Thursday, August 9, 2007

அபி அப்பாவும் நானும்....

என் சோகக் கதையே கேளு தாய்குலமே'கிற பாட்டுதான் இப்போ டெய்லி வேலை செய்யுற இடத்திலே கேட்கிட்டு இருக்கேன். கொஞ்சநாளுக்கு முன்னாடியே சொந்த செலவிலே போயி செய்வினை வைச்சிக்கிட்டே கணக்கா எங்க கம்பெனி நெட்வொர்க்'லே செக்யூரிட்டி அதிகப்படுத்தமின்னு வெள்ளக்கார தொரை'க்கு மயில் அனுப்ப, அவன் அடுத்த பத்தே நாளிலே கூகிள் சேட்,மெயில்,யாகூ மெயில்.பிளாக்கிங்க்'ன்னு எல்லாத்துக்கும் ஃபீயுஸ் பிடுங்கிட்டான். அதிலேயிருந்து ஆபிஸிலே வேலையை பார்க்க முடியலைங்க. என்னிக்காவது ஏதாவது கிளண்ட் நெட்வொர்க் கிடைச்சு சேட்'லே லாகின் பண்ணினப்போ நம்ம அமீரகத்து கைப்புள்ள வந்து பிங் பண்ணினாரு... விட்டுருவோமா அவரே???

அபி அப்பா:- "என்னாய்யா? ஒனக்குள்ளே அப்பிடியொரு சோகம்... இந்த பாட்டெல்லாம் கேக்குறே? அதை கஸ்டம் மெசஜா வேற போட்டுருக்கே?"

நான்:- "அண்ணே இந்த பரந்த விரிந்த பெண்களூரூலே எனக்கொரு கேர்ள் ஃபிரண்ட் இல்லேண்ணே??"

அ.அ:- "அப்பிடிண்ணே நீங்க எனக்கொரு கேர்ள்ஃபிரண்ட் வேணுமிடா'ன்னு பாய்ஸ் பாட்டுலே கேட்கனும்? நீ ஏன் 1986ல் வந்த பாக்கியராஜ்/சுலக்ஷனா நடிச்ச தூறல் நின்னு போச்சு படத்திலே இருந்து பாட்டு கேட்கிறே? அதுவும் சுலக்ஷனா அறிமுகமான அதுமில்லாமே அவங்களுக்கு அப்போ 16 வயசு'ப்பா! அந்த பாட்டே கூட நம்பியார்/பாக்கியராஜ் பாடுவாங்க. அப்புறம் நம்ம செந்தில் கூட கோரஸ் பாடுவாரு..பாக்கியராஜின் மப்லர்&கழி சண்டை பேமஸ் அந்த படத்துலஇன்னும் வேண்டுமா டீடெய்ல்???மூச்சு வாங்குது??

நான்:- "அண்ணே எப்பிடிண்ணே இப்பிடியெல்லாம்? ஒன்னே கேட்டா பதினொண்ணு'னு சொல்லுறீங்க??"

அ.அ:- "தம்பி அதெல்லாம் நம்ம தங்கமணி'கிட்டே தலையிலே அடிவாங்கதினாலே இப்போ கொஞ்சம் தெளிவா இருக்கு... கொஞ்சம் கூட கலங்கவே இல்ல...."

நான்:- "அண்ணே! கல்யாணம் ஆகிட்டா அப்பிடியெல்லாம் கலங்கி போயிருவோமா?"

அ.அ:- "யோவ் தம்பி அப்பிடியெல்லாம் வெவகாரமா'லாம் கேள்வி எழுப்பப்பிடாது! புரியுதா? அடிவாங்கினாலும் சரி பூரிகட்டையோ இல்லே சில்வர் கரண்டி ஒடைச்சி போனாலும் வெளியே வர்றப்போ ஒன்னுமே நடக்காத மாதிரி இருந்துரணும்... அவ்வளோதான் அப்புறம் எப்பிடி நாமே கலங்கிருக்கோமின்னு மத்தவங்களுக்கு தெரியப்போகுது?"

நான்:- "துருபிடிச்ச இரும்பு பொட்டி மாதிரி இருந்த கண் ரெண்டேயும் நீங்க வாக்குமூலம்கிற சாவியாலே தொறந்திட்டிங்கண்ணே?" ஏண்ணே நீங்க ஆல் இந்தியா ரேடியோ'லே நீயூஸ் வாசிக்கிறதுக்கு அப்ளை பண்ணதா கேள்விப்பட்டேனே? அது உண்மையா??"

அ.அ:- "யோவ் இப்போ நீ பாரட்டுறீயா? இல்ல கலாய்க்கீறீயா?? ஒனக்கெல்லாம் நான் வாங்கிறமாதிரி வாங்கினதாதான் புத்தி வரும் ஆமாம் சொல்லிட்டேன்!"

நான்:- "அண்ணே! எங்கவீட்டிலே பொண்ணு பார்க்கபோறேன்னு எங்க ஊருக்குள்ளே கலவரம் பண்ணிட்டு இருக்காங்க..."

அ.அ:- "ஓ அப்பிடியா! நான் வேணுமின்னா நல்ல பொண்ணா பார்த்து சொல்லவா?"

நான்:- "அண்ணே அது எப்பிடிண்ணே? உங்களுக்கு நல்ல பொண்ணு பார்க்க தெரியும்?"

அ.அ:- "யோவ் தப்பா புரிஞ்சுக்காதே? நான் சொல்லவந்தது இப்போ என்னைமாதிரி ஒனக்கும் நல்ல பொண்ணா? இப்பொ என்னை உங்க அண்ணி அடிச்சி தொவைச்சி காயப்போட்டாலும் மதியம் சாப்பிடுறதுக்கு சோத்தை தட்டிலே வைப்பாங்க... அந்தமாதிரி நல்ல பொண்ணா'ன்னு சொல்ல வந்தேன்....

நான்:- "எப்பிடிண்ணே இம்புட்டு சோகத்தையும் தாங்கிட்டு சிரிப்பா'லாம் எழுதுறீங்க?"

அ.அ:- "அப்பிடி இல்லாமே உள்ளுக்குள்ளே இருக்கிர சோகத்தை பூராவும் எழுதுனானே ஊருக்குள்ளே போறேப்போ சோத்துக்கே ஜிஞ்சா அடிக்கனும்... சரிய்யா, ஒனக்கு பார்க்கிற பொண்ணு நம்ம தீபா வெங்கட் மாதிரி ஒசரமா செவப்பா பார்த்திருவோமா?"

நான்:- "என்னா? அந்தம்மா நான் பத்தாவது படிக்கிறோப்பே ஏதோ நாடகத்திலே மூக்கு சிந்திட்டு இருந்துச்சு, இன்னமு அதை தான் பண்ணிட்டு இருக்கு? அவங்களை மாதிரி'ன்னு சொல்லுறீங்களே? ஒங்களுக்கே நல்லாயிருக்கா?"

அ.அ:- "ஐயா. ராசா அந்த அம்மணிக்கு என்னாய்யா? அவங்களுக்கு இன்னமும் கல்யாணம் கூட ஆகலை.... அவங்கமட்டும் ஹீம்'னு ஒத்த வார்த்தை சொல்லட்டும்! நான் கலியாணம் கட்டிக்கிறேன்."

நான்:- "...."

அ.அ:- "என்னாய்யா ஒன்னுமே சொல்லமாட்டங்கிறே?"

நான்:- "இல்ல ஒங்க வீட்டு நம்பரை தேடிட்டு இருந்தேன்... இதானான்னு பார்த்து சொல்லுங்க... 98*********.. அட ரிங் போகுது.. இப்போ நீங்க சொன்னத அப்பிடியே வரிக்கு வரி அண்ணி'கிட்டே சொல்லுறேன்"

அ.அ:- "யோவ் நல்ல இருக்கிற குடும்பத்திலே குண்டு வைக்காதீய்யா? அய்யய்யோ இங்க இப்போ மொபல் சிக்னல் வேற கிடைக்கலேயே?? ஏதாவது சொல்லி கலவரத்தை மூட்டி விட்டுறாதேய்யா?"