Tuesday, September 19, 2006

நான் ஏன் மாத்தினேன்னா

இதுவும் நான் எப்பவும் எழுதுறமாதிரி சுயபுராணந்தான். அதுவும் பெரிய சோககதை வேறங்க. என்னா நாங்க உன்னோட பதிவு படிக்கிறதே ஒரு கொடுமையான சோகம்தான்னு யாருப்பா புலம்புறது. அப்பிடியெல்லாம் பேசப்பிடாது, நாளப்பின்னே வந்துப் போற இடமா இல்லயா, நான் வேற உங்க பதிவுக்கெல்லாம் வரணுமா இல்லியா, அதுனாலே என்னாடோ சோகத்திலே நீங்களும் இப்போ கலந்துகங்க, அப்புறமா உங்களுடோதே எடுத்து விடுங்க, நானும் வந்துக்கிறேன். இதத்தான் வள்ளுவரய்யா என்னா சொல்லிருக்காருன்னா....

"நகுதற் பொருட்டுஅன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு."

குறளிலே இருக்கிறமாதிரி உங்களோட கருத்தே சொல்லிவீங்கன்னு நினைக்கிறேன். சரி இவ்வளவு பில்டப் போதும், விஷயத்துக்கு வர்றேன். ஒரு விஷயம் உங்களுக்கெல்லாம் ஆச்சரியமா இருந்திருக்கும், என்னாடா திடீரென்னு ப்ரொப்பல் போட்டோவே மாத்திடானேன்னு....!?

நானும் என்னோட பிரண்டும் கொஞ்சநாளைக்கி முன்னாடி பெங்களூரு போர(Forum)மில்லே இருக்கிற லேண்ட்மார்க்கில்லே புத்தகம் வாங்கலாமின்னு போயிருந்தோம். நாங்கல்லாம் எப்போ அங்கே போனால்லும் தமிழ்புத்தகங்கள் இருக்கிற பக்கத்திற்குத்தான் போறது. அதுக்கு என்னா காரணமின்னு நான் சொல்லமே உங்களுக்கு ஏற்கெனவே தெரியுமின்னு நினைக்கிறேன். அன்னிக்குன்னு பார்த்து பொன்னியின் செல்வனோட இங்கிலிபிஸ் பதிப்பு அந்த பகுதிலே இருந்துச்சு. நான் சும்மா இருக்கமாட்டமே அதை எடுத்து என்னோட பிரண்டுக்கிட்டே டேய் இதை வாங்குவோமான்னு கேட்டேன், எதுக்குன்னா அங்கே நாலு பொண்ணுங்க எங்களை மாதிரி புஸ்தகம் பொறுக்கிக்கிட்டு இருந்தாங்க. சரி அதுககிட்டே படம் காமிக்கிலாமின்னு.

பாவிபய நான் கேட்டகேள்விக்கு அவன் பதில் சொல்லனுமின்னு

"ஏண்டா நாமேதான் ஏற்கெனவே அதைத்தான் தமிழிலேயே படிச்சிட்டுட்டொமில்லே அதுமில்லேமா இதைப் படிச்சால்லும் உனக்கு புரியப்போகுதா" ன்னு கேட்டுப்பிட்டான்.

அப்பவாச்சிம் சும்மா நான் இருந்திருந்தா கொஞ்சநஞ்ச மானமாவது மிச்சிருக்கும்.,

"ஏன் நம்மக்கிட்டேதான் டிக்சனரி இருக்கே, இதெ எழுத்துக்கூட்டி வாசிச்சு அதிலே அர்த்தம் பார்த்துக்கிலாம்"ன்னு சொல்லித்தொலைச்சேன்.

அவ்வளவுதான் அந்த கட்டடமே இடிச்சுப் போறமாதிரி ஹெக்கேபுக்கேன்னு சிரிச்சுத் தொலைச்சானுவே எல்லா பயலுவேல்லும், சரி பரவாயில்லே நமக்கும் ஹீயூமர் சென்ஸ் இருக்குன்னு நினைச்சு நானும்தான் சேர்ந்தே சிரிச்சுத்தொலைச்சேன்.



அதிலே ஒரு பொண்ணு பிரண்டுஸ் படத்திலெ விஜய் விடாமே சிரிக்கிறமாதிரி சிரிச்சிக்கிட்டே அதுகூட வந்த இன்னோரு பொண்ணுக்கிட்டே இந்த கோமாளிதாண்டி பிலாக்கெல்லாம் எழுதுறதுன்னு சொல்லிட்டா. எனக்கு வந்திச்சே கோவம் அப்பிடியே ஒன்னும் பேசமே கொள்ளமெலெ அங்கெயிருந்து வந்திட்டேன். நம்மளை மாதிரி ஆளுக்கெல்லாம் பேசுறத விட காரியத்தைதான் செய்யனுமின்னு மறுநாளே போட்டோவே தூக்கீட்டேன். என்னோட உண்மையான போட்டோ இருந்தா தானே இப்பிடி காமெடி பண்ணுவாய்கே.

"ஹே இப்போ என்னா செய்வீங்க.... இப்போ என்னா செய்வீங்க...."




சரி போட்டோவே தூக்கியாச்சு, வேறே என்னாதான் வைக்கலாமின்னு யோசிச்சு யோசிச்சு ஒருவழியா கடைசிலே நம்ம தல கூப்பிடறமாதிரி கொஞ்சம் ராயலா வேணுங்கறதுனாலே இந்த ரிச்சிரிச் படத்தை போட்டேன்.ரிச்சிரிச் பத்தி சொல்லுணுமின்னா சொல்லிக்கிட்டே போவணும். எனக்குப் பிடிச்ச கார்ட்டூன் கதாபாத்திரத்திலே இந்த பயதான் கொஞ்சம் இன்ஸ்பிரேசனெ ஏறபடுத்தினே கதாபாத்திரம் அது. அவனைமாதிரியே நாமெல்லும் பெரிய பணக்காரனா ஆவனுமின்னு.....!

உங்களுக்கு இந்த பயபுள்ளேயே பத்தி நல்லா தெரிச்சிருக்குமின்னு நினைக்கிறேன், டாலரும் தங்ககாசுமா வாழுற பயப்புள்ளே, நமக்கு யாராவது பழனிக்கோ இல்ல திருப்பதிக்கோ போயிட்டு வந்தா வாங்கிட்டு வர்ற சாமி படம் போட்ட டாலர்தானே தெரியும்.

அப்பிறம் இன்னொரு விஷயம் இன்னொரு என்னை கவர்ந்த கார்ட்டூன் கதாபாத்திரத்திமின்னா வாரமலரில்லே வந்த ஒருத்தன் (பேரு என்னான்னு மறந்துப் போச்சு) எதையாவது வரைந்தானா அப்பிடியே உண்மையாகவே வருமில்லே, அந்த கதாபாத்திரமும் எனக்கு ரொம்பபிடிக்கும்..... உங்களுக்கெல்லாம் எந்த எந்த கதாபாத்திரங்கள் பிடிக்குமின்னு சொல்லுங்க பார்ப்போம்.