Friday, September 29, 2006

பேய்....! பிசாசு...! ஆவீ...!

முணு நாலு வருசத்துக்கு முன்னாடி நடந்த சம்பவம் இது. கொஞ்சம் பயங்கரமான சமச்சாரம் வெறேங்க, அதனாலே பொறுமையவே படிங்க.

அப்பதேய்ன் குஷி படம் ரிலிஸ் ஆகி இருந்த சமயம், , இன்னிக்கு இந்த படத்தே பார்த்திராலாமின்னு அதுவும் ஞாயித்துகிழமை அதுவுமா நைட் ஷோவுக்கு நானு எங்க கோஷ்டி மொத்தம் ஆறுபேரு சகிதம் கூட்டமா கிளம்பி போனோம். போறேப்பவே ஏரியாக்குள்ளே ஏய் இங்கே பாரு போறமில்லே போறமில்லே... நைட்ஷோ பார்க்கப்போறமில்லேன்னு சத்தமா சவுண்ட் விட்டுக்கிட்டே வந்தான் பிரண்டு கணேசன்.. ஒரே சத்தமா கத்தி பத்துமணிக்கெல்லாம் தூங்கப்போறவய்ங்களெல்லாம் வெறுப்பேத்திட்டு தான் அந்த இடத்தே விட்டு கிளம்பிப்போனோம். பல பேரு வெளியே வந்து புலம்பிட்டுதான் போனாய்ங்க... அதிலெ ஒருத்தேய்ன்.

நிர்மல்:- "ஏலேய் உங்களுக்கு டிக்கெட்டே கிடைக்காதுங்கடா... போயிட்டு சும்மாதான் வரப்போறீங்க... தொலைஞ்சுபோங்கடா நீங்க திரும்பிவர வரைக்கும் இந்த ஏரியா கொஞ்சம் நிம்மதியா இருந்தா சரி.... "

கணேஷ்:- "ஆமாப்பா கலியுலக முனிவரு சாபம் விட்டாருடோய்... போடி போ போயி கவுத்தடிச்சு படு செவனென்னு, ஏலேய் நிருமலா நாளைக்கி நீ வேலைக்கு போயீ கழட்ட போகணும், எங்களுக்கு தான் அதில்லே அதுனாலேதான் நைட்ஷோ போறோம்....அப்புறம் மச்சான் வா தம்மடிக்க போலாமினு சாயங்காலம் கூப்பிடுவேல்லே அப்போதைக்கு பார்ப்போமிடி உன்னோட சாபத்தே..."

நானு:- "டேய் கணேசா ஏண்டா இந்த சவுண்ட் தேவையா... பேசமா வாடா, இப்போ யாரு கேட்டா நீயும் அவனும் தம்மடிக்கிற மேட்டரை.. சும்மா வாடா எங்கப்பா காதிலே விழுந்தா நானும் தம்மடிக்கிறேன்னு..நாளைக்கி என்னையே பெல்ட்'லே அடிப்பாருடா..... "

சங்கர்:- "டேய் ராமா உனக்காச்சிம் பரவாயில்லே.. உங்கப்பா உன்னையே வீட்டுக்குள்ளே வச்சு வெளுப்பாரு.... எங்க நைனா நடுரோட்டிலேயே ஓட ஓட விரட்டி அடிப்பாருடா...... "

கணேஷ்:- "தொடநடுங்கி பயலுகளா... ஏண்டா அப்பாவுக்கெல்லாம் இப்பிடி பயப்பிடிறீங்க.... உங்களுக்கெல்லாம் உங்கப்பாவே எப்பிடி வளர்க்கமின்னுத் தெரியலே... இப்போ என்னை எடுத்துக்கோ, நான் எப்பிடி வளர்த்துக்கிறேன் பாரு, நான் என்னா சொன்னாலும் சரின்னு கேட்பாரு எங்கப்பாரு..... "

நானு:- "உன்னைமாதிரி வீம்புக்கு விளக்குமாத்திலே அடிவாங்குற ஜோலி எங்களுக்கு வேணாமிட்டோய், ஆனா எதுக்கு போனமாசத்திலே ரெண்டுவாரம் உங்க அக்கா வீட்டுலே போயி கிடந்தே, பாண்டியமன்னன் திருச்சி உறையூருக்கு பட்டணபிரவேசம் போயிருந்தாரா... நீ மொத்து வாங்கீ ஊருக்கு ஓடிப்போனது நம்ம முக்குச்சந்து குஞ்சுகுளுவானுக்கும் தெரியுமிடா.... உனக்கு இந்த வாயி மட்டும் இல்லே, அந்த மணிநாயி கூட மதிக்காது..... வா செவனென்னு..."

வினோத்:-" நல்லா கேளு மாமா... நேத்திக்கு சின்னகடை தெருவுலே டீ குடிச்சிக்கிட்டு இருக்கிறப்போ இந்தபய வந்து என்னாடா ஊமையா உனக்கு குழந்தை பொறந்திருக்குன்னு சொல்லவே இல்லேன்னு எதிர்தாப்பலே நின்னுக்கிட்டு இருந்த என்னோட ஆளுக்கு கேட்கறமாதிரி சவுண்டுவிட்டான் செங்ககாட்டான்..!"

நானு:- "டேய் அடங்குடா.... உங்க ஆளு..அய்யோ கேட்கவே கொடுமைடா... ஏலேய் கணேசா வா பேசமே, பாரு ஊமையன் கூட சவுண்டுவிட ஆரம்பிச்சிட்டான்.... நாமேதான் படம் பார்க்கப்போறோம்... ஊருகாரயங்களுக்கு நம்மை படத்தை பயாஸ்கோப்பிலே காட்ட இல்லே...!"

வினோத்:-" டேய் அவனவன் காதல் பண்ணிபாருங்கடா... அப்போ தெரியுமில்லே, நாங்க படற அவஸ்தையெல்லாம்..!"

கார்த்திக்:-" அப்பா சாமிகளா தியேட்டர் வந்திருச்சிடா, மொக்கயனை முன்னாடிப்போய் டிக்கெட் எடுக்க சொன்னோம், எடுத்தானான்னு தெரியலெ..."

சரவணன்: - "டேய் பசங்களா, ஆறுப்பேத்துக்கும் டிக்கெட் எடுத்தாச்சிடா.!வாங்கடா உள்ளுக்க போவலாம். "

படம்மெல்லம் நல்லாதான் இருந்து ஒருபய கூட தூங்ககொள்ளமேதான் வெளியெ வந்தோம். அது ஞாயிற்றுக்கிழமைனலே சாதாரணமாகூட திறந்து இருக்கிற கடைகண்ணி எதுவுமே இல்லெ, அதுவும் மணி ஓன்னறையா ரெண்டொன்னு மறந்துப்போச்சு. அமிர்தம்,மீனாட்சி தியேட்டர்லே இருந்து தெற்குவெளி வீதி வரைக்கும் கொஞ்சகூட்டம் எங்ககூட வந்தாங்க. அதுக்கப்புறம் நாங்க மட்டுந்தேய்ன் நடந்துப்போறோம், ரோட்டிலே.... எங்க காலடி சத்ததை மீறீ ஒரு சத்தம் கேட்குது எல்லா பய காதுக்கும். டைமிலே எல்லாரும் திரும்பிப்பார்த்தோம் யாராவது பொம்பளையாலு யாராச்சிம் வர்றாங்களான்னு.... ஒருத்தரையும் காணோம்... லேசா பயம் அடிவயத்திலே இருந்து கிளம்பி ராக்கெட் கணக்கா ஜிவ்வ்ன்னு மேலே நோக்கி தொண்டை வழியா அம்பூட்டு பேருக்கும் பேசறேன்னு சொல்லி காத்தா வருது.



நானு:- "டேய் சனிபயலுவலா.... பயமுருத்தினுமின்னே எவனாவது கொலுசே பைலே போட்டுக்கிட்டு சேட்டை பண்ணிருக்கீங்களா... சொல்லீருங்கடா பயமாஇருக்கு, ஏலேய் கணேசா ஒன்னோட வேலைதானா இது.? "

கணேஷ்:-" இல்லடா...நான் எதுக்கு செய்யபோறேன் இந்தவேலையெல்லாம்......நேத்து ராத்திரி HBO'லே பார்த்தா பேய் படமெல்லாம் ஞாபகம் வருதுடா எனக்கு."

சரவணன்:- "டேய் நீங்க ரெண்டுபெரும் பேசறப்போகூட அந்த ஜல்ஜல்ன்னு சத்தம் கேட்டிச்சுடா.! "

வினோத்:- "அடேய் இப்போயும் கேட்குதுடா, போறப்பவே எங்க அம்மாச்சி சொன்னுச்சு, ஏண்டா பார்த்து சூதனாமா வந்துசேருடா, இங்கே பாரு நாமெல்லே போயீ பேய்,பில்லி,சூனியத்தோட சேர்ந்து வர்றோம். "

நானு:- "ஊமை செவன்னெனு வாடா. இங்கே பாரு கார்த்தியும், இந்த சவுண்டன்(கணேஷ்)னும் விட்டா இங்கே ... போயிருவானுக போலே... "

சங்கர்:- "கிளம்புறநேரத்திலே கொஞ்சநஞ்சமா பேசினே சவுண்டா... இப்போ பேசுடி கண்ணு,இப்போ பேசு....? "

கணேஷ்:- "டேய் சங்கரா ஏண்டா இந்த மொக்ககுத்து குத்துறே.... விடுடா, இங்கே பாரு நானும் நாலு வார்த்தை பேசலாமின்னு பார்க்கிறேன், ஒன்னுஒன்னா அதுவும் காத்து காத்தா வருதுடா, என்னோட சட்டைவேட்டியெல்லாம் நனைச்சு போச்சுடா.! "

நானு:-" சவுண்டா உன்னோட சட்டை நனைஞ்சது சரி, வேட்டி எப்பிடிரா நனைச்சு போச்சு... அப்புறம் நம்மகூட வர்றது பொம்பளை பேயின்னு நினைக்கிறேன், கொலுசு சத்ததேன் கேட்குது! "

கார்த்திக்:- "ராமா இந்த ஆராய்ச்சிகேள்வி தேவைதானா இப்போதைக்கு..? "

சரவணன்:- "ஆமாண்டா அவனவனுக்கு அவன் உசுரு மேலேயும் கீழயும் போயி வந்து இப்போ பேசுறெப்போ தொண்டைகுழியிலே எட்டிப்பார்க்கிது. இவியங்களுக்கு ஆராய்ச்சியெல்லாம் பண்ணச்சொல்லுது இந்த நேரத்திலே, "

சங்கர்: - "டேய் இங்க பாருங்கடா அமிர்தம் தியேட்டர் நம்ம வீட்டிலே இருந்து பத்துநிமிசம் நடைதான்.... ஆனா பயத்திலே இப்போ அந்த முக்குலே இருந்து இங்கே வர்றதுக்கு ஒருமணிநேரம் ஆனா மாதிரி இருக்கு.... இன்னும் ரெண்டு சந்து போகணுமிடா, இப்போ ஈரக்கொலைலே என்னோமோ புடுச்சு ஆட்டுறமாதிரி இருக்குடா..! "

நானு:-" டேய் ஒன்னு பண்ணுவோமா.... பேசமே ஓடுவோமாடா இங்கெயிருந்து... நடக்க நடக்கதானே நம்மக்கூட அந்த சத்தம் வருது... !"

ஓடியே எங்கதெருமுனைக்கு வந்துட்டோம், ஆனா அந்த சத்தம் நிக்கலே.... இங்கே இன்னோரு வினை ஆரம்பிச்சது, ஊருக்குள்ளே இருக்கிறே அம்பூட்டு நாயும் அங்கேனேதான் கிடந்துச்சுக, நாங்க ஓடி வந்தவுடேனே என்னோமோ வேத்துகிரகத்திலே இருந்து வந்தக மாதிரி தொரத்துக அம்பூட்டு நாயிகளும் எங்களை, ஓடினாதானே கொரைக்குதுன்னு மெதுவா மறுபடியும் நடக்க ஆரம்பிச்சோம், பேயிக்கிட்டே தப்பிச்சு நாயிக்கிட்டே மாட்டிக்கிட்டே கணக்கா சேர்த்துதான் மறுபடியும் கொரக்க ஆரம்பிச்சதுக, அப்போ ஒரு அதிசயம் நடந்த மாதிரி எங்க தெரு மணி நாயி சத்ததே கேட்டு ஓடி வந்துச்சு, அதுக்கு நாங்க பிஸ்கெட்ட்ல்லாம் வாங்கிப் போட்டுறதினாலே ஒரு சவுண்ட் விட்டுச்சு, அந்த எபக்ட்க்கு எல்லா நாயிகளுக்கும் ஓடிப்போயிருச்சுக,

நானு:-"அப்பா சாமி மணி நாங்க வாங்கி போட்ட பிஸ்கெட்டுக்கு ஒரு உதவி பண்ணியே, அப்பிடியே எல்லார் வீட்டு வரக்கும் வந்து ட்ராப் பண்ணிட்டு போயிரு..!!!"

கணேஷ்:- "ஏலேய் யாருகூட பேசிட்டு வர்றே நீயீ.. ??"

நானு:- "நம்ம கொலச்சாமி மணிக்கிட்டே!!"

கணேஷ்:- "அதுச்சரி நாயிக்கெல்லாம் பேசிக்கிறீங்களா..பேசுங்க பேசுங்க.. இன்னும் பாரு அந்த ஜல்ஜல் சத்தம் கேட்குது.. இந்த மணிநாயி வந்தும் கேட்குதினா எவன் ரத்தம் குடிக்க பின்னாடி வருதுன்னு தெரியலே.. ??"

சவுண்டன் பேசி முடிக்கிறக்குள்ளே மணி அவன் காலே கடிச்சிட்டு ஓடிப்போயிருச்சு, என்னா பிரச்சினையோ அவங்க ரெண்டு பேருகளுக்குள்ளே, என்னா சண்டைன்னு கூட தெரியலே.. அதுக்கப்புறம் அந்த பயலே இழுத்துக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடி அவங்க வீட்டுக்கு போயி தகவல் சொல்லி முடியறதுக்குள்ளே விடிஞ்சுப்போச்சு.

ஆனா விடியறவரைக்கும் விடாமே திரும்ப திரும்ப ஜல்ஜல்ன்னு எல்லா பய காதிலேயும் கேட்டுக்கிட்டேதான் இருந்திச்சு.

Monday, September 25, 2006

நல்லவேளை இன்னிக்கு திங்கட்கிழமை

நல்லவேளை இன்னிக்கு திங்கட்கிழமை, அதனாலே கொஞ்சமாச்சிம் வேலைய பாருங்கப்பா, கிழே இருக்கிற படங்களையெல்லாம் பார்த்துப்பிட்டு மளமளன்னு வேலைகளை தொடங்குங்க.......


































































Feeling like this as today is Monday.







Cheer up and enjoy your work.

Tuesday, September 19, 2006

நான் ஏன் மாத்தினேன்னா

இதுவும் நான் எப்பவும் எழுதுறமாதிரி சுயபுராணந்தான். அதுவும் பெரிய சோககதை வேறங்க. என்னா நாங்க உன்னோட பதிவு படிக்கிறதே ஒரு கொடுமையான சோகம்தான்னு யாருப்பா புலம்புறது. அப்பிடியெல்லாம் பேசப்பிடாது, நாளப்பின்னே வந்துப் போற இடமா இல்லயா, நான் வேற உங்க பதிவுக்கெல்லாம் வரணுமா இல்லியா, அதுனாலே என்னாடோ சோகத்திலே நீங்களும் இப்போ கலந்துகங்க, அப்புறமா உங்களுடோதே எடுத்து விடுங்க, நானும் வந்துக்கிறேன். இதத்தான் வள்ளுவரய்யா என்னா சொல்லிருக்காருன்னா....

"நகுதற் பொருட்டுஅன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு."

குறளிலே இருக்கிறமாதிரி உங்களோட கருத்தே சொல்லிவீங்கன்னு நினைக்கிறேன். சரி இவ்வளவு பில்டப் போதும், விஷயத்துக்கு வர்றேன். ஒரு விஷயம் உங்களுக்கெல்லாம் ஆச்சரியமா இருந்திருக்கும், என்னாடா திடீரென்னு ப்ரொப்பல் போட்டோவே மாத்திடானேன்னு....!?

நானும் என்னோட பிரண்டும் கொஞ்சநாளைக்கி முன்னாடி பெங்களூரு போர(Forum)மில்லே இருக்கிற லேண்ட்மார்க்கில்லே புத்தகம் வாங்கலாமின்னு போயிருந்தோம். நாங்கல்லாம் எப்போ அங்கே போனால்லும் தமிழ்புத்தகங்கள் இருக்கிற பக்கத்திற்குத்தான் போறது. அதுக்கு என்னா காரணமின்னு நான் சொல்லமே உங்களுக்கு ஏற்கெனவே தெரியுமின்னு நினைக்கிறேன். அன்னிக்குன்னு பார்த்து பொன்னியின் செல்வனோட இங்கிலிபிஸ் பதிப்பு அந்த பகுதிலே இருந்துச்சு. நான் சும்மா இருக்கமாட்டமே அதை எடுத்து என்னோட பிரண்டுக்கிட்டே டேய் இதை வாங்குவோமான்னு கேட்டேன், எதுக்குன்னா அங்கே நாலு பொண்ணுங்க எங்களை மாதிரி புஸ்தகம் பொறுக்கிக்கிட்டு இருந்தாங்க. சரி அதுககிட்டே படம் காமிக்கிலாமின்னு.

பாவிபய நான் கேட்டகேள்விக்கு அவன் பதில் சொல்லனுமின்னு

"ஏண்டா நாமேதான் ஏற்கெனவே அதைத்தான் தமிழிலேயே படிச்சிட்டுட்டொமில்லே அதுமில்லேமா இதைப் படிச்சால்லும் உனக்கு புரியப்போகுதா" ன்னு கேட்டுப்பிட்டான்.

அப்பவாச்சிம் சும்மா நான் இருந்திருந்தா கொஞ்சநஞ்ச மானமாவது மிச்சிருக்கும்.,

"ஏன் நம்மக்கிட்டேதான் டிக்சனரி இருக்கே, இதெ எழுத்துக்கூட்டி வாசிச்சு அதிலே அர்த்தம் பார்த்துக்கிலாம்"ன்னு சொல்லித்தொலைச்சேன்.

அவ்வளவுதான் அந்த கட்டடமே இடிச்சுப் போறமாதிரி ஹெக்கேபுக்கேன்னு சிரிச்சுத் தொலைச்சானுவே எல்லா பயலுவேல்லும், சரி பரவாயில்லே நமக்கும் ஹீயூமர் சென்ஸ் இருக்குன்னு நினைச்சு நானும்தான் சேர்ந்தே சிரிச்சுத்தொலைச்சேன்.



அதிலே ஒரு பொண்ணு பிரண்டுஸ் படத்திலெ விஜய் விடாமே சிரிக்கிறமாதிரி சிரிச்சிக்கிட்டே அதுகூட வந்த இன்னோரு பொண்ணுக்கிட்டே இந்த கோமாளிதாண்டி பிலாக்கெல்லாம் எழுதுறதுன்னு சொல்லிட்டா. எனக்கு வந்திச்சே கோவம் அப்பிடியே ஒன்னும் பேசமே கொள்ளமெலெ அங்கெயிருந்து வந்திட்டேன். நம்மளை மாதிரி ஆளுக்கெல்லாம் பேசுறத விட காரியத்தைதான் செய்யனுமின்னு மறுநாளே போட்டோவே தூக்கீட்டேன். என்னோட உண்மையான போட்டோ இருந்தா தானே இப்பிடி காமெடி பண்ணுவாய்கே.

"ஹே இப்போ என்னா செய்வீங்க.... இப்போ என்னா செய்வீங்க...."




சரி போட்டோவே தூக்கியாச்சு, வேறே என்னாதான் வைக்கலாமின்னு யோசிச்சு யோசிச்சு ஒருவழியா கடைசிலே நம்ம தல கூப்பிடறமாதிரி கொஞ்சம் ராயலா வேணுங்கறதுனாலே இந்த ரிச்சிரிச் படத்தை போட்டேன்.ரிச்சிரிச் பத்தி சொல்லுணுமின்னா சொல்லிக்கிட்டே போவணும். எனக்குப் பிடிச்ச கார்ட்டூன் கதாபாத்திரத்திலே இந்த பயதான் கொஞ்சம் இன்ஸ்பிரேசனெ ஏறபடுத்தினே கதாபாத்திரம் அது. அவனைமாதிரியே நாமெல்லும் பெரிய பணக்காரனா ஆவனுமின்னு.....!

உங்களுக்கு இந்த பயபுள்ளேயே பத்தி நல்லா தெரிச்சிருக்குமின்னு நினைக்கிறேன், டாலரும் தங்ககாசுமா வாழுற பயப்புள்ளே, நமக்கு யாராவது பழனிக்கோ இல்ல திருப்பதிக்கோ போயிட்டு வந்தா வாங்கிட்டு வர்ற சாமி படம் போட்ட டாலர்தானே தெரியும்.

அப்பிறம் இன்னொரு விஷயம் இன்னொரு என்னை கவர்ந்த கார்ட்டூன் கதாபாத்திரத்திமின்னா வாரமலரில்லே வந்த ஒருத்தன் (பேரு என்னான்னு மறந்துப் போச்சு) எதையாவது வரைந்தானா அப்பிடியே உண்மையாகவே வருமில்லே, அந்த கதாபாத்திரமும் எனக்கு ரொம்பபிடிக்கும்..... உங்களுக்கெல்லாம் எந்த எந்த கதாபாத்திரங்கள் பிடிக்குமின்னு சொல்லுங்க பார்ப்போம்.

Wednesday, September 13, 2006

மதுரை புத்தகக் கண்காட்சி




எங்கூர் பக்கம் எதாவது கண்காட்சின்னா அதுவும் தமுக்கத்திலே சித்திரைப் பொருட்காட்சி இல்லன்னா மடீசியா போடுறே பொருட்காட்சிதான் பேமஸ். இப்போதான் மொதமுறையா புத்தககண்காட்சி போட்டுருந்தாங்க. நல்லாதான் இருத்திச்சு, சின்னப்புள்ளலே எதாவது பொருட்காட்சி போட்டா எங்கப்பாக்கிட்டே கூட்டிக்கிட்டு போகச்சொல்லி நச்சரிப்பேன். காரணம் என்னானா அங்கே போனா பெரிய தோச சைஸ்க்கு அப்பளம் சாப்பிடலாம், ராட்டினம் இருந்தா அதிலே சுத்தலாம். ஆனா இப்போ சில வித்தியாசங்கள் கண்கூடாக தெரிஞ்சுப் போச்சு, நாமும் வளர்ந்துட்டோமில்லே.




தமுக்கத்திலே நடுமையப் பகுதிலே அழகா செட் போட்டு நன்றாக செய்திருந்தார்கள் இக்கண்காட்சியை ஏற்பாடு செய்தவர்கள். சனிக்கிழமை என்பதனால் நன்றாக கூட்டம் வந்திருந்தது. சினிமா தியேட்டர்களிலும், ராஜாஜி,மாநகராட்சி ஈகோ பார்க்கிற்கு வரும் கூட்டத்தை விட கொஞ்சம்தான் அதிகம்.

நான் சனிக்கிழமை மாலைவேளையில் சென்று எனக்குத் தேவையான புத்தகங்கள் கிடைக்கின்றதா எனமுதலில் ஒவ்வோரு ஸ்டாலிலும் சுற்றிப் பார்த்தேன். சில புத்தகங்கள் தலைப்புக்களிலேயே வாங்கும்படி ஈர்த்தன, வெகுஜன எழுத்தாளர் எழுதிய சில புத்தகங்களும், சில புத்தகங்களில் புரட்டும் பொழுது கண்ணிற்கு தென்படும் வரிகளில் ஈர்க்கப்பட்டு வாங்க வேண்டுமென நினைத்த புத்தகங்கள் பல. இவ்வாறக படித்தும் ரசித்தும் சிலவற்றை வாங்க வேண்டுமேன முடிவு செய்து அன்றே வாங்கிய புத்தகங்களின் எண்ணிகை மொத்தம் பதினொன்று.

அன்றைய தினத்தில் ஒரு சுவராசியமான விஷயமெனில் நான் வாங்கிய கந்தப் புராணம், ஓஷோவின் மீண்டும் புல் தானாக வளர்கின்றது, பெரியாரின் பொன்மொழிகள் ஆகிய புத்தகங்களை தெரிவுச் செய்து பணம் செலுத்த சென்றப் போது அந்த பதிப்பகத்தாரின் காசாளார் என்னை உற்றுநோக்கி என்னவோ கேட்க வருவது போல முகத்தை பார்த்துக்கொண்டே இருந்தார்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலையில் மறுபடியும் சென்றேன். எவ்வகையான புத்தகங்கள் வாங்க வேண்டுமென அனைத்துப் புத்தகங்கள் அனைத்தையும் விருவிருவென எடுத்துக் கொண்டு பில்லுக்கு வரிசையில் நிற்க ஆரம்பித்தேன். ஆனால் முதன்முறையாக ஒரு ஸ்டாலில் ஆண்டாள் பிரியதர்சினியின் மன்மதஎந்திரம் கவிதைத் தொகுப்பை புரட்டிப் பார்த்து தாக்குண்டுப் போனேன், ஆம் கீழ்கண்டவைகள்தான் நான் முதலில் அப்புத்தகத்தில் வாசித்தவைகள்,

ஒருநாள் தினவு
உனக்கு
ஒருநாள் உணவு
எனக்கு.


நீங்கள் நினைத்தது சரியே... ஆம் அக்கவிதை தொகுப்பு பாலியல் தொழிலாளி பற்றியதே.

கண்ணதாசன்,பாலகுமரன்.வைரமுத்து,தபூசங்கர்,சாண்டில்யன்,இராமகிருஷ்ணன்,வடிவேல்! என அனைத்து தரப்பட்ட எழுத்தாளர்களின், மற்றும் நமது கெளதம் எழுதிய கிழக்கு பதிப்பகத்தாரின் வெளியிட்டான பத்துக் கட்டளைகள் புத்தகங்களும் வாங்கினேன். மொத்தம் நான் வாங்கிய புத்தகங்கள் முப்பத்தி ஒன்று. இம்முறை ஆங்கிலப் புத்தகங்களில் ஒன்றுகூட வாங்கவில்லை. ஆமாம் எத்தனை நாளைக்கு தான் ஒரு பக்கத்தை படிக்க லிப்கோ,கன்சியஸ்ன்னு பார்த்து அர்த்தம் கண்டுபிடிச்சு படிச்சிக்கிட்டு இருக்கிறது, நமக்கு என்ன தெரியுதோ அதை மட்டும் செய்வோமின்னு அதை வாங்கலை.

அங்கே கண்காட்சியிலே இருந்த எல்லா புத்தகத்தையும் தூக்கிட்டு வந்திரலமின்னு ஒரு நப்பாசை கூட இருந்துச்சு. நம்மளை மாதிரி விஐபி ஏதாவது தப்பு பண்ணினா ஏதாவது ஒரு மாளிகையிலே ஜெயில்ல வைப்பங்களாமே, நம்ம பெருசை போட்டுத் தள்ளிட்டு இந்த புத்தகக்கண்காட்சி இருக்கிற இந்த தமுக்கம் மைதானத்திலயே அடைச்சு வைக்கனுமின்னு கோரிக்கை விட வேண்டியதுதான், நல்லா ஓசியா பூரா புத்தகத்தையும் படிக்கலாம், கோழிகறி சாப்பிட்டுக்கிட்டே....

புத்தககண்காட்சி நிறைவுநாள் என்பதனால் நிறைய பிரபலங்களை காணமுடிந்தது. அதுவும் குறிப்பாக வைரமுத்து,ரவி தமிழ்வாணன் ஆகியோர் வருகைப் புரிந்திருந்தனர். அடுத்த வருடமும் ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் மதுரையில் புத்தகத்திருவிழா நடக்கும் என அறிவிப்பு கிடைத்தது. ஹீம் அடுத்த வருடமும் சென்று வந்து இதுப்போல் ஒரு பதிவிடுவேன்.

Wednesday, September 6, 2006

போயி விவசாயத்தை பாருங்கய்யா.......

போனமுறை ஊர்பக்கம் போனாப்ப எங்கப்பத்தா கிராமத்து பக்கம் போயிட்டு வராலாமின்னு கூப்பிட்டுச்சு.அங்கெனே சிம்பிளா இருக்கிற மாதிரி காட்டனுமின்னு லீ ஜீன்ஸ்+ ரீபேக் ஷீ நம்ம படபொட்டி, தூக்கிட்டு திரியிற பொட்டி,ரேபான் கிளாஸ் சகிதமா கிளம்பினேன் பட்டிகாட்டுக்கு.

பஸ்'லே ஊருக்குள்ளே போறதுகுள்ளே பாதி உசுருபோச்சு, எப்பிடிதான் தினமும் இதிலே போயிட்டி வருதுகுலோ சனங்க எல்லாம். நாங்கலெல்லாம் பெங்களுருலே ஏசி காத்து'லெ போயிட்டு வர்றோம். அய்யோ அய்யோ.....

ஊருக்குள்ளே போயி இறங்கினவுடனே தடல்புடலா வரவேற்பானுங்கன்னு பார்த்தா ரெண்டு அரைடிக்கெட்டுக பக்கத்திலே வந்து பார்த்துட்டு ஹீம் பூச்சாண்டி இல்லயின்னு கன்பார்ம் பண்ணிட்டு போயிருச்சுக. அதுக்கப்புறமும் கண்ணாடி போட்டுக்கிட்டு தானே நடந்தேன். காடுகரையே காட்டுறேன்னு காச்சுபோன கட்டதரையை காட்டதானே என்னை இழுத்துட்டு வந்தியா நீயீ, ஏலெய் செவனைன்னு வாடா இன்னும் கொஞ்சம் தூரந்தான் நம்ம காடுகரை,நடநட நடந்து கடைசிய தோட்டவீட்டுக்கு கூட்டிட்டு போச்சு அப்புத்தா, அய்யோயோ அந்த வீட்டுலபெருசு ஓன்னு கெடக்கு, எங்க வீட்டுக்கு வந்தாலே நொணநொண்ணு கேள்வி கேக்கும் என்னா கேட்கபோகுதோ.... நினைச்சுக்கிட்டு போன மாதிரியே நோண்ட ஆரம்பிருச்சு.

"என்னப்பே என்னா வேலை பார்க்கிறே பெங்களூருலே...?"

"நானு கம்பியூட்டர் இஞ்சினியர்..! "

"அதிலே என்னா வேலை பார்க்கீறே..? "

"என்னா வேலைன்னா எதுமாதிரின்னு கேட்கிறீங்களா..?"

"ஆமாப்பே "

"நானு சிஸ்டம் அட்மினிஸ்டேரர்...!"

"என்னப்பே என்னா சொன்னே இங்கிலிபிஸ்ல சொல்லு "

"நானு கணினி நிர்வாகி "

"அப்பிடின்னா என்னாதான் உனக்கு வேலை "

என்னாத்தா சொல்ல அதுக்கிட்டே............ கம்ப்யூட்டர்,ரவுட்டரு,சுவிச்சுன்னு மெயிடென் பண்ணறே வேலை அதுஇதுன்னு கொஞ்சம் விளக்க வச்சேன்.

"சரிசரி விடு ஒரே வார்த்தைலை சொல்லுனுமின்ன கழுதை மேய்கீறே..?"

"ஏய் பெருசு என்னா கிராமத்துகுத்தல்னா இதுதானா ஆமா கழுதைதான் மேய்க்கீறேன் அதுவும் கம்ப்யூட்டர் கழுதைக அதுக்கு இப்போ என்னாங்குறே...?"

"ஆங் எம்புட்டு ஓவா வாங்குறே அதுக்கு கூலியா..?"

"கழுதை மேய்க்குறவன் வாங்குறதோட கொஞ்சுண்டு அதிகமாதான் நான் வாங்குறேன்...!"

அதுக்குப்புறம் அது கேட்ட பலகேள்விகளுக்கு நான் எதுவுமே பதிலே பேசலே.முக்கியமா கம்பிட்டர் படிச்சவே பூரா பயலுகளும் முட்டாபசங்கன்னு சொல்லி மடக்கப் பார்த்துச்சு...எங்கப்பா எதுக்கடுத்தாலும் நாங்கல்லாம் அந்த காலத்திலே எம்புட்டு கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்தோம் நீங்க இப்பிடி சொகுசு வாழ்க்கையா இருக்கும்போதே எண்பதிரண்டு நொட்டைசொல்லுன்னு நீட்டிமுழங்குவாரு. நாமெல்லும் அந்த கஷ்டமான வாழ்க்கையின்னா என்னான்னு பார்க்கலாம் வந்தா இதுகதான் இங்க கஷ்டங்களா.

என்னப்பத்தா நீங்க வாழ்ந்த வீடெல்லாம் காட்டுறேன்னு சொல்லி கூட்டியாந்தே, இம்சையே தான் கூட்டிவச்சிருக்கே, டேய் நீ நிக்கிறது நம்ம மண்ணுடா,ஆனா இதுக்கு முன்னாடி இது பூராவும் பொட்டகாடா கிடைத்துச்சு, உங்கப்பன்சித்தப்பனுங்க தான் வந்து இதையெல்லாம் மண்ணையெல்லாம் தட்டிவிட்டு கிணறு வெட்டி நாலுபக்கமும் மரங்கொடியெல்லாம் நட்டு விட்டானுங்க. நமக்கு எம்புட்டு நிலமிருக்குன்னு சர்வே பண்ணி திருமங்கலத்திலே சர்க்கார் ஆபிஸ்ல பதிச்சு வச்சிருக்கானுவே அவிய்ங்களுக்கு அடுத்து நீதான் அம்புட்டுக்கும் கையெழுத்து போடபோற வாரிசுன்னு சொன்னிச்சு. அய்யோ ஒங்க கொடுமை தாங்க முடியலயே, இதை எல்லாத்தையும் வித்தாலும் அஞ்சுடிஜிட் அமவுண்ட் காசு வராது, வேற எதாவது பொன்னு காசுன்னு சேர்ந்திருந்தா கூட தூக்கிட்டாச்சிம் போகலாம், இத வச்சி என்னா பண்ணமுடியும்.

சரி கிளம்புற நேரத்திலேயாவது நம்ம சேட்டையே பெருசுக்கிட்டே காட்டாலமின்னு பெருசு நாப்பது மொழம் கவுறு வாங்கியாரேன், இந்த நிலபுலத்தெயல்லாம் கட்டி மதுரைக்குள்ளே நம்மை வீட்டு பக்கம் கொண்டாந்து விட்டுறு, நான் அங்கேனே சேல்ஸ் பண்ணிக்கிறேன்னு சொன்னேன். ஒரு மொறை மொறைச்சு பார்த்து வாயை திறந்துச்சு, அப்புறமா எனக்கு காதும் கேட்கலை, அது இருக்கிற பக்கத்திலே கண்ணும் சரியா தெரியலே.

இந்த ஊருல எங்கப்பாரு என்னா கஷ்டப்பட்டாருன்னு கடைசிவரைக்கும் தெரியலே. எனக்கு நல்லாதான் குட்டிசாத்தான் அலறிச்சு, தூக்கிட்டுதிரியறிதிலே ஓயீபீ கனக்ட் ஆச்சு. எனக்கு தெரிஞ்சு அங்கனே கஷ்டமின்னா சும்மா தொணதொணன்னு பேசிக்கிட்டே இருந்தானுவே, ஒரு பய வீட்டுலேயும் ஏசி மெசினே காணோம், ஊரை சுத்தி மரமா இருத்துச்சு, சும்மா சும்மா ஜில்லுன்னு காத்து வேற அடிச்சிக்கிட்டே இருந்துச்சு.இங்க வேலையிலிருந்து பத்தி விட்டாங்கனா விவசாயம் பார்க்கப்போறேன் ஏன்னா அதுவும் சும்மா உட்கார்த்திருக்க வேலைதானே.

அதுக்கு முன்னாடி அந்த பெருசை போட்டு தள்ளிட்டுதான் ஊருக்குள்ளே போகணும்.