Thursday, August 31, 2006

புது பொட்டிங்க



பக்கத்து கேபின்காரனோட மானிட்டர் பிள்ளையார். இவருக்கு திங்கள்கிழமை சந்தனம்+ மஞ்சள் அலங்காரமேல்லாம் பண்ணிருத்தார்.



நேத்திக்கு எடுத்தபடமிது. ஓவர் வெளிச்சத்திலே ஒன்னுமே சரியா தெரியமா போச்சுங்க.
ஆனா விநாயகரோட வடிவம் மட்டும் கோட்டு ஓவியம் மாதிரி அழகா வந்திருக்கு.



திருப்பதிசாமி என்னோட மானிட்டர் மேல் வீற்றிருந்து எனக்கு அருள்பாலிக்கிறார்.



இவரு எங்களோட அறையோட சுவத்திலே இருந்து அருள்பாலிக்கும் பெருமாள்சாமி



இதை தினமும் காலையில் வந்து முழுவதும் வாசிக்காமல் ஒரு வேலையையும் ஆரம்பிரக்கிறேதே கிடையாது.




இதப்பத்தி சொல்லிக்கிற மாதிரி ஒன்னும் இல்லை... ஹீ ஹீ.



இதப்பத்தி ஒன்னே ஒன்னு இருக்கு. அது என்னான்னா தாகம் தீர்க்கும் பாட்டில்.... ஹீ ஹீ

Friday, August 25, 2006

நானும் என் (ச)முகங்களும்



மரிக்கும் மனிதங்களும், பிணம்பொறுக்கிய கொடுமைகளும்
தூங்கிஎழும் முன்னரே தலைப்புச்செய்திகளாக
செவிமடுக்கும் வேதனைகள் வேண்டாமென
உறக்கத்திலும் தொழும்கரங்கள்....!




இம்மாந்தரின் கடும்வன்மங்களும் சுடும்வசவுகளும்
தாங்கி பொறுத்தருளும் வல்லமையும்
எந்தாயிடம் உணவுவேண்டி விளிக்கும்
கண்ணீர்கோரா கலங்கிய கண்களுடன்....!




என் இணைபோட்டிதனை உருவாக்கி
அத்தொன்று பொறமைகொளச் செய்யவல்லா
உனக்குமொரு வழிதனைக் கொண்டுச் செல்லவேண்டி
உன்னைவிட உயரப்போகவேண்டியே உயர்ந்தேன்....!




பிறரிடம் தவறுகளும் வலிகளும் தரச்செய்யும்
கடுமை நிறைந்த போக்குகளுமாகிய
கறைபடிந்த வதனமாய் பெற்றோனோ
வாழ்வோட்ட காலவெளியில்....!




வானவீதிகளிலேயே திரிந்தலையும் கடவுள்களையும்
மண்வீதிகளில் வேடமணிந்த மனிதர்களையும்
எதிர்கொள்ளும் திறம்வேண்டும்
முன்னதை ஆவலுடன் பின்னதை வெறுப்பென....!




எல்லைக்கோட்டமையா வக்கிரகோரங்களும்
நிலைகுலைக்கும் கேடுதருணங்களும்
என்னுளும் எனைச்சார்ந்த வழிமக்களிலும்
களையகோரும் ஆற்றல்வேண்டி என்னின் சிந்தை....!

Thursday, August 17, 2006

எஸ்.கே. அவர்களின் கவனத்திற்கு

திரு.எஸ்.கே ஐயா அவர்களுக்கு என்னுடைய முதற்கண் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய முந்தைய கவிதை பதிவில் பிழைகளை சுட்டிகாட்டியதற்கு. உங்களின் பெரிய மனது என்னை நிலைகுலைய வைக்குதய்யா. தாங்கள் எங்கே.. அற்பன் நான் எங்கே,
நீங்கள் வந்து என்னிடம் மன்னிப்பு என்ற வார்த்தையை உபயோகபடுத்தலாமா..?

நான் வெள்ளிக்கிழமை திருப்பதி போற அவசரத்தில எதையும் உருப்படியாக செய்யாமால் போய்விட்டேன். முதலில் பிரிவாற்றண்மை'னு தலைப்பு வச்சிட்டு அதுல கால் மிஸ்ஸாடுச்சின்னு கப்பி சொன்னவுடனே திரும்ப தலைப்பை மாற்றினேன்.

தரிசனம் முடிந்து சொந்த ஊர் மதுரைக்கு சென்றுவிட்டேன். அதன்பின் அதற்கு வந்த பின்னூட்டங்களை நான் பார்க்க முடியவில்லை. நீங்கள் இட்ட பின்னூட்டத்தை திங்கள்கிழமை அன்றே நான் பார்க்கநேரிட்டது. ஆனால் அந்த இடத்தில் Unicode எழுத்துகள் சரியாக தெரியவில்லை.ஒரு பின்னூட்டம் நீங்கள் இட்டது என்பதனால் படிக்கமாலயே பிரசுரித்தேன்.

புதனன்று ஆபிஸ் வந்து பார்த்தப்பதான் முழுவிபரங்களும் தெரிந்தது. தாங்களின் பரித்துரைகளை உடனே நிறைவேற்றி விட்டேன். முக்கியமான ஒன்றான தலைப்பை மாற்றவேண்டும் என்பதனால் தமிழ்மணத்தில் சென்று தலைப்பை மாற்றக்கோரி விண்ணப்பமிட்டேன். இதுவரையில் எனக்கு எதுவும் தகவல் வரவில்லை.

இவ்விளக்கங்கள் உங்களிடம் தனியாக சென்றடைய தாங்களின் மின்னஞ்சல் முகவரி என்னிடம் இல்லை. ஆகவே இதையே பதிவாக இடுகிறேன்.

வேல்தாங்கி அருள்பாலிக்கும்
என்னப்பன் முருகனின்
புகழ்பரப்பும் தாங்களின்
கரங்களை பற்றியெடுத்து
நன்றிதனை நவில்கிறேன்.
தாங்களின் இருப்பிடதிசை
நோக்கி மெய்நிகராய்.

Friday, August 11, 2006

பிரிவாற்றாமை



பிரிவுறுவலி நீங்க உணர்வுகள் பிரவாகமெடுத்து
உன்னை இறுக்கி அணைக்கத் துவங்குகிறேன்...
ஆனால் உந்தன் உணர்வுகள் உணர்த்தியது என்னுள்
மகவை அணைக்கும் தாயென...!




பிரிவுற்றவேளைகளில் என் நினைவுறுத்தவேண்டி
என்ன செய்வாயென கேள்விதொடுத்தாய்..?
உன் புகைபடமென்றேன் நான்,
நீயோ உன்னுடைய நகக்கீறல்கள்
எனபதிலுறுத்தாய்...!





கடிதங்களிலும்,கைப்பேசியிலும்
கவிதைகளாய் எழுதித்தள்ளுகிறாயே என
உன் வினாவிற்கு பகிரங்கமான விளக்கம் இது...

மானசீகமாய் கடவுளைத் தொழவேண்டி
ஜபிக்கும் பக்தர் வகையறாக்களில்
நானும் ஒருவன் தான்....!





கிள்ளைமொழி பேசிக் கொல்லும்,
கிளியொருத்தி குரலை கேட்டு கிளர்வுற
தொடர்புறுகிறேன்.....!
கிடைக்கும் சில மெய்நிகர் முத்தங்கள் எனக்கு...
இன்னும் சில கவிதைகள்
வாசிக்கும் உமக்கு....

Friday, August 4, 2006

கவிதையாய் கைப்புள்ளை காவியம் (101 வரிகளில்)

திக்கற்ற கட்டிட காடுதனிலமர்ந்து
கணினியென்னும் அடிமையை
ஏவல் செய்யும்
விழிகருக்கும் பணியில்
புத்துணர்வு திரும்பவேண்டி
வலைபூக்கள் சொரிந்த
சாலைகளில் பயணிக்கும்
பயணிகள் அனைவருக்கும்
தாய்மொழி தங்கதமிழில்
சிரிப்பு தரவேண்டி சங்கமென்றை
கண்டளித்தாய் எமக்கு
செந்தமிழில் பெயரிட்டாய்
வருத்தப்படாத வாலிபர் சங்கமென..

கைப்புள்ளயெனும் தானே
தலைவர் எனறிவித்து
அடிவாங்கும் உன் திறமைதனை
பலவகைகளை கண்டறித்தாய்
உன் திறமையின் விளைவுகளின்
விளைவாக விளைந்த
விழுபுண்களில் சாய்ந்து
விழுந்திராத விழாநாயகனான
உன்னைப்போற்றி கவிஎழுத
மின்மடலில் வினவினேன்...!

பதிலுற்றாய் விதிமுறையோடு
அதை வாசித்தால் நகைச்சுவை
மிளிரவேண்டுமெனவும்
வாசிக்கும் நெஞ்சங்கள்
சிறிதளவேணிணும்
புண்பட்டிட கூடாதென
இவ்வாறே உன்னுள்
வியாபித்திற்கும் தலைவனுக்கே
உரித்தாகும் சீரியபண்பு...?

அந்தூர் எந்தூர்
இந்தூரில் வசித்தாலும்
மாசுமருவற்ற தங்கதலைவனான
உன் திருமுகம் மனகண்ணில்
நிறுத்திட வரம்வேண்டி
நிழற்படம் வெளியிடகோரலாம்
தினமும் தரிசிக்கும்
பாக்கியம் பெற்றவர்
கழிக்கவேண்டும் திருஷ்டி
ஆகவே வேண்டாம்..

உன்னை வாழ்த்திட
பத்துவரியை மனதிலுறுத்தி
எழுத தொடங்கினேன்
அனுமார் வாலென
நீட்டித்தது உந்தன்புகழ்
எப்படியும் நிறைவுறும்
நூறாவது வரிகளின் இறுதியில்...!
சங்கத்தின் நூறாவதுநாள்
உந்தன் புகழ்பாடும்
பதிவுகளின் கணக்கு நூறு
அன்னியமொழி சேரும்
அச்சமேனே எனகருதி
தமிழில் உரைக்கிறேன்
இதொரு உடன்நிகழ்வுசெயல்

வாழ்த்தி உரைத்து
முடிக்கிறேன் இவ்வரியை
தொடங்கலாம் கலாய்க்கும்திணைதனை...

உதார்விடும் உன்னழகில்
கவரப்பட்ட இரும்பாய்
கழக கண்மணிகளின்
ஆதரவுகரங்கள் எண்ணிக்கை
கடல்தாண்டியும் செல்லுமெனில்

இளமாய் மிதமாய்
அடிகள் இடியென
விவாயத்திலும் விழுமோ
வெடிகுண்டுகள் அழிக்கும்
சிவம்தனிலும் பிரதிபலிக்குமோ
தேவகானங்கள் இயற்றும்
அரசவை கவிஞனுக்கும்
விழுமோ உன்மாதிரி...?

மண்ணின் மைந்தன்
பாண்டிய அன்புசெல்வன்
வில்லாய் வடிக்கும்
வீரதிருமகன் வாங்கும்
அடிகள் உன்னளவில்
சற்று குறையே...!
நீர் பெற்றதை பகிர்ந்தளிக்கும்
மனபாங்கு சிபிமன்னனிடம்
கிடையாதென்பது திண்ணம்....!

மக்கள்படை மாத்திரமே
சார்ந்ததல்ல உந்தன்பாசறை
களிறுபடையும் கப்பற்படையும் சேர்ந்தே
பொன்னெ மிளிர்கின்றன....!

திங்களொரு ஒன்றுமறியாமானுடர்
உன்னவை வரப்பெற்று
பரிசில்கள் பலபெறுவார்யென....!
உள்ளவாகை மிகுதியில் வந்து
அம்மானுடர் பெற்றுசெல்வது
ஆப்பசைத்த மாருதியின்
இலவச ராசனுபவங்கள்...!

சிரிப்பன்பதை மட்டுமே கொள்கைகொண்ட
இவ்வரசவை வாழுமெனில்
கவிதனை முடிவுற விளைகிறேன்
மனதில் தொங்கும்வினாவுடன்

சச்சரவுகளில் பயணிக்கும்
பயணிகள் அனைவருக்கும்
சுயவெறுப்புகளை கடந்து
ராஜபாட்டையில் வரவியலுமாயென...........?????

கைப்புள்ள கிளம்பு உன்வேட்டைக்கு
காத்திருக்கிறோம் நாங்கள்
நீ வாங்கிவரும் குச்சிமிட்டாயிக்கும்,குருவிபொறைக்கும்.... :-)