Monday, June 26, 2006

தன்னிலை விளக்கம்

தமிழ் வலைப்பூ நண்பர்களுக்கு முதற்கண் என்னுடைய ஆத்மார்த்தமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

விளக்கம்-1

என்னுடைய உருப்படியான முந்தையப்பதிவு பற்றிய தன்னிலை விளக்கம் இது. அதில் எனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் என்று தெளிவாகவே குறிப்பிட்டுள்ளேன்.ஆனாலும் ஏதோ ஒரு நெருடலாக அந்துமணி அமைந்துவிட்டதாக பின்னூட்டத்தில் சில நண்பர்கள் கேட்டு இருந்தனர்.சின்ன விளக்கமதற்கு நான் சிறிய வயதிலிருந்து வாரமலரில் அந்துமணியின் பகுதியை படித்து வருகிறேன்.அந்துமணியின் பின்புலம்,சாதி,இன்னும் பிற விசயங்கள் எனக்கு தேவையாக தோன்றவில்லை அவரின் எழுத்துக்களை பிடித்துப்போனதற்கு.தெளிவாகவே எடுத்து சொன்னேன் என்னை பொறுத்த வரை அந்துமணி ஒரு கதாபாத்திரமென,ஆனாலும் இன்றக்கு வந்த ஒரு பின்னூட்டம் இது

ஜாதிவெறியனான என்னை சரித்திர நாயகனாக்கியதுக்கு நன்றி.

Posted by அந்துமணி

நண்பர்கள் அனைவருக்கும் சிறிய வேண்டுக்கோள் தயவுச்செய்து சாதி மத சச்சரவு வேண்டாமே.நானும் தமிழ்வலைப்பூக்களை தொடர்ந்து படித்து வருகிறேன் ஆனால் சாதி,மதம் சண்டை இல்லாத வாசபூக்களை மட்டுமே. செந்தழல்ரவியை பற்றி ஒன்று பெங்களுரில் நடக்கும் வலைப்பதிவர் சந்திப்பில் அவருடன் சண்டை போட்டுக்கொள்வதாக மிகவும் அவையடக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்

விளக்கம்-2

சும்மா ஒரு தலைப்பு கவரும் தன்மைகாக மட்டுமே ஆறுxஆறு (இதுகாவது பின்னூட்டம் போடுங்க) பெயரிட்டேன்.மற்றப்படி வேற எந்த ஒரு கீழ்த்தரமான எண்ணங்கள் இல்லை.சூடு வைத்த லக்கிலுக்கிற்கு மிகவும் நன்றி.

Thursday, June 22, 2006

ஆறுxஆறு

1)தமிழ்மணத்திலே பார்த்தால் எல்லோரும் "ஆறு" ஆறுன்னு ஓரே பேச்சுன்னு சன் டிவியில் செய்தி வாசிச்சவுடன் சரின்னு நானும் "ஆறு" போடப்பொறேன்.
2)ஆறாவது படிக்கும்போது டீச்சர்க்கிட்ட ஆறாவது நாளுல மண்டையில் அடிவாங்கி ரத்தம் வந்ததை எழுதாலமா....
3)எங்க தங்கமதுரை பத்தி எழுதாலாமா....
4)எனக்கு தங்க உங்கவழி செஞ்ச பெங்களூரு பத்தி எழுதாலமா....
5)ரகுமான்,வாலி,வைரமுத்து,கமல்,மணிரத்தினம்,ரஜினின்னு இந்த பேர பத்தி ஆறு எழுதாலமா....
6)எனக்கு சரியாக கட்டுரை எழுத வராது.என்ன பண்ணாலமுனு யோசிச்சு கடைசியில

எனக்கு பிடிச்ச ஆறு தமிழ்ப்புத்தகத்தில இருந்து ஆறு பேரை போடலாமுனு முடிவு பண்ணி இந்தா ஆறு.

1) பொன்னியின் செல்வன்
2) கள்ளிக்காட்டு இதிகாசம்
3) விஜயமகாதேவி
4) கடல்புறா
5) சிவகாமியின் சபதம்
6) வாரமலர் (வாரவாரமும்)


i)வந்தியதேவன்
அ) குந்தவையின் காதல்கணவன்...
ஆ) நந்தினியின் பார்வைக்கு மயங்கதாவன்...
இ) சூதுவாது தெரிந்தவன்...
ஈ) சோழசாம்ராஜ்யம் அமைக்க உதவியவன்...
உ) தனக்கும் ஒரு ராஜ்யம் வாங்கிகொண்டவன்...
ஊ) பொன்னியின் செல்வனின் இனிய நண்பன்...

ii)பேயதேவன்
அ) இறும்புமனுசன்...
ஆ) பாசக்கார மனுசன் (மொக்கராசு,பொஞ்சாதி மேலேயும்)
இ) நாயக்கர் செத்துப்போறாப மனுசனின் தவிப்பு...
ஈ) மகனின் சேட்டையேல்லாம் பொறுத்துப்போறது...
உ) மனிதனின் பழய நினைவுகள் (காட்டுல நடக்குற மன்மத தவம்) :-)
ஊ) உடும்புப்பிடியா நின்னு காரியம் சாதிக்கிறெது...

iii) விஜயன்
அ) அவனின் அழகான அறிமுகம் திரிலோகசுந்தரிவுடன்...
ஆ) பணியாளிடம் நண்பனுக்கான உரிய பரிவு...
இ) காதல் ராஜா (திரிலோகசுந்தரி,சுடர்விழி,சோழமங்கை)
ஈ) போர் வியூகம் (அனுராதபுர முற்றுகை)
உ) எதிரியாக இருந்தாலும் பரிவு
ஊ) வெற்றியே கைவந்த போதும் பொறுமை முழு வெற்றிக்காக...

iv) இளையப்பல்லவன்
அ) காஞ்சனாதேவியின் காதலன் (நீதிமன்ற காட்சி மறக்க முடியாதது)
ஆ) ராஜதந்திரமாக மஞ்சளழகியின் தந்தையை வீழ்த்துவது
இ) அசால்ட்டுத்தனமாக நடிப்பது...
ஈ) காரியகாரன்...
உ) வர்ணிப்புத்திறமை...
ஊ) வெற்றிவீரன்.

v) சிவகாமி
அ) நாட்டியதிறமை
ஆ) பிடிவாதப்போக்கு
இ) தியாகமனப்பான்மை
ஈ) தந்தையின் மீது பாசம்
உ) தமிழ்ப்பற்று
ஊ)இயற்கையின் மீதும் காதல்

vi) அந்துமணி
அ) முகமுடி
ஆ) நல்ல ஊர் சுற்றிவிட்டு அதைப்பற்றி பீத்துவது...
இ) ப.கே.ப.வில் ஒரு விசயம் கூட விடுவதில்லை..
ஈ) கடற்கரை கூட்டச்செய்திகள்
உ) தனித்தன்மையான விமர்சனபாங்கு
ஊ) நண்பர் குழாம்

மேலே இருக்குற எல்லாம் விசயங்களும் என்னுடைய சொந்த கருத்துக்கள்....ஏதாவது மாற்று கருத்து இருந்தா வழக்கு தொடரலாம்...!

Monday, June 19, 2006

எங்கேனும் இது போல் நடக்குமா...





நம் இந்தியாவில் தவிர

Friday, June 16, 2006

நியூட்டனின் மூன்றாம் விதி (செயல் விளக்கத்துடன்)

Tuesday, June 13, 2006

முயற்சி திருவினையாக்கும்

யாரவது இது உன்னால் முடியவே முடியாதுன்னு சொன்னா

முயற்சி-1

சுற்றிப்பாருங்கள் எதாவது வழி இருக்கானு

முயற்சி-2

அட எல்லா வழிகளையும் யோசிங்க

முயற்சி-3

சரி கிளம்புங்க

முயற்சி-4

கடவுள் கொடுத்த எல்லாத்தயும் உபயோகப்படுத்துங்க

முயற்சி-5

கிரியேடிவ்'ஆ சிந்திங்க

முயற்சி-6


இதோ உங்களின் வெற்றி... தூற்றியவர் தலை குனிய

முயற்சி-7


Always remember

"Where there is a will, there is a way"


(பி.கு) நண்பர் அனுப்பிய மின்னஞ்சலில் வந்த படங்கள் இவை

Friday, June 9, 2006

சொல் ஒன்று



என் கண்மணியே நான்... ஏங்க
உனக்கு என்னவொரு ஆனந்தம்....?
இதயம் வரை இனிக்க சொல்... இல்லை
இதயம் மரிக்க இல்லயென்று (கொ)சொல்....!

Monday, May 15, 2006

இனிய ரயில் பயணங்களில்

பெங்களுருலிருந்து மதுரை சென்ற ரயில் பயணத்தில் எனக்கு கிடைத்த நெருடல்.....

நான் மற்றும் ஒரு தம்பதிகள் மற்றும் கணவரின் தம்பி ஆகிய முன்று நபர்கள் எதிர் பெர்த்தில் மற்றொரு தம்பதிகள்.முதல் தம்பதிகள் பேச ஆரம் பித்தார்கள்.ஒரு சிறிய புன்னகை கிடைத்தது எனக்கும் மற்ற இருவருக்கும்.அத்தம்பதிகளின் பேச்சு குடும்பத்தை
பற்றியும் அவர் தம்பி வேலை பற்றியும் மற்றும் முவரின் பரஸ்பர விசாரிப்புகளாக நீண்டு கொண்டிருந்தது.அது மிகவிரைவில் கேலிப்பேச்சுகளாக மாற ஆரம்ப்பித்தது.ஒரு அரை மணி நேரம் நகைச்சுவையாக நகர்த்தது.அவர்கள் முன்று பேர்களும் இரவு உணவு உண்ண ஆரம்பித்தனர்.பிறகுதான் ஆரம்பித்தது அவர்களின் இனிய உறவுமுறைகளும் மற்றும் இதுவரை கேலியாக பேசிகொண்டுவந்தவர்கள் தங்கள் உள்ளன்பு மற்றும் விட்டுகொடுக்கும் பரஸ்பர அழைப்புகளை வெளிப்படுத்தினர்கள் .இரண்டாம் தம்பதிகள் இருக்கையில் அமரபோகும் சமயத்தில் பேசிய மூன்றே வார்த்தைகள் மட்டுமே.அவை "சூட்கேசை கீழே வை" மற்றும் "போனை குடு" கடைசியாக "தூங்காலமா"...!

எனக்கு ஏற்பட்ட சின்ன நெருடல் என்னவெனில் அவ்விரண்டு தம்பதிகளும் வயது வித்திசாயம் மிஞ்சிபோனால் நான்கு அல்லது சற்று கூட இருக்கலாம்.அது ஏன் ஒரு இறுகிய முகத்துடன் வாழ்க்கை. பொதுஇடத்தில் தங்கள் போன்றேர் மகிழ்ச்சியாக வரும்போது இவர்களுக்கு என்ன.. வேற எதுவாது பிரச்சினையால் பிரயாணமா என்றால் அதுவும் இல்லை என மறு நாள் பேசும் பொழுது திருவிழா காண செல்வதாகதான் எனவும் தெரிந்தது. மறுநாளும் குறைவான பேச்சுவார்த்தைகளே... அவை இறங்கியவுடன் எங்க வீட்டுக்கு போவாம்...... ஆட்டோவுக்கு எவ்வளவு வரும்..... சூட்கேசை எடுத்துகோ..... ஸடேசன் வந்துருச்சு இறங்கலாம்...
ஏன் இப்படி அவர்களிடம் ஒரு வித்திசாயமான மனபோக்கு அது கள்ளழகருக்கு மட்டுமே தெரியுமா என்ன.

நண்பர்களே உங்கள் விளக்கம் தாருங்களேன் கல்யாணமகாதா எனக்கு..

Wednesday, May 10, 2006

கவிதை + விடுகதை



மானுடர் வயிறார

சாயும் கோபுரங்கள்.....?




கண்டுபிடிங்க பார்க்கலாம்......?

மிகவும் பிடித்த கவிதை

முதல் வேலை
என்ன இது வேலை
எனக்கு பிடித்தவாறு
உடை அணிய உரிமை மறுக்கும் வேலை!!!
என் தாய்மொழி,
என் நாவில்,
எட்டிப்பார்க்ககூட தடை போடும் வேலை!!!
போலியான புன்னகையொன்றை,
நிரந்தரமாய் என் முகத்தில்ஒட்டிவிட்ட வேலை!!!
சரித்திரம் படைக்கவேண்டும்!
புரட்சியாய் புறப்படவேண்டும்!
தேசத்தை நிமிர்த்தவேண்டும்!
எனும் கனவையெல்லாம்கம்ப்யூட்டரில் கட்டிப்போட்டவேலை!!!
காந்தி விரட்டிய,வெள்ளையன்
இரவில் நித்திரை காண
என் நித்திரை கலைக்கும் வேலை!!!
இங்கு கற்றதையும்,பெற்றதையும்,
வெளிநாட்டு டாலருக்கு
அடகுவைத்துவிட்ட வேலை!!!
குவியலாய் இறுகிப்போன
இந்த வெறுப்பையெல்லாம்
சுக்குநூறக சிதறடித்தது,
"இருதுளி" கண்ணீர்!"
ரெம்ப சந்தோசமா இருக்குடா"
முதல்மாச சம்பளத்தை நீட்ட,
தாயின் கண்ணில் தோன்றியஒருதுளி!"
ரெம்ப கஷ்டமாக இருக்குடா"
வெகுநாளாய் வேலை தேடும்,
நண்பனின் கண்ணில் தோன்றியமற்றொரு துளி!!
-K.கார்த்திக் சுப்புராஜ்

Tuesday, April 25, 2006

முதற்வணக்கம்

என்னுடய அனுபவம், கவிதைகள் எல்லாமே இந்த பதிப்பில் வெளிவர உள்ளது... தயவு செய்து ஆதரிக்கவும்....