறியனான என்னை சரித்திர நாயகனாக்கியதுக்கு நன்றி.

Posted by அந்துமணி

நண்பர்கள் அனைவருக்கும் சிறிய வேண்டுக்கோள் தயவுச்செய்து சாதி மத சச்சரவு வேண்டாமே.நானும் தமிழ்வலைப்பூக்களை தொடர்ந்து படித்து வருகிறேன் ஆனால் சாதி,மதம் சண்டை இல்லாத வாசபூக்களை மட்டுமே. செந்தழல்ரவியை பற்றி ஒன்று பெங்களுரில் நடக்கும் வலைப்பதிவர் சந்திப்பில் அவருடன் சண்டை போட்டுக்கொள்வதாக மிகவும் அவையடக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்

விளக்கம்-2

சும்மா ஒரு தலைப்பு கவரும் தன்மைகாக மட்டுமே ஆறுxஆறு (இதுகாவது பின்னூட்டம் போடுங்க) பெயரிட்டேன்.மற்றப்படி வேற எந்த ஒரு கீழ்த்தரமான எண்ணங்கள் இல்லை.சூடு வைத்த லக்கிலுக்கிற்கு மிகவும் நன்றி.