Thursday, August 17, 2006

எஸ்.கே. அவர்களின் கவனத்திற்கு

திரு.எஸ்.கே ஐயா அவர்களுக்கு என்னுடைய முதற்கண் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய முந்தைய கவிதை பதிவில் பிழைகளை சுட்டிகாட்டியதற்கு. உங்களின் பெரிய மனது என்னை நிலைகுலைய வைக்குதய்யா. தாங்கள் எங்கே.. அற்பன் நான் எங்கே,
நீங்கள் வந்து என்னிடம் மன்னிப்பு என்ற வார்த்தையை உபயோகபடுத்தலாமா..?

நான் வெள்ளிக்கிழமை திருப்பதி போற அவசரத்தில எதையும் உருப்படியாக செய்யாமால் போய்விட்டேன். முதலில் பிரிவாற்றண்மை'னு தலைப்பு வச்சிட்டு அதுல கால் மிஸ்ஸாடுச்சின்னு கப்பி சொன்னவுடனே திரும்ப தலைப்பை மாற்றினேன்.

தரிசனம் முடிந்து சொந்த ஊர் மதுரைக்கு சென்றுவிட்டேன். அதன்பின் அதற்கு வந்த பின்னூட்டங்களை நான் பார்க்க முடியவில்லை. நீங்கள் இட்ட பின்னூட்டத்தை திங்கள்கிழமை அன்றே நான் பார்க்கநேரிட்டது. ஆனால் அந்த இடத்தில் Unicode எழுத்துகள் சரியாக தெரியவில்லை.ஒரு பின்னூட்டம் நீங்கள் இட்டது என்பதனால் படிக்கமாலயே பிரசுரித்தேன்.

புதனன்று ஆபிஸ் வந்து பார்த்தப்பதான் முழுவிபரங்களும் தெரிந்தது. தாங்களின் பரித்துரைகளை உடனே நிறைவேற்றி விட்டேன். முக்கியமான ஒன்றான தலைப்பை மாற்றவேண்டும் என்பதனால் தமிழ்மணத்தில் சென்று தலைப்பை மாற்றக்கோரி விண்ணப்பமிட்டேன். இதுவரையில் எனக்கு எதுவும் தகவல் வரவில்லை.

இவ்விளக்கங்கள் உங்களிடம் தனியாக சென்றடைய தாங்களின் மின்னஞ்சல் முகவரி என்னிடம் இல்லை. ஆகவே இதையே பதிவாக இடுகிறேன்.

வேல்தாங்கி அருள்பாலிக்கும்
என்னப்பன் முருகனின்
புகழ்பரப்பும் தாங்களின்
கரங்களை பற்றியெடுத்து
நன்றிதனை நவில்கிறேன்.
தாங்களின் இருப்பிடதிசை
நோக்கி மெய்நிகராய்.