Sunday, November 25, 2007

புரொப்பசர் ஞானபிரகாசம்

பாஸ்கர் என்ற நடிகர் இவரை அழுது வடியும் தமிழ் தொலைக்காட்சி நாடகங்களிலும், தமிழ் திரைப்படங்களிலும் துக்கடா வேடங்களிலும் நாம் பார்த்திருக்கலாம். சமிபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன மொழி படத்தில் புரொப்பசர் ஞானபிரகாசம் என்ற கதாபாத்திரமெடுத்து நடித்திருப்பார். படத்தில் அவர் பைத்தியமான மனநிலை கொண்டவராக சித்தரிக்கப்பட்டுருப்பார். அதாவது பழையநினைவுகளை இன்னும் மனதில் வைத்துக்கொண்டு நிகழ்காலத்தில் நடக்கும் எதுவும் தெரியாமால் அதே பழைய காலகட்டத்திலே வாழ்ந்து வருவார். அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றமாதிரியே எந்தவொரு மிகைப்படுத்த நடிப்பும் இல்லாமால் எதார்த்தமான முறையில் அழகாவே நடித்திருப்பார். அவர் படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் படத்தின் கதையோட்டத்தை இணைந்தே வருவதும் இன்னும் மிக அழகாகவே இருக்கும்.

அதுவும் இறுதிக்காட்சிக்கு முன்னால் தன்னுடைய நிலையை நினைத்து உணர்வுகள் வெடித்து அழும் பாஸ்கரின் நடிப்பை பார்த்து உடனே எனக்கு சட்டென கண்களில் நீர் கோர்த்து கொண்டது. அந்த காட்சியில் தொடங்கும் இந்த வீடியோ'வே பாருங்க.




இந்த கதாபாத்திரத்தை யாராவது முண்ணனி நடிகர் ஏற்று செய்து இருந்தால் அவருக்கு பலவகையான பாரட்டுக்களும்,விருதுகளுக்கும் பரிந்துரைகள் கொடுக்கப்பட்டுருக்கும். தமிழ் திரைப்படங்களில் துக்கடா கதாபாத்திரம் ஏற்று நடித்து என்னாதான் சிறப்பாக செய்தாலும் அவர்களுக்கு என்னதான் பெரிய பெயர் கிடைத்து விடப்போகிறது? அவர்களுக்கு கிடைக்கும் சொற்ப சம்பளத்திலில் கொஞ்சமாய் அதிகமாக கிடைக்கும். ஞானபிரகாசம் கதாபாத்திரமாய் வாழ்ந்து காட்டிய பாஸ்கர் சமீபத்தில் வெளியான படங்களில் கதாநாயகர் பின்னால் அலையும் அதே கோமாளி நண்பர்களில் ஒருத்தராக தான் வந்து போனார்.