பிரிவாற்றாமை

பிரிவுறுவலி நீங்க உணர்வுகள் பிரவாகமெடுத்து
உன்னை இறுக்கி அணைக்கத் துவங்குகிறேன்...
ஆனால் உந்தன் உணர்வுகள் உணர்த்தியது என்னுள்
மகவை அணைக்கும் தாயென...!
பிரிவுற்றவேளைகளில் என் நினைவுறுத்தவேண்டி
என்ன செய்வாயென கேள்விதொடுத்தாய்..?
உன் புகைபடமென்றேன் நான்,
நீயோ உன்னுடைய நகக்கீறல்கள்
எனபதிலுறுத்தாய்...!
கடிதங்களிலும்,கைப்பேசியிலும்
கவிதைகளாய் எழுதித்தள்ளுகிறாயே என
உன் வினாவிற்கு பகிரங்கமான விளக்கம் இது...
மானசீகமாய் கடவுளைத் தொழவேண்டி
ஜபிக்கும் பக்தர் வகையறாக்களில்
நானும் ஒருவன் தான்....!
கிள்ளைமொழி பேசிக் கொல்லும்,
கிளியொருத்தி குரலை கேட்டு கிளர்வுற
தொடர்புறுகிறேன்.....!
கிடைக்கும் சில மெய்நிகர் முத்தங்கள் எனக்கு...
இன்னும் சில கவிதைகள்
வாசிக்கும் உமக்கு....



தேடிச் சோறுநிதந் தின்று -பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி -மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிப் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
