Wednesday, October 10, 2007

குட்டி சாத்தான் தொல்லை.....

குட்டிச்சாத்தான்னா என்னான்னு இன்னவரைக்கும் நாமெல்லாம் கண்ணாலே பார்த்தது இல்லலே... நாங்கெல்லாம் ஒன்னோட போட்டோ பார்த்துட்டோமின்னு சொல்லி சிரிக்கிறது தெரியுது, அப்பிடியெல்லாம் பச்சப்புள்ளய நக்கல் பண்ணப்பிடாது. ஆமாம் நீங்க கேள்விக்கேட்க வர்றது புரியுது, இன்னிக்கு நான் பச்சை சட்டைதான் போட்டுருக்கேன். வருசா வருசம் வர்ற வாலெண்டெஸ் டே'க்கு போட்டும் பார்த்தாச்சு, ஒன்னும் நடத்தமாதிரி இல்ல, இன்னிக்கு பச்சைச்சட்டை போட்டு என்னத்த ஆகப்போகுது? பேக் டூ த டாபிக். வாழ்க்கையிலே ஒரே ஒரு தடவை படிச்ச எட்டாவது வகுப்பு முழுப்பரிட்சை லீவு'ப்போ கண்ணாடி போட்டு படம் பார்க்கனுமின்னு சொன்ன முத்துக்குமாரை இழுத்துக்கிட்டு அபிராமி தியேட்டரிலே பார்த்த குட்டிச்சாத்தான் படம். அதுக்கு இப்போ என்னாடா'ன்னு கேட்கீறிங்க? புரியுது! மொக்கைன்னு லேபிள் போட்டோமில்ல இன்னும் இழுப்போமில்ல.

அந்த படத்திலே வர்ற பசங்கிட்டே குட்டிசாத்தான் எந்தமாதிரி நான் வரனுமின்னு கேட்க அவங்க அப்பா வரைஞ்ச படத்திலே இருக்கிறமாதிரி சொல்ல அதை மாதிரி வருவான். இப்போ நாமே எல்லாமே கேட்கமே இன்னொரு குட்டிச்சாத்தான் நம்ம கையிலே உட்கார்ந்து கிடக்கு. அதுதான் கருமம செல்லுபோனு. அய்யோ அதை வைச்சிட்டு நம்மளுக பண்ணுற அலப்பறை நொணநாட்டியம் இருக்கே. கொஞ்சவருசத்துக்கு முன்னாடி கன்னத்திலே கை வைச்சிக்கிட்டு போஸ் கொடுத்தவர் கூவி வித்த ஐநூத்துஒன்னுக்கு ரெண்டு செல்'ஐ வாங்கிட்டு அவனுக்கு ஒன்னு அவன் ஆளுக்கு ஒன்னுன்னு கொடுத்து ஒரே கடலை வருகல்தான். அப்போயும் நானெல்லாம் ஒரே ஒரு போனை தாங்க வைச்சிருந்தேய்ன், ஹிம் இன்னவரைக்கும் அதே கதைதான்.

இத்தாலிலே இருக்கிற சாய்ஞ்ச கோபுரம் மாதிரி கோணிக்கிட்டு தலையை வைச்சிட்டு ஊருக்குள்ளே திரியுறானுக, நடந்துட்டு போறவன் கூட ஸ்டைலுக்கு தோள்பட்டையிலே மொபலை வைச்சிட்டே தலையே சாய்ச்சிக்கிட்டே பேசிட்டு போறானுக. கொஞ்சவருசத்துக்கு முன்னாடி மதுரையிலே குப்பை கொட்டிக்கிட்டு இருக்கிறோப்போ அப்பாகிட்டே அழுது பிடிச்சி எப்பிடியோ ஒரு மொபைல் வாங்கியாச்சி, அதிலே எப்போ ரிங் அடிச்சாலும் இவருக்கு கோவம் பொத்துக்கிட்டு வந்துரும். ஏண்டா என்னிக்காவது அதை உருப்படியா உபயோகப்படுத்திக்கிறியா? எப்போ பாரு, அதிலே வெட்டிப்பயலுக தான் பேசுறானுக, எழவு நீங்க என்னத்ததான் பேசி தொலையிறீங்கன்னு பிடிப்பட மாட்டங்கிதுன்னு பொலம்புவார்... ஹி ஹி அவருக்கு புரியுறமாதிரி பேசுனுமின்னா இந்த வார கடைசியிலே பெரியார் பஸ்ஸடாண்ட் கடைக்கு வந்துரு, LTC'க்கு மதியம் வந்துருன்னா பேசமுடியும். எல்லாமே கோட் வேர்ட்ஸ்தான். இப்போ போனவருஷத்திலே இருந்து அவரும் ஒரு மொபலை வாங்கி வைச்சிட்டுருக்காரு. அதிலே என்ன ஐ.நா சபை செயலாளர்க்கு அறிவுரை எதுவும் சொல்லுவாரு போலே'ன்னு பார்த்தா, பாலண்ணே, சின்னக்கடைதெரு வெண்மணிக்கு வந்துருங்க, டீ சாப்பிடலாம்,'ன்னு தான் மொக்கை போட்டுக்கிட்டு இருக்காரு. எல்லாம் காலம் செய்த கோலமின்னு பாட்டுதானே அங்கன பாடமுடியும்.

போன் மொக்கைனதும் நம்ம சோட்டு பய ஒருத்தன் ஞாபகம் வந்து தொலைக்கிது, பயலுக்கு சோறுதண்ணி எதுவும் வேணாம், சும்மா தொணதொண'னு அதிலே பேசிட்டே இருந்தா போதும் அதிலே பசியாறி தூங்கவும் செஞ்சு தொலைப்பான். நாமெல்லாம் நைட் தூங்குறப்போ என்ன செய்யுவோம், பெட் பக்கத்திலே குடிக்க தண்ணியும், அலாரம் கிளாக்'ம் எடுத்து வைச்சிட்டு தூங்குவோம், இந்த பயப்புள்ள மொபலை சார்ஜ் போட்டுட்டு, அதிலே கார்ட்-லெஸ்'ஐ எடுத்து காதிலே மாட்டிக்கிட்டு யாருக்காவது மிஸ்டு கால் கொடுத்து தொலைப்பான். மிஸ்டு கால் கொடுத்த பல பேருலே ஒருத்தன் இவனுக்கு கால் பண்ணா போதும், அவனுக்கு பிடிச்சது வினை. இந்த வெளக்கெண்ணே தூங்குறவரைக்கும் அந்த எதிராளி பேசனும், அவன் எதாவது சொல்லி கட் பண்ண போதும், டேய் டேய் இருடா, இன்னிக்கு எங்க ஆபிஸிலே ஒரு ஃபிகரு, கலருன்னு அவனை உசுப்பேத்தி விட்டு இது நல்லா குளிரு காயும், கடைசியா தூக்கம் வந்ததும் ஒன்கிட்டே ஏதோ ஒன்னு சொல்லனுமின்னு நினைச்சிட்டு இருந்தேன், தூக்கம் வேற வருது சரியா ஞாபகம் வரமாடேங்கிது, கோவிச்சிக்காமே நாளைக்கு காலையிலே போன் பண்ணுறீயா'னு பிட்ட போட்டு தூங்கிருவான். ஒனக்கு எப்பிடிடா இதெல்லாம் தெரியுமின்னு கேட்கிறீங்க ? எம்புட்டு கேள்விதான் கேப்பீங்களோ? ஹிம் டெய்லி அவரு பள்ளி கொள்றோப்போ போன் பண்ணுற கேனை நாந்தான். அவனும் பேசிட்டுதான் இருக்கான். அவன் ஆபிஸ் ஃபிகரை தான் இண்ட்ரோ பண்ணி விடமாட்டேன்கிறான்..........

விவாஜி'க்கு எதிர் கவுஜை....


இன்னல இருந்து உனக்கு குருப்பார்வைன்னு
தெரு முக்கு ஜோசியர் சொன்னாரு!
நம்ப மறுத்த என்னோட பிடிவாதத்தை
அன்னிக்குதான்டா அதையே தளர்த்திக்கிட்டேன்!

நீ நம்ம தெருவிலே குடியேறின முதல் நாள்
என்னோட நண்பனா மாறிட்டே!
என்னோட கடங்கார அட்டையெல்லாம்
எடுக்க விடாமே நீயே காசு கொடுத்துட்டே!

பாட்டில் ஓப்பன் பண்ணும்போது மட்டும்
உனக்கு எப்பிடியோ மூக்குக்கு மேலே கோவம் வந்திருது!
இருக்கிற எதையும் குடிக்கவிடாமே செய்யற
ஒன்னாலே எனக்கு மண்டை காயுது.

டீ கடைக்கு நான் போறத
யார் சொல்லாமலும் உனக்கு எப்பிடி தெரியுது?
தங்கராசா வடிகட்டி வாங்கினா மட்டும் நீ இப்பிடி
டென்சன் ஆகுறேன்னு எவனுக்கும் தெரியாது.

சம்பள நாள் வந்தா கவரு வருதோ இல்லியோ!
ஆபிசுக்கு சிரிச்சிகிட்டே வந்து ஸ்டைலா நிப்பே!
மாசத்திலே கொஞ்சமாவது சேமின்னு
யாரும் சொல்லாத அட்வைஸ் பண்ணிட்டு போவே!

சுனாமி வந்து ஊரையெல்லாம் தூக்குச்சு
உனக்கு ஒன்னும் ஆகலைன்னு போன் பண்ணி கேட்டே?
கழுதையா பார்த்தா யோகமாம், ஊருலே சொன்னாங்க!
உன்னை நண்பனை அடைச்ச நான் யோகவந்தாண்டா!

உன் நட்பு வேணாமின்ன யாரும் சொன்னா?
சொன்னவன் திரும்ப வருவான்னு போடுவேன் எங்க வீட்டுக்கு பெரிய "Gate"டா!
இந்த வருசம் ஆகஸ்ட் பர்ஸ்ட் விக்கெண்ட்'லே
வைப்ப்போம் ஊருக்கெல்லாம் பெரிய ட்ரீட்டா!


விவாஜி எதிர்மறை கவுஜை