நந்தன்
"அம்மா.. அம்மா... என்னை தேடி நந்து வந்தானா??" என்று கேள்வியை எழுப்பியபடி ஒட்டமும்,நடையுமாய் வீட்டினில் நுழைந்தாள் விஜயா. "ஏண்டி எத்தனை தடவை ஒன்கிட்டே சொல்லிருக்கேன்? இப்பிடியெல்லாம் ஓடி வரதேன்னு? இன்னும் கல்யாணத்துக்கு முழுசா ஒரு வாரம் கூட இல்லைடி? எதாவது ரத்தகாயம் வாங்கிறாதேடி!"
"அம்மா! அதுக்கு நான் என்ன செய்யட்டும் சொல்லு? சின்னவயசிலிருந்தே நான் ஆக்டிவா வளர்ந்திட்டேன், அதுவுமில்லாமே நீதான் என்னை அப்பிடி வளர்த்தேன்னு பெருமையா ஊரெல்லாம் சொல்லிட்டு இப்போ என்னோட மேரேஜ் கமிட் ஆன கடைசி ரெண்டு மாசமா ஒரு டயலாக்கே கீறல் விழுந்த ரிக்கார்ட் மாதிரி சொல்லிக்கிட்டே இருக்கே!"
"இதே மாதிரிதான் நானும் எங்கம்மாகிட்டே என் கல்யாணத்தப்பேயும் கேட்டேன்... அதுக்கு எங்க பாட்டிதான் பதில் சொன்னாங்க! என்னானா கல்யாணத்துக்கு முன்னாடி ஏதாவது காயம் பட்டா நம்மாலே அந்த விசேஷத்திலே முழுமனசா நிறைஞ்ச படி அனுபிவிக்கமுடியாதாம்! எப்பிடியாவது அந்த காயம் ஞாபகம் வந்து அதே பத்தி நினைச்சிட்டோமின்னா சின்னமுகச்சுழிப்பு வந்தாலும் அதே ஒருத்தவங்க பார்த்திட்டாலும் அட இந்த பொண்ணுக்கோ, பையனுக்கோ இதிலே சம்மதமில்லை'ன்னு நினைச்சிருவாங்களாம்!"
"தாயே, நான் கேட்டதுக்கு பதில் சொல்லுன்னா, வேறே என்னத்தையோ பேசிக்கிட்டு இருக்கே? நான் கேட்டது நந்து வந்தானா'ன்னு??"
"உன்னைமாதிரிதான் அவனும் டீச்சர் வந்துடாங்களா'ன்னு இதுவரைக்கும் அஞ்சுதடவை வந்து கேட்டுட்டு போயிட்டான்!,என்னடி உங்களுக்குள்ளே நடக்குது?? இனிமே அந்த பயங்கிட்டே பேசுறதே குறைச்சிட்டா நான் சந்தோஷப் படுவேன், ஆமா சொல்லிட்டேன். ஒனக்கு ஏதாவது சொல்லிட்டா போதும், அப்புறம் என்கிட்டே நாலு நாளைக்கு பேசமாட்டே! உங்கப்பாவும் ஒனக்கு சப்போர்டா அவரும் என்கிட்டே பேசமாட்டாரு.! ஹிச்.. என்ன பண்ண நான் மட்டும் அதே ஏன் செஞ்சேன்னு தனியே உட்கார்ந்திருப்பேன்."
"மம்! அதெல்லாம் இல்லே! நீதான் எதையும் விடப்பிடியா பிடிச்சு தொங்குவேலே, அதை ஒனக்கு எப்பிடி புரியவைக்கிறது, இதுதான் நல்லவழின்னு நானும்,அப்பாவும் முடிவு பண்ணினோம்! அதுதான் அந்தமாதிரி டிரிட்மெண்ட்!!" இவ்வாறு சொல்லிக்கிட்டு இருக்கும் சமயத்தில் "டீச்சர், டீச்சரு"ன்னு உள்ளே நுழைக்கிறான் நந்து அலைஸ் நந்தகண்ணன்.
"ம் வாடா! படுபாவி நானும் ரெண்டு நாளா ஒன்னே எப்பிடியாவது ஜெயிச்சிடனுமின்னு இருந்தேன், போச்சுடா, நான் என்னோட தோல்வியே ஒத்துக்கிறேன், தயவுச்செய்து சொல்லிடு சாமி.. என்னாலே முடியலேப்பா"
"என்ன டீச்சர், இப்பிடி சொல்லிட்டிங்க! நீங்க எப்பிடியாவது கண்டுபிடிச்சிருவீங்கன்னு நினைச்சேன். ஆனா கடைசியிலே இப்பிடி தோத்து போயிட்டிங்க?"
"நந்து இதிலே தோத்தது கூட கவலையில்லை ஆனா எனக்கு வருத்தமின்னா நீ இனிமே கொடுக்கப்போறே கமண்ட்லேதான், சும்மாவே என்னயே நீ ரொம்ப லந்து பண்ணுவே? அதுக்கும் மேலே என்னை நீ டீச்சருன்னு சொல்லி கூப்பிடுறேதே ஒரு நக்கலுக்குதானே!"
"டீச்சர், நோ பீலிங்ஸ்.. அது என்ன பாட்டுன்னு சொல்லிறேன். 'புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும் பொய்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச் சதுமறைப்படி மாந்தர் இருந்தநாள் தன்னிலே பொதுவான வழக்கமாம்' க்கிறே வரி பாரதியார் எழுதின புதுமைப்பெண்'கிறே கவிதையிலே வர்ற ஒரு பத்தி அது! நீங்க ஃபெமினா'ல்லாம் வாங்கி படிக்கிறீங்க, ஆனா நம்ம கவிஞர் எழுதின கவிதைகள் தெரியலே'னு சொல்றீங்களே டீச்சர்!"
"ஓ அப்பிடியா! நான் இதுக்காவே ரெண்டு நாளா லைப்பேரியிலே கதியா கிடந்து கிட்டத்தட்ட நூறு புத்தகத்தையெல்லாம் படிச்சேன். அதிலேயும் பாரதி கவிதைகளும் படிச்சேண்டா, ஆனா அதிலே இந்த வரிகள் இருந்துச்சான்னு தெரியலை!"
"அதுக்கு படிச்சேன்னு சொல்லாதீங்க! சும்மா புஸ்தகத்தே மேஞ்சேன்னு சோல்லுங்க. என்னோமோ போங்க! ஒங்களே நான் டீச்சருன்னு சொல்லிக்கிறவே வெக்கமா இருக்கு! இனிமே கவலை படாதீங்க, நீங்க ஜெயிச்சாலும், தோத்தாலும் கிப்ட் பண்ணலாமின்னு புக் வாங்கி வந்தேன் இந்தாங்க."
"டேய், என்னாடா இது பாரதியார் கவிதைகளா.. ரொம்ப நன்றிடா, இனிமே நுனிப்புல் மேயமே முழுசாவே படிக்கிறேன். ஆனா நீ இவ்வளோ பேசியும் உம்மேலே எனக்கு கோவம் வராதுக்கு காரணம் கூட எனக்கு தெரியலைடா? நீ சின்னபிள்ளயா இருக்கிறப்போ நம்ம பக்கத்து வீட்டு பையன் இவ்வளோ அழகா இருக்கானேனு உன்னையே தூக்கிட்டு வந்து எங்கவீட்டிலே வச்சு விளையாடுவேன், ஆனா இப்போதான் பன்னிக்குட்டி ஏன் குரங்கு குட்டி கூட சின்ன வயசிலே அழகாதான் இருக்குங்குறது உண்மைதான் போலே! குரங்குன்னு சொன்னதும்தான் நீ சின்னவயசிலே செஞ்ச குறும்பெல்லாம் ஞாபகம் வருது, எவ்வளோ நாளா நான் ஆசையா வளர்ந்த ரோஜா செடியே தோட்டியோட உடைச்சது, என்னோட சைக்கிளிலே காத்து பிடிங்கி விடுறதின்னு, வீட்டுக்குள்ளே வந்ததும் கையிலே கிடைக்கிறதே விளையாடுறேன்னு சொல்லி அதே போட்டு உடைக்கிறது, ஐயோ நீ வர்றேன்னு சொன்னா போதும் எங்கம்மா உனக்காகவே பொருள்களையெல்லாம் ஒதுங்க வைக்க ஆரம்பிச்சிருவாங்க. இவ்வளவுதான் ஒரு லிஸ்டாவது போடமுடியுமா அது மொழக் கணக்கிலே நீண்டுக்கிட்டுதான் போகும்."
"டீச்சர், நீங்க சந்தடி சாக்கிலே என்னை பன்னி,குரங்குன்னு சொல்லிட்டிங்க, நல்லாயிருங்க.. அது என்னோமோ உண்மைதான் இனம் இனந்தே தேடி கண்டுபிடிச்சுதானே சேருமின்னு சொன்னது பொய்யில்லை!!"
"நீ வளர்ந்து பெரியவனா ஆனாலும் உன்னோட குறும்பு மட்டும் மாறலேடா, சரி என்னடா மேரேஜ்'க்கு வருவயில்லை??"
"இல்லே டீச்சர், அன்னிக்குதான் எனக்கு கணக்கு பரிட்சை, அடுத்து ஒருநாள்தான் லீவு பிஸிக்ஸ் எக்ஸாமுக்கு, அதுனாலே வரமுடியாது, எங்கேயிருந்தாலும் வாழ்க!ன்னு கட்டாயம் வாழ்த்துவேன்"
"ராஸ்கல்.. உனக்கு வரவர ரொம்ப சேட்டையா போச்சுடா! சரி அம்மா கூப்பிடுறாங்க, அப்புறம் மீட் பண்ணலாம்."
இந்நிகழ்ச்சிக்கு பிறகு விஜி தன்னுடைய கல்யாணவேலைகளில் முழ்கிப்போனாள், நந்துவோ தன்னுடைய மேல்நிலை இறுதி தேர்வுக்காக தயராகிக் கொண்டிருந்தால் அவ்விருவர்களுக்கும் தொடர்பு சுத்தமாக அற்றுப்போனது.வீட்டிலே விஜியின் அம்மாவும் அப்பாவும் கல்யாணத்திற்க்காக அடிக்கடி வெளியே சென்று விடுவதால் அவளுக்கு துணையாய் முதன்முறையாய் நந்து பரிசளிந்த பாரதியார் புத்தகம்தான். விஜியின் திருமணம் இனிதே முடிந்து தன் கணவருடன் வெளிநாட்டுக்கு புறப்பட்டு சென்றாள், அப்போதாவது அவனை சந்திகலாமின்னு முயன்ற வேளையில் அவன் பொது தேர்வு முடித்து என்டரன்ஸ் எக்ஸாம் படிக்க சென்னை சென்று விட்டதாக கேள்விப்பட்டு சிறிய வருத்தமுடன் செல்கிறாள். அதன்பின்னர் அவர்களுக்குள் எவ்விதமான கடிதப்போக்குவரத்தோ, தொலைப்பேசி பேச்சுகள் கூட அமையததால் இன்னும் சிறு காயமாகவே அவ்விருவரும் உணர்கின்றனர்.காலம் உருண்டு ஒடியது.
விஜி, கூடவே தன்மகனேயும் கூட்டிக்கொண்டு ஆறுவருடங்களுக்கு பிறகு இந்தியா வருகிறாள்.தன்னுடைய தாய்வீட்டுக்கு செல்லும் அவள் நேரில் சென்று பார்க்கவேண்டியர்களில் நந்துக்கே முதலிடம்.
"அம்மா நந்து எப்பிடிம்மா இருக்கான், என்னைப் பத்தி எதுவும் விசாரிச்சானா, இல்லேன்னா என்னை பத்தியாவது அவன்கிட்டே சொன்னீய்யா??"
"ஹிச் போடி! உன்னோட கல்யாணத்துக்கு அப்புறம் நீயே இப்போதான் இங்கே வாறே, உன்னோட பிரசவத்துக்கு கூட நான்தான் அங்கே வந்தேன், நீ போனதுக்கப்புறம் நீ வச்ச ரோஜா செடியும், நந்துவும் என்னை வந்து பார்ப்பாங்கன்னு நினைச்சேன், ரோஜாவிலே மட்டும் தினமும் வாசம் வரும், ஆனா இந்த வாலுபய ஏதோ ஊரிலே படிக்கிறான் மட்டும் அவனோட அம்மா சொல்லி மட்டும் தெரியும்,ஆனா அவனே ஒருநாள் கூட நேரிலே பார்க்கலை!."
"என்னம்மா சொல்லுறே! ஒருநா கூட பார்க்கலையா,அவங்கம்மா என்னா சொன்னாங்க,"
"என்னா சொல்லப்போறா, மிலிட்டரி மெடிக்கல் காலேஜ்'லே டாக்டருக்கு படிக்கிறான்னு பெருமையா சொல்லுவா, கடைசியா டீச்சர் எப்பிடியிருக்காங்கன்னு கேட்க சொன்னான்னு சொல்லுவா, அவ்வளவுதான்."
"அட பரவாயில்லையே என்னை மறக்கமே இருக்கானா?? ஆச்சரியம்தான், சரி வா உன்னோட பேரனை ஹாஸ்பிட்டலே காட்டி வரலாம், வந்த ரெண்டுநாளிலே அவருக்கு நம்மூர் வெயில் ஒத்துக்காமே கஷ்டப்படுறாரு"
விஜி தன்னுடைய மகனை அழைத்துக் கொண்டு அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு செல்கிறாள்.அங்கே மருத்தவர் ஆலோசனைகாக காத்திருக்கும் சமயத்தில் "டீச்சர், டீச்சர்"ன்னு நந்து குரல் கேட்டு ஆச்சரியத்துடன் அந்த இளைஞனே பார்க்கிறாள்.
"நீங்க யாருங்க? யாருன்னு அடையாளம் தெரியலை?? ஆனா சந்தேகத்திலே கேட்கிறேன்? நீங்க நந்து.. நந்தக்கண்ணனா??"
"ஆமா டீச்சர், என்ன அதுக்குள்ளே என்னை மறந்திட்டிங்க பார்த்தீங்களா? ஆனா உங்களே பார்த்தமாத்திரத்திலே அடையாளம் கண்டுபிடிச்சு கூப்பிட்டேனே??"
"டேய் நந்து, நீயா ரொம்ப ஆச்சரியமா இருக்குடா, ஆளே மாறிப்போயிட்டே, பார்க்க என்னோமே ஒரு பயில்வானட்டாம் இருக்கீயா, என்னலே கண்டுப்பிடிக்கமுடியலே, இன்னும் கூட நந்துக்கிட்டே தான் பேசிக்கிட்டு இருக்கோமான்னு சந்தேகமா இருக்குடா?"
"நீங்க என்ன டீச்சர், எங்கம்மாவே என்னை அப்பிடித் தான் பார்த்தாங்க, கேள்விப்பட்டு இருப்பிங்கன்னு நினைக்கிறேன், நான் மெடிக்கல் படிச்சது மிலிட்டரி காலேஜ்லே, அதுனாலேதான் இப்பிடி ஒரு மாற்றம்! ஆனா உங்கக்கிட்டே எனக்கு ஒரு மாற்றம்கூட தெரியலே? அப்பிடியே இருக்கீங்க, இந்த குட்டிபையன் வந்ததுக்கப்புறமும் அப்பிடியே இருக்கீங்க.. ஆமா இவன் பேர் என்ன??"
"பார்த்தியா! நாமே பேசிக்கிட்டே நம்ம நாட்டு விருந்தாளியே அறிமுகப்படுத்தி வைக்க மறந்துட்டேன். இவர் பேர் சொன்னாக்கூட நீ ஆச்சரியபடுவே!!"
"என்ன டீச்சர், விருந்தாளியா?? அப்போ இவரு அந்நாட்டு பிரஜையா??? சரி பேர் என்னான்னு சொல்லுங்க? ஒங்ககிட்டே என்ன கேட்கிறது, நான் அவருகிட்டே கேட்டுக்கிறேன், ஹாய் டியர் வாட் இஸ் யூவர் நேம்?"
"என்னோட பேரு நந்த குமார்"ன்னு தமிழிலே பதிலளிக்கிறான் குழந்தை.
"என்னடா பண்ண சொல்லுறே, எனக்கு இவன் பிறந்ததும் பேர் வைக்கனுமின்னு வந்தோப்பா எனக்கு தோணினது உன்னோட பேர் நந்து மட்டும்தான்"
"டீச்சர்! என்ன சொல்லுறீங்க, அப்படியென்ன நான் உங்க வாழ்க்கையிலே வந்துட்டேன்??"
"ஆமாண்டா எனக்குன்னு கூட பிறந்தவங்க யாரும் கிடையாது, இந்தா அம்மா முன்னாடியே சொல்லுறேன், எனக்குன்னு நானே பேசி, நானா சண்டை போட்டுக்கிட்டு அழுது,அப்புறமா சிரிச்சுக்கிட்டு தனியாளாதான் வளர்ந்தேன்.அப்புறமா நீ என்னோட வந்ததுகப்புறமா தான் பாசம்,சண்டை,குறும்புதனம், இன்னும் என்னோமோ உன்கிட்டே இருந்து எனக்கும் வந்துச்சு. நீ எனக்கு மானசீகமான சகோதரனா இருந்தேடா,ஆனா இப்போ நீ அதையும் தாண்டி இன்னோரு உறவுக்குள்ளே வந்துட்டே!"
"டீச்சர்! என்னை அறியாமலே இப்போ எனக்கு கண் கலங்குது!"
"என் பையனுக்கு நந்து'ன்னு பேர் வைச்ச ராசியோ என்னோமோ உன்னைமாதிரியே தான் அவனும் இருக்கான் அவன் உடைச்ச பொருளே மட்டும் குவிச்சு வச்சா அது எவரெஸ்டா உசரத்துக்கு வந்திரும். இன்னோன்னு ஹாஸ்பிடலுக்கு வந்திட்டா இவனை பார்த்து டாக்டருங்க எல்லாம் அலறுவாங்க??"
"ஏன் இவன் டாக்டருக்கு ஊசி போடுவானா??"
"இல்லேடா... டாக்டர்'ங்க ஹார்ட்பீட் டெஸ்ட் பண்ண ஸ்டெஸ்தஸ்கோப்பை காதிலே மாட்டிக்கிறோப்போ படக்குன்னு எடுத்து அதிலே கத்திருவான்,அவங்கதான் பாவம், அதுக்கப்புறம் அவங்களே பார்க்கவே பரிதாபமா இருக்கும். உன்னயே விட பத்து மடங்கு குறும்புக்காரன்தான். அங்கே பாரு இவனே டெஸ்ட் பண்ணின டாக்டர் காதை பிடிச்சிட்டே போறாரு பாரு! அதுதான் இவன் என்னோட இளையமகன்டா, குறும்புன்னா குழந்தைக எப்பிடி பண்ணுவாங்கன்னு எனக்கு சொன்ன நீதான் என்னோட மானசீகமான மூத்தமகன்...."
"முல்லைச் சிரிப்பாலே - எனது மூர்க்கந் தவிர்த்திடுவாய். ... இன்பக் கதைகளெல்லாம் - உன்னைப்போல் ஏடுகள் சொல்வ துண்டோ? அன்பு தருவதிலே - உனைநேர்
ஆகுமோர் தெய்வ முண்டோ?"
38 comments:
மக்களே,
இதே தேன்கூட்டு போட்டிக்கு சேர்த்து இருக்கேன்... அதுக்கு இந்த கதைக்கு தகுதி இருக்கா???????????
இல்லாமலா???
சரி,
எதற்கும் ஒரு தடவை படிச்சிட்டு சொல்றேன்...
இங்க வேலை கொடுத்து பின்னிட்டு இருக்கானுங்க :-)
வாவ், சூப்பர் ராம்,
ரொம்ப நல்லா இருக்குதுங்க கதை,
முடிவில் நெகிழ்ந்து போனேன்,
போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!!
சூப்பர் கதை ராயலு...வெற்றி பெற வாழ்த்துக்கள்....கண்டிப்பா ஓட்டு போட்டுடறேன்...கோட்டரும் பிரியானியும் அனுப்பிடுங்க...அது இல்லாம நான் ஓட்டு போட மாட்டேன் :-)
ராயலு... பட்டாசு கெளப்புறீங்க!
தேன்கூடு என்ன? ராணி தேனீக்கே அனுப்பலாம்.
வாழ்த்துக்கள்...
[நானும் உங்க லைன்ல இருக்கேன்...]
நல்லா இருக்குங்க ராம்! அங்கங்க பாரதியார் கவிதைகள் வேற தூவி இருக்கிங்க அது இன்னும் அழகா இருக்கு.
தேன்கூடு போட்டிக்கு அனுப்பறதுக்கு என்ன கேட்டிங்க?
தகுதியா?
இந்த குறும்புதான வேணாங்கறது!!
என்னா தன்னடக்கம்டா சாமீ!!
ராம்,
கதை அருமை...அன்பை எந்த ஒரு மாசும் படாமல்...அருமை அருமை!!!
பாராட்டுக்குகள்...
ராயலு இந்த மாசம் கொஞ்சம் பிஸில போட்டில கலந்துக்க முடியாம போச்சேனு வருத்துப்பட்டேன்... ஆனா கலந்திருந்தா நிச்சயம் இதுக்கு முன்னாடி நம்ம கதையெல்லாம் நிக்காதுனு இப்ப தெரியுது...
ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க... வாழ்த்துக்கள்!!!
//"இல்லேடா... டாக்டர்'ங்க ஹார்ட்பீட் டெஸ்ட் பண்ண ஸ்டெஸ்தஸ்கோப்பை காதிலே மாட்டிக்கிறோப்போ படக்குன்னு எடுத்து அதிலே கத்திருவான்,அவங்கதான் பாவம், அதுக்கப்புறம் அவங்களே பார்க்கவே பரிதாபமா இருக்கும்//
இது டாப்பு :-)
நந்து ரொம்ப யதார்த்தமா நல்லாயிருக்குப்பா.. வாழ்த்துக்கள்.
பாலாஜி,
மொத போணியா வந்து இருக்கிறே.... அதுவும் நட்சத்திர வேலைகளுக்கு நடுவே வந்து கமெண்ட் போட்டதுக்கு டாங்கீஸ்ப்பா....
:-))))))
//வாவ், சூப்பர் ராம்,
ரொம்ப நல்லா இருக்குதுங்க கதை,
முடிவில் நெகிழ்ந்து போனேன்,//
வாங்க திவ்யா,
கதையே ரசிச்சிங்களா??? உங்களே போன்றோரிடம் கிடைக்கும் ஊக்கத்துக்கு ரொம்ப சந்தோஷப் படுறேன்.
//போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!! //
டாங்கீஸ்ங்க...மறக்காமே ஓட்டு போடுங்க.... :-)))
//சூப்பர் கதை ராயலு...வெற்றி பெற வாழ்த்துக்கள்....கண்டிப்பா ஓட்டு போட்டுடறேன்...கோட்டரும் பிரியானியும் அனுப்பிடுங்க...அது இல்லாம நான் ஓட்டு போட மாட்டேன் :-) //
வாங்க 12B,
ரொம்ப நன்றிங்க உங்க பாரட்டுதலுக்கு.... கட்டாயாமா நீங்க கேட்டதே வாங்கி DHL'லே அனுப்புறேன், போய் வாங்கிக்கோங்க, அப்பிடியே அதிலே எங்கூர் ஸ்பெசலு கறித்தோசையும் சேர்த்து பார்சல் பண்ணிறேன்..... :-)))))
//மாதவாரியக//
மாதவாரியாக இல்லையோ? ஒரு கால் விட்டுப் போயிட்டதே...
பின் பின்னூட்டக் குறிப்பு: பதிவு இன்னும் படிக்கலை.. திரும்பி வரேன்..
//ராயலு... பட்டாசு கெளப்புறீங்க!
தேன்கூடு என்ன? ராணி தேனீக்கே அனுப்பலாம்.
வாழ்த்துக்கள்...
[நானும் உங்க லைன்ல இருக்கேன்...] //
வாங்க ஜி,
வருகைக்கு நன்றிங்க.... என்னோமோ பட்டாசு,கிட்டாசு'ன்னு சொல்லிறீங்க. உசுப்பேத்தி விட்டு உடம்பை ரணகளமாக்கிட மாட்டிங்களே.... அதுக்கு இன்னோருத்தர் காத்து கிடக்காறங்கோ...... :-)))))))))
[அட நேத்து நைட் லைன்'லே வந்து ராங்கா பேசிட்டு போன ராங் கால் நீங்கதானா???]
//நல்லா இருக்குங்க ராம்! அங்கங்க பாரதியார் கவிதைகள் வேற தூவி இருக்கிங்க அது இன்னும் அழகா இருக்கு. //
வாப்பா கதிரு,
அந்த கவிதைகளே படிச்சததுனாலே வந்த கதை தாப்பா அது...... :)
//தேன்கூடு போட்டிக்கு அனுப்பறதுக்கு என்ன கேட்டிங்க?
தகுதியா?//
உண்மையா போட்டிக்கு தகுதி இருக்கா??? நீ சொல்லிறுக்கே, என்னவோ ஒன்னையே மலை போலே நம்பி காரியத்திலே இறங்கிருக்கேன்..... :-)))
//இந்த குறும்புதான வேணாங்கறது!!
என்னா தன்னடக்கம்டா சாமீ!! //
ஹி ஹி
அருமை ராம்!!
வெற்றி பெற வாழ்த்துக்கள்!
//ராம்,
கதை அருமை...அன்பை எந்த ஒரு மாசும் படாமல்...அருமை அருமை!!!
பாராட்டுக்குகள்... //
வாங்க தூயா,
உங்களின் பாராட்டுகளுக்கு மிக்கநன்றி...... :)
//ராயலு இந்த மாசம் கொஞ்சம் பிஸில போட்டில கலந்துக்க முடியாம போச்சேனு வருத்துப்பட்டேன்... //
வாப்பா நட்சத்திரம்,
எனக்கும் கொஞ்சம் வருத்தம்தாப்பா... :(
//ஆனா கலந்திருந்தா நிச்சயம் இதுக்கு முன்னாடி நம்ம கதையெல்லாம் நிக்காதுனு இப்ப தெரியுது...//
உண்மைதானா நீ சொல்லுறது.. தல கேட்கிறேமாதிரி நானும் கேட்கிறேன்...
என்னைய வச்சு நீ காமெடி,கீமடி ஏதும் பண்ணலீயே?
//ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க... வாழ்த்துக்கள்!!! //
ரொம்ப டாங்கீஸ்ப்பா...
//நந்து ரொம்ப யதார்த்தமா நல்லாயிருக்குப்பா.. வாழ்த்துக்கள். //
தேவ்,
மிக்க நன்றி.. தாங்கள் வருகைக்கும், கருத்து தருகைக்கும்.
//மாதவாரியாக இல்லையோ? ஒரு கால் விட்டுப் போயிட்டதே...//
யக்கோவ்,
சரி பண்ணிட்டேன்... நீங்கதான் அந்த பிழைத் திருத்தியா...;)
//பின் பின்னூட்டக் குறிப்பு: பதிவு இன்னும் படிக்கலை.. திரும்பி வரேன்.. //
ஐ யம் தி வெயிட்டிஸ்... :-)))
//அருமை ராம்!! //
வளரே நன்னி கப்பி..... :-)))
//வெற்றி பெற வாழ்த்துக்கள்!//
மறக்கமே ஓட்டு போடுறே ஜனநாயக கடமையே ஆற்றிடணும் புரியுதா...... :-)))
நீளமான கதையில் ஒரு சில எழுத்துப்பிழைகளைத் தவிர்த்து, ஒரு நல்ல கருத்தைச் சொல்லும் கதை. ராம்!
ஒரு விசேஷத்திற்கு முன் பெரியவர்கள் ஏன் நம்மை எச்சரிக்கையாக இருக்கச் சொல்லுகிறார்கள் என்பது, அந்த மகாகவியின் வரிகள், அனைத்தும் பிரமாதம்!
வாழ்த்துகள்!
குறும்புங்கிற தலைப்புல கூட இவ்வளவு உணர்வு பூர்வமான கதை எழுத முடியும்னு நிரூபிச்சிருக்கப்பா ராயல். கதை நல்லாருக்குப்பா. பாரதியார் கவிதை வரிகளை அங்கங்க மேற்கோள் காட்டியிருக்குறது சிறப்பு. வெற்றி பெற வாழ்த்துகள்.
Nice story....
நல்ல கதை ராம்; குறும்புக் கதை என்றாலும் ஆங்காங்கே பாரதியைத் தூவி இருக்கீங்க! மனித உணர்ச்சிகளையும் மெல்லிசா படம் பிடிச்சி காட்டியிருக்கீங்க!
//அட பரவாயில்லையே என்னை மறக்கமே இருக்கானா?? ஆச்சரியம்தான், சரி வா உன்னோட பேரனை ஹாஸ்பிட்டலே காட்டி வரலாம்//
குழந்தைக்கு நந்தன் பெயர் வைத்தாயிற்று! ஆனால் அவன் இன்னும் தன்னை நினைவில் நிறுத்தியுள்ளானா என்று அறியும் ஆவல் அங்கங்கே இயல்பாய் வெளிப்படுத்தி இருக்கீங்க...
வாழ்த்துக்கள்!
//நீளமான கதையில் ஒரு சில எழுத்துப்பிழைகளைத் தவிர்த்து, ஒரு நல்ல கருத்தைச் சொல்லும் கதை. ராம்!
ஒரு விசேஷத்திற்கு முன் பெரியவர்கள் ஏன் நம்மை எச்சரிக்கையாக இருக்கச் சொல்லுகிறார்கள் என்பது, அந்த மகாகவியின் வரிகள், அனைத்தும் பிரமாதம்!
வாழ்த்துகள்! //
வாங்க SK ஐயா,
வெகுநாளைக்கு பின்னர் மீண்டும் வருகை தந்துள்ளிர். வருகைக்கும், உங்கள் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.... :-)))
//குறும்புங்கிற தலைப்புல கூட இவ்வளவு உணர்வு பூர்வமான கதை எழுத முடியும்னு நிரூபிச்சிருக்கப்பா ராயல். கதை நல்லாருக்குப்பா. பாரதியார் கவிதை வரிகளை அங்கங்க மேற்கோள் காட்டியிருக்குறது சிறப்பு. //
தல,
வருகைக்கும், கருத்து தருகைக்கும் மிக்க நன்றி.... :-))
//வெற்றி பெற வாழ்த்துகள். //
ஜனநாயக கடமையை ஆற்றியாச்சா??? :-)
அனானி--> நன்றி
//நல்ல கதை ராம்; குறும்புக் கதை என்றாலும் ஆங்காங்கே பாரதியைத் தூவி இருக்கீங்க! மனித உணர்ச்சிகளையும் மெல்லிசா படம் பிடிச்சி காட்டியிருக்கீங்க!//
கண்ணபிரான்,
முதன்முறையா வந்திருக்கீங்க... வருகைக்கும்,பாராட்டுதலுக்கும் மிக்க நன்றி
:-)
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே..
இந்த வருடத்தில் கிடைத்த உங்கள் நட்பு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. பரந்து விரிந்த இந்த உலகத்தில் நம்மை சேர்த்து வைத்த இந்த பிளாக்கருக்கு நன்றி.
இந்த புதிய வருடத்தில் ஆண்டவனிடன் நீங்கள் வேண்டும் யாவும் கிடைக்கப்பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் நீங்களும் உங்களும் குடும்பத்தினரும் எல்லா வித இன்பங்களும் கிடைக்கப் பெற்று வாழ வாழ்த்துக்கள். தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் மேலும் மேன்மை அடைந்து சிறக்க வாழ்த்துக்கள்
Ram,
Congrats on comming 4th. The story was great.
:)
வாழ்த்துக்கள் ராம்...
நான் சொன்ன மாதிரியே பட்டாசுத்தான் பாத்தீங்களா...
அன்பு ராம்
வாழ்த்துக்கள்.
உறவுகளின் அருமையை விளக்கும் அருமையான கதை. ஒரு குடும்பம் ஒரு குழந்தை என்பதால் குழந்தைகள் விளையாட்டு தோழன் இன்றி இருப்பது தங்கள் கதையில் சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறும்பாக நம்முடன் சண்டையிட ஒரு தம்பியோ தங்கையோ இல்லாத வாழ்க்கை எத்துணை வெறுமையானது...
கண்டு ரசிப்பார் இல்லையெனில் குறும்பின் பயனென்ன...
நல்லதோர் கதை...
அன்பினில் நெகிழ்ந்து நெஞ்சில் நிறைந்த கதை. சிறப்பு கவனஈர்ப்பை பெற்று நெஞ்சில் கனக்கிறது.
தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் தெரிவித்த கார்த்திக்,சிறில்,ஜி எல்லாருக்கும் மிக்க நன்றி...
அரைபிளேடு,
உங்களின் பின்னூட்டம் மிக்க மகிழ்வை தருகிறது. உங்களுக்காக ஒரே ஒரு உண்மையை சொல்லிறேன், இதுதான் என்னுடைய முதல் கதை.... :-)))
வாழ்த்துக்கள்...
இனிய புத்தாண்டுக்கும்...
Raam anna kadha nalla irukku:)
Post a Comment