Friday, August 25, 2006

நானும் என் (ச)முகங்களும்



மரிக்கும் மனிதங்களும், பிணம்பொறுக்கிய கொடுமைகளும்
தூங்கிஎழும் முன்னரே தலைப்புச்செய்திகளாக
செவிமடுக்கும் வேதனைகள் வேண்டாமென
உறக்கத்திலும் தொழும்கரங்கள்....!




இம்மாந்தரின் கடும்வன்மங்களும் சுடும்வசவுகளும்
தாங்கி பொறுத்தருளும் வல்லமையும்
எந்தாயிடம் உணவுவேண்டி விளிக்கும்
கண்ணீர்கோரா கலங்கிய கண்களுடன்....!




என் இணைபோட்டிதனை உருவாக்கி
அத்தொன்று பொறமைகொளச் செய்யவல்லா
உனக்குமொரு வழிதனைக் கொண்டுச் செல்லவேண்டி
உன்னைவிட உயரப்போகவேண்டியே உயர்ந்தேன்....!




பிறரிடம் தவறுகளும் வலிகளும் தரச்செய்யும்
கடுமை நிறைந்த போக்குகளுமாகிய
கறைபடிந்த வதனமாய் பெற்றோனோ
வாழ்வோட்ட காலவெளியில்....!




வானவீதிகளிலேயே திரிந்தலையும் கடவுள்களையும்
மண்வீதிகளில் வேடமணிந்த மனிதர்களையும்
எதிர்கொள்ளும் திறம்வேண்டும்
முன்னதை ஆவலுடன் பின்னதை வெறுப்பென....!




எல்லைக்கோட்டமையா வக்கிரகோரங்களும்
நிலைகுலைக்கும் கேடுதருணங்களும்
என்னுளும் எனைச்சார்ந்த வழிமக்களிலும்
களையகோரும் ஆற்றல்வேண்டி என்னின் சிந்தை....!