Showing posts with label திரைப்படம். Show all posts
Showing posts with label திரைப்படம். Show all posts

Sunday, November 25, 2007

புரொப்பசர் ஞானபிரகாசம்

பாஸ்கர் என்ற நடிகர் இவரை அழுது வடியும் தமிழ் தொலைக்காட்சி நாடகங்களிலும், தமிழ் திரைப்படங்களிலும் துக்கடா வேடங்களிலும் நாம் பார்த்திருக்கலாம். சமிபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன மொழி படத்தில் புரொப்பசர் ஞானபிரகாசம் என்ற கதாபாத்திரமெடுத்து நடித்திருப்பார். படத்தில் அவர் பைத்தியமான மனநிலை கொண்டவராக சித்தரிக்கப்பட்டுருப்பார். அதாவது பழையநினைவுகளை இன்னும் மனதில் வைத்துக்கொண்டு நிகழ்காலத்தில் நடக்கும் எதுவும் தெரியாமால் அதே பழைய காலகட்டத்திலே வாழ்ந்து வருவார். அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றமாதிரியே எந்தவொரு மிகைப்படுத்த நடிப்பும் இல்லாமால் எதார்த்தமான முறையில் அழகாவே நடித்திருப்பார். அவர் படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் படத்தின் கதையோட்டத்தை இணைந்தே வருவதும் இன்னும் மிக அழகாகவே இருக்கும்.

அதுவும் இறுதிக்காட்சிக்கு முன்னால் தன்னுடைய நிலையை நினைத்து உணர்வுகள் வெடித்து அழும் பாஸ்கரின் நடிப்பை பார்த்து உடனே எனக்கு சட்டென கண்களில் நீர் கோர்த்து கொண்டது. அந்த காட்சியில் தொடங்கும் இந்த வீடியோ'வே பாருங்க.




இந்த கதாபாத்திரத்தை யாராவது முண்ணனி நடிகர் ஏற்று செய்து இருந்தால் அவருக்கு பலவகையான பாரட்டுக்களும்,விருதுகளுக்கும் பரிந்துரைகள் கொடுக்கப்பட்டுருக்கும். தமிழ் திரைப்படங்களில் துக்கடா கதாபாத்திரம் ஏற்று நடித்து என்னாதான் சிறப்பாக செய்தாலும் அவர்களுக்கு என்னதான் பெரிய பெயர் கிடைத்து விடப்போகிறது? அவர்களுக்கு கிடைக்கும் சொற்ப சம்பளத்திலில் கொஞ்சமாய் அதிகமாக கிடைக்கும். ஞானபிரகாசம் கதாபாத்திரமாய் வாழ்ந்து காட்டிய பாஸ்கர் சமீபத்தில் வெளியான படங்களில் கதாநாயகர் பின்னால் அலையும் அதே கோமாளி நண்பர்களில் ஒருத்தராக தான் வந்து போனார்.

Thursday, November 15, 2007

சொ.செ.சூ

எங்க ஊருக்குள்ளே அடிக்கடி எவனுக்கும் எவனும் ஆப்பு வைக்கமுடியாது, ஆப்புக்கிறது தனியா ஒரத்திலே தான் கிடக்கும் அதை நாமே தேடி வைச்சிக்கிட்டாதான் உண்டு'ன்னு சொலவாடை சொல்லி வெறுப்பேத்துவானுக. அதையெல்லாம் கேட்டு கெடமாடு மாதிரி மண்டய ஆட்டிக்கிட்டு நாமே ஏறி உட்கார்ந்துட்டு அய்யோ அம்மா'ன்னு கத்தி பிரயோசனமில்ல தானே?? என்ன ஆச்சு நம்ம பயப்புள்ள'க்குன்னு நீங்க பதறது புரியுது, அதுவும் ஒன்னுமில்லங்க நானும் டாக்டர் விஜய் நடிச்ச கலைகாவியமான அழகிய தமிழ்மகனை பார்த்து தொலைச்சிட்டேன்.சுருக்கமா புலம்பனுமின்னா வரவனையூருலேருந்து கிளம்புன புனிதபிம்பம் சொன்னமாதிரி சொ.செ.சூ'வே செவ்வாய்க்கிழமை நைட் நானே வைச்சிக்கிட்டேன்.

நன்றி - அருட்பெருங்கோ
படம்மாய்யா அது.. கலை காவியமய்யா!!!??? கருமம் காறி துப்பி துப்பியே தொண்டை தண்ணி வத்தி போச்சு. நம்ம டாக்டரு பெரிய ஓட்டப்பந்தய வீரராம்,(கருமம் பிடிச்ச எழவு) அவரு எல்லா போட்டியிலும் அவருதான் மொதலிலே வந்து தொலைப்பாராம், (பின்னே எந்த ஹீரோ'டா தோத்து போன மாதிரி காட்டி தொலைச்சிருக்கீங்க?) இவருக்கு போட்டியாளர் ஒருத்தருக்கு ஹீரோ போட்டிக்குள்ளே வந்துட்டா நாமே
தோத்துப் போயிருவோம்'ன்னு பயந்து எந்த திரையுலகத்திலேயும் உபயோகப்படுத்த முடியாத டெக்னாலாஜி'யே யூஸ் பண்ணுறாரு, அடேய் அரைடவுசர் ஆப்பாயில் மண்டை வில்லனுகளா ஏண்டா எல்லாரும் ஒரே மாதிரி லூசா'வே திரியுறீங்க, முடியலடா விட்டு தொலைச்சிருங்கடா... அந்த டெக்னாலாஜி என்னா தெரியுமா? கண்ணுக்கு தெரியாத கம்பி ஒன்னை ஹீரோ பைக் ஓட்டிட்டு வர்ற பாதையிலே குறுக்கே கட்டி வைக்கிறாரு, அதெய்யல்லாம் தெரியாமே நம்ம ஹீரோ பைக் ஓட்டிட்டு வந்துறாரு, அந்த சூழ்ச்சியிலே எப்பிடி தப்பிக்கிறான்னு தான் நாமெல்லாம் சீட் நுனியிலே உட்கார்ந்துறானும். (அப்பிடிய நுனியிலே உட்கார்ந்தமாதிரியே வெளியே ஓடி வந்து தொலைக்கனும்) எங்கனயோ இருந்து பட்டாம் பூச்சி ஒன்னு பறந்து வந்து அந்த கம்பியிலே வந்து உட்காருது, ஸ்பீடா கண்ணுமண்ணு தெரியாமே பைக் ஓட்டிட்டு வந்து நம்ம ஹீரோ சடனா என்னாத்தயோ பண்ணி வீலீங்க் எல்லாம் பண்ணி பறக்குறாரு, (எனக்கு அப்பிடியே எங்களை விட்டுருங்கடா பிளிஷ்ன்னு வீல்'ன்னு கத்த தோணுச்சு !!). எங்கிட்டோ இருந்து நாலஞ்சு குண்டனுக வந்து ஆச்சூ,பூச்சுன்னு கத்தி அடிவாங்கிட்டு ஓடி போயிறானுக, ஹீரோ அங்கன இருந்து வந்து பந்தயத்திலே ஓடி பிரைஸ் வாங்கிறாரு.... (கண்ணுல H2O எல்லாம் வத்தி போயி பிளட் வருதுங்க).அப்புறமென்னா முன்னால் முன்னால் வாடா, உன்னால் முடியும் தோழா'ன்னு பாட்டு பாடி தொலைக்கிறாரு, ஆனா இவ்வளவு மொக்கையா ரஹ்மான் பாட்டை கெரியக்கிராபி பண்ணி எந்த டைரக்டரும் ஒப்பேத்துனது இல்லை.

அப்புறமென்ன வெளக்கெண்ண கதாநாயகர் வந்துட்டாருலே, பின்னாடியே அரைலூசு கதாநாயகி களத்திலே குதிச்சு தொலைக்கனுமில்ல. அம்மணி அழகா என்னத்தயாவது காட்டிக்கிட்டே கோவிலுக்குள்ளே இண்ட்ரோ ஆகுறாங்க, அங்கன இருந்த கதாநாயகர் பார்க்கிறாரு, பார்த்த நிமிசத்திலே பத்திக்கிருச்சாம், ஓவரா ஃபீலிங்க் பண்ணுறாரு, பிறகு என்னமோ காமெடி'னு பண்ணிட்டு இருந்தானுக, அதெல்லாம் பார்த்துட்டு முடியலைங்க முடியல... இதுக்கு முன்னாடி பிட்டுக்காக சொந்தமண்ணிலே பொழக்க முடியாமே தடைவாங்கினவங்க வேற வந்து திருவண்ணாமலை ஜோதி, பரங்கிமலை ஜோதி'ன்னு சந்தானத்தை டயலாக் பேச வைக்கிறாங்க, ஆனா நல்லாதாய்யா கேமராசாட்'ஐ வைச்சி தொலையிறீங்க, எழவு நம்ம டாக்டரு வேற அதெ தன்னோட கையாலே ஜாடை வேற செஞ்சு காட்டி தொலைக்கிறாரு....... (இன்னும் அவங்க அப்பா படத்திலே அத்தைக்கு சோப் போட்டு விட்டத மறந்து தொலைக்கலை போலே). இதிலே எல்லாத்தையும் விட பெரிய கொடுமை என்னான்னா இவரு சொல்லுற கவிதை,கவிஜ,கவுஜை'ன்னு ஏதோ ஒன்னை சொல்லி பச்சப்புள்ள பிரைசு வாங்கிட்டு வருது, அந்த புள்ளய வைச்சாவது உருப்படியா கதை கொண்டு போவனுக'னு பார்த்தா ஹீரோ'க்கு ஏதோ வெளக்கெண்ண சக்தி இருக்குன்னும், எதிர்காலத்திலே நடக்கிறத அவரு இப்பவே கணிக்க முடியுமின்னு என்ன எழவயோ கூட்டி அந்த பிள்ளைய கொன்னுருனாக..... :( உண்மையிலே என்ன வெறுப்போட உச்சக்கட்டத்துக்கு கொண்டு போன சீன் அது.(போங்கடா நீங்களும் ஒங்க ஹீரோ'சியமும்) .

அந்த வெறுப்பிலே படம் பார்த்து தொலைச்சா, இவரு அடுத்து இன்னோரு ஓட்டப்பந்தய போட்டியிலே மொக்க காரணத்துக்காக விட்டு கொடுத்து அம்மணி மனசிலே இடம் பிடிக்கிறாரு, அய்யா நல்லவனுகளா அது எப்பிடிடா ஒங்க தியாகத்தை அடுத்தவங்கிட்டே சொல்லுறப்போ கரக்டா பின்னாடி ஹீரோயின் நின்னு தொலையிறாளுக. அப்பிடியே கட் பண்ணி பாட்டு வேற பாடி தொலையுதுக. இனி என்னாலே முடியலைடா'ன்னு நம்ம சோட்டு பய ஓடி போயிட்டான், நான் மட்டும்தாங்க கடைசி வரைக்கும் பார்த்து தொலைச்சேன், தீடீரென்னு டாக்டரு அப்பா இவரே தேடி ஊருக்குள்ளே வர்றாரு, அப்பயே தெரிஞ்சு போச்சு, இன்னொரு எழவே கூட்டி தொலைய போறானுகன்னு, சரியாதான் இருந்துச்சு. ஊர் உலகத்திலே என்னனோமோ கஷ்டமும் வந்து தொலைக்கிது, நமக்கு ஒத்த ஆளு தனியா போயி அம்பது பேரை காப்பாத்திறதை பார்த்து தொலையனுமின்னு கஷ்டம் போலே... :( எப்போடா இன்னோரு டாக்டரை காட்டப்போறீங்கன்னு பார்த்துட்டு இருந்தா வர்றாய்யா அழகுசிங்கம், வாயிலே சிகரெட்'ஐ வைச்சிட்டு நாலு பேத்தை அடிக்கிறாரு, மவனே இதுக்கு பேருதான் ஸ்டைலிஸ் இண்ட்ரோ'வா.... :(

இவரு வந்ததுக்கபுறந்தாங்க கதை சூடு பிடிக்குது, பின்னே நமீதா வர்றாங்களே, சூடு பறக்காதா என்ன? அவ அப்பன் சூரத்திலே துணி வியாபாரம் பண்ணுறானாம், அங்கன மிச்சம் கெடந்த துணியை தைச்சு போட்டு ஆடுது ஆட்டம். பாட்டு முடிஞ்சதும் என்னோமோ நடந்துச்சாம், நல்லவேளை எனக்கு போன் வந்துருச்சு, அதை நான் கவனிக்கலை. தீடீரென்னு பார்த்தா ரெண்டாவது டாக்டரு சென்னைக்கு வந்துறாரு, வந்த இடத்திலே ஸ்ரேயா பார்த்து அவங்க வீட்டுக்கு போறாரு. அங்க போனதும் அவங்க காசுபணத்தை பார்த்தும் ஆள்மாறாட்டம் பண்ணனுமின்னு முடிவு பண்ணிறாரு. இனிமே இந்த வெண்ண படத்த பார்க்கவே கூடாதுன்னு நானெல்லாம் அப்பயே முடிவு பண்ணிட்டேன்.

இவ்வளவு தூரம் டைப் பண்ணினதுக்கே எனக்கே நெஞ்சு வலிக்குதுங்க, அந்த மொக்கை படத்துக்கு இம்புட்டு பெரிய போஸ்டா'ன்னு, அத விட சில பேருக்கு ஹார்ட் -அட்டாக்'ஐ வரும்...

அதன் காரணிகள்:-

1) டாக்டர் விஜய் #1 படத்தில் கல்லூரி மாணவர்

2) டாக்டர் விஜய் #1 பேசுற பஞ்ச் டயலாக் (எவ்வளவோ பண்ணிட்டோம்.. இதைப்பண்ண முடியாதா?)

3) டாக்டர் விஜய் #1 கிளைமேக்ஸில் செய்யும் தியாகம்..... (அர்ஜீனா அவார்ட் இல்லன்னா ஆஸ்காரு நிச்சயம்)

4) டாக்டர் விஜய் #1'க்கும் டாக்டர் விஜய் 2'க்கும் உள்ள வித்தியாசம்!!!???!!!???

5) டாக்டர் விஜய் அவர்களை இளையதளபதி அடைமொழியிலிருந்து இதயதளபதி'ஆக இந்த நல்லுலகம் அறியப்பட போவது!!!

Thursday, March 22, 2007

ஏலேய் நாங்கெல்லாம் மருதக்காரய்ங்கே!!

மதுரை அல்லது மருத என எம்மக்களால் அழைக்கப்படும் சுற்றுவட்டாரத்தின் கலாச்சாரத்தையும் பழக்கவழக்கத்தையும் பிறரிடம் கொண்டுசேர்க்கும் ஊடகங்களான ஏடுகளும்,திரைப்படங்களும் காலம்காலமாய் முயற்சித்து கொண்டுருக்கின்றன. அம்முயற்சியில் வெற்றியெனும் நிலையை அடைய முயற்சித்த திரைப்படம் தான் பருத்திவீரன்.

எம்மண்ணுக்கே உரிய அந்த புழுதிகலந்த காற்றும், எப்பவோ நீர் கண்டு அதைப்போலே திரும்ப கிடைக்குமான்னு எதிர்ப்பார்த்து காத்து கிடக்கும் கரிசல் நிலம்,முன்னோர் காலத்தில் கரை புரண்டு ஓடியதுன்னு அடையாளம் காட்ட வாய்க்கால் இப்பிடி எல்லாவகையும் அப்பிடியே அந்த மண்ணின் மணம் மாறாமல் பார்க்கும் கண்களில் விரியும் படியாகவே காட்சியமைப்புகளில் காண்பித்துவிட்டு கதைமாந்தர் மட்டும் அதற்கு சம்பந்தமில்லாமல் அமைந்துவிட்டால் அது விழலுக்கு இறைந்த நீர்தான்.ஆனால் இந்த நீர் நிலங்களை பசுமைப்படுத்த விளையும் நிலங்களில் பாய்ந்தோடும் தன்மை வாய்ந்தது. பாய்ந்தோடும் வெள்ளம் ரசிக்கும் நம்மை கொஞ்சமாய் சிரிக்கவிடுகிறது,நம் நினைவு மூட்டைகளில் வேகத்துடன் பாய்ந்து அதை சற்றே பிரிந்துவிடுகின்றது. போலி ஒப்பனைப்பூச்சுகளில் பேசித்திரியும் எதார்த்த வசனங்கள் கொஞ்சம் கூட படத்திலே கிடையாது,அனைத்து நிஜமாய் நம் வாழ்வில் நாம் சாதாரணமாக பேசும் பேச்சு வழக்கே இப்படத்தின் பெரிய பலம்.ஆரம்பத்தில் இருந்து படத்தின் இறுதிக்காட்சியின் இறுதி வார்த்தை வரை அப்பிடியே மருதச்சுற்றுவட்டார மொழிவளத்தின் சுத்தநீரில் தோன்றும் பிம்பமே அது, கடுகளவெனும் பிசிறுதனை கண்டுபிடிக்க முடியவில்லை.



பருத்திவீரனாக மார்கண்டய நடிகர் சிவகுமாரின் இளையமகன் கார்த்தி, அவருக்கு சித்தப்பா செவ்வாழையாக சரவணன், முத்தழகாக பிரியாமணியும் இன்னும் பலர் தங்களின் கதாப்பாத்திரங்களின் தன்மைக்கு ஏற்ப அப்பிடியே அச்சுஅசலாக வாழ்ந்து இருக்கின்றனர். படத்தின் தொடக்கத்தில் திருவிழா நடக்கிறது என விரியும் காட்சியில் ஒவ்வொரு அசைவிலும் கரகாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், என கிராமத்து மக்களின் பொழுதுப்போக்கினையும் மொட்டை இடுதல், குழந்தைகளுக்கு காது குத்துதல்,பொங்கல் வைத்தல் என அம்மக்களின் தெய்வநம்பிக்கையும் விளங்க வைத்து இயக்குனர் கதையின் நாயகனான பருத்திவீரனை திருவிழாவில் எக்குத்தப்பாக கத்தியால் குத்துவதாக அறிமுகப்படுத்துகிறார்.அவனுக்கு பெயர் பருத்திவீரன் என்றாலும் அவ்வூரில் அழைக்கப்படும் சண்டியர் என்ற பெயருக்கேற்றமாதிரி வீரனின் கதாபத்திரம் அந்த காட்சியே விளங்கவைத்து விடுக்கிறது, அதேபோல் முத்தழகு என்னும் கதையின் நாயகியும் பள்ளியில் படிக்கும் மாணவியாகவும் அவளுக்கும் கதாநாயகன் மேலே தனிப்பட்ட அழமான பிரியம் இருப்பதாகவும்,அவனுக்காக தம் பெற்றோர்களை எதிர்க்குமளவு தறுதலையை ஒருதலையாக காதலிக்கும் பெண்ணாக வாழ்ந்து இருக்கிறார் பிரியாமணி. அவருக்கு ஏன் அப்பிடியொரு அவன்மேல் அப்பிடியொரு ஈர்ப்பு என்று சொல்ல வெள்ளைகருப்பு காட்சிகள் விரிகின்றன. ஊருக்கு ஒதுக்குபுறத்தில் இருக்கும் ஆலமரமும் அதன் வேர்களை பற்றி வானத்தில் பறக்கும் சிறுவர்களும், மரத்தின் நிழலில் அமர்ந்துவிளையாடும் சிறுமிகளும் அடடா காட்சியமைப்பு அட்டகாசம். சிறுவர்கள் விளையாட்டு சண்டையில் ஒரு சிறுவன் முத்தழகை கல்கிடங்கு or கிணத்துக்குள் தள்ளிவிட்டு ஓடிவிட வீரன் தான் தண்ணிரில் குதித்து முத்தழகை காப்பற்றுக்கிறான், அதிலிருந்து அவளுக்குள் பிறக்கிறது கன்னுக்குட்டி காதல். கடைசி காட்சியில் அவனோடு சேர்ந்து வாழப்போகும் போது அம்மாவை அறுவாளால் வெட்டப்போகுமளவுக்கு வெறித்தனமாகவும் மாறுகிறது அந்த காதல்.

கதாநாயகியின் அப்பாவாக பொன்வண்ணன் தன்னையொரு சாதீயபிம்பகாக காட்டி கொண்டு திரிகிறார்। தன் மனைவியின் அண்ணன் குறத்தியொருத்தியிடம் சாராயம் வாங்கிவிக்கும் செயல் தனக்கு பிடிக்காமல் போக, ஒரு பிரச்சினையில் அந்த பெண்மணி இவர்கள் ஆளு ஒருவரை கொலைச் செய்துவிட பழிக்குபழியாக அந்த பெண்மணியை கொலைசெய்கிறார்கள்। அப்பெண்மணியின் மகளை பொன்வண்ணனின் மனைவிஅண்ணன் கல்யாணம் செய்துகொண்டு வர தனக்குள் எந்திரிக்கும் சாதீயபிரவாகத்தில் அவர்களை பிரிந்து வருகிறார்। திருமணம் முடிந்தவர்கள் குழந்தை ஒன்றை பெற்றெடுத்து சாலைவிபத்தில் இறந்து போக அதை எடுத்து வளர்க்கும் சித்தப்பா செவ்வாழையாக நடித்து இல்லையில்லை வாழ்ந்துருக்கும் சரவணனின் கதாப்பத்திரம் அற்புதம், ஆனாலும் மகன்முறை வந்தாலும் அவனோடு தண்ணியடிப்பது என உறுத்தினாலும் கிராமங்களில் நிறையவே அந்தமாதிரியான சுவாரசிய மனிதர் பலரை பார்த்திரமுடியும்.




வழக்கமான சினிமாக்களில் கதாநாயகனும் கதாநாயகியும் காதலிக்கும் அதேமாதிரியான நேர்க்கோட்டு திரைப்படங்களில் கொஞ்சமே விலகியே இருக்க இயக்குனர் ரொம்பவே கஷ்டப்பட்டுருக்கிறார், அது எவ்வாறெனில் ஒருதலையாக காதலிப்போர் தீடீரென்று ஏதோ ஒன்றை நினைத்துக்கொண்டு அப்பிடியே கனவில் வெளிநாட்டில் டூயட் பாட்டு பாடுவதாக காட்சியே வைக்கவில்லை.உசுரை காப்பத்தியவனுக்கே தன்னை அர்பணிக்க போவதாய் வாழும் கதாநாயகியும் ஆனால் அவளின் உள்ளன்பை நிரகரிக்கும் கதாநாயகியாய் நகரும் காட்சியமைப்புகளில் மெல்லிய நகைச்சுவை அதுவும் அந்த மதுரை மண்ணுக்கே உரிய குசுப்பு சேட்டைகளும் திகட்டவே திகட்டாத ஒன்று. மொட்டவெயில் அடிக்கும் கல்குவாரி உச்சியில் உட்கார்ந்து தண்ணியடிப்பதும், கம்பக்காட்டுக்குள்ளே வழியில் போவனை இழுந்து சிட்டு விளையாடி காசு பறிக்கும் காட்சிகள் அருமை.இப்பிடியே கலகலக்கப்பாக படத்தில் உச்சகட்ட காட்சியில் ஒரு சோகம் பிடிக்கப்போகிறது என்ற வழக்கத்துக்கு ஏற்ப காட்சியமைப்புகள் நகர்கிறது, முத்தழகு வீரன் முன்னாடியே அவன் சித்தப்பா பற்றி அவதூறாக பேசிவிட ஆத்திரப்பட்டு அவளை அவன் அடிக்க இன்னும் நகரும் காட்சிகளில் அவனுக்கும் காதல் பற்றிக்கொள்கிறது. எப்பிடியென்றால் முரட்டு கரும்பாறையை கீறி மெல்லியதாய் முளைவிடும் செடியை போல், கரட்டுகட்டு தாடிமுகத்தில் பூக்கும் புன்னகையில் பிறக்கிறது காதல், இதுவரைக்கும் நக்கல் நையாண்டியாய் நகர்ந்த கதை இருவரும் காதலிக்க ஆரம்பித்ததும் இன்னும் வேகமெடுக்கிறது.

இவ்வளவும் இயன்றவரை கதையை சொல்லிவிட்டு அதீத வலியை கொடுக்கும் உச்சக்கட்ட காட்சியை கொடுப்பதுதான் இப்படத்தின் இயக்குநரின் வெற்றியாக அவர் நினைந்திருந்தால் அது நூற்றுக்கு நூறு சதவிகத்தில் அவர் வென்று உள்ளார் என்றே சொல்லவேண்டும். எந்தவொரு கண்டிப்போ, முறைப்படுத்தப்பட்ட பாசப்பிணைப்புகள் அற்ற ஒருத்தன் தான் செய்யும் தவறுக்கு தன் உயிரில் நுழைந்த உறவை இழப்பதினால் மட்டுமே அவனுக்கு தான் செய்த தவறுகளுக்கு கிடைக்கும் தண்டனையென்று மவுனமாய் பதில் அளிக்கிறார் இயக்குநர்.