Friday, July 28, 2006

காதலியை காதலிக்கிறவர்களுக்காக



இந்த மாதிரி என்னைபத்தி
கவிதை எழுதிறதுதான் உனக்கு வேலையா
வேற பொழப்பில்லையா என வினவுகிறாய்!
சரிதான் உன்நினைப்புதானடி என்னோட
பொழப்பை கெடுக்கிறது....






உன் வீட்டுக்கு முறைவாசல்
வருகின்றபோது உங்கள்
பகுதி செய்தித்தாள் போடும்
பையனிடம் ஒரு பரஸ்பர ஒப்பந்ததுடன்
தற்காலிகமாய்
அந்த வேலை என்னிடம்...






நீ அனுப்பிய கவிதையை
என் தோழிகள் படித்துவிட்டர்கள்
என கோபத்துடன் வார்த்தைகளாக
கூறுகிறாய்,
ஆனால் உன் கண்களில்
அன்று பொறமைதீ
எரிந்திருக்கும் எனக்கு
தெரியாதா என்னா.....






உனக்காக
காத்திருந்து காத்திருந்து
ரொம்ப கடுப்பா போச்சுடின்னு
பொய் கோபம் வெடிக்கிறது
என்னுள்
அதற்கு நீ கொடுக்கும்
சமாதானமுத்தங்களை
வேண்டி...






திரும்ப திரும்ப
ஒரே மாதிரிதான்
உனக்கு ஒரு வேலையை
செய்ய தெரியுமா என
கேட்கிறாய் விழிக்கிறேன் நான்
உன் கன்னங்களிலிருந்து
என் உதடுகளை
எடுக்கும் பொழுது....






புத்தகத்தை திரும்பவேண்டி
உன் வீட்டிற்க்குள் நுழையும் முன்னே
அண்ணே உங்களுக்கு யார் வேணும்
விளிக்கிறாள் உன் அண்ணன்மகள்
உன்னிடமிருந்து புத்தகத்தை பெற்று
கிளம்பி வாசலடையும் முன்னே
செல்லம் அவரு உனக்கு மாமா
அண்ணன் இல்லையின்னு எனக்கு
மட்டுமே கேட்கும்படி
சத்தமாய் சொல்கிறாய்.....






திபாவளியன்று
பலகாரங்களை சுமந்து
முதன்முறையாக என்இல்லத்தினுள்
பெளர்ணமியென
நுழைகிறாய்...
விடயமாய் வலதுகாலை
முன்வைத்து...






உனக்கு கித்தார்
வாசிக்க தெரியுமாடா..
வினவும் நீ
நான் என்னவென
பதிலளிப்பேன் என
அறிந்தும் வார்த்தைகள்
வரட்டும் என்று
விஷமத்துடன்
என் கண்களை
ஊடுறுவுகிறாய்....






உன் தோழியிடம்
பேசும்பொழுது அவளை
கட்டிபிடிக்கிறாய்
ஹீம் எனக்கு இப்போது
விளங்கின்றது உன்னுடைய
குறிப்பால் உணர்த்தும் தன்மை...







தலைக்கு சிக்கெடுக்கும் பொழுது
உன்னை மாதிரி நல்ல லூசா
இருந்தா என்னா என
என்னை சுட்டிகாட்டி
உலகத்திற்கு தெரியாத
உண்மையை அறிவித்துவிட்டதாக
சிரித்துக்கொள்கிறாய்...

Tuesday, July 18, 2006

லிவிங்ஸ்மைல் வித்யாவுடன் நேரடி சந்திப்பு

சென்ற சனிக்கிழமை மதுரையில் லிவிங்ஸ்மைல் வித்யாவை சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்தது.வெள்ளிக்கிழமை மின்னஞ்சல் செய்து மேடத்திடம் அனுமதி வாங்கினேன்.சனிக்கிழமை மாலை ஏழுமணிக்குள் சந்திக்கலாம் என்று.ஆனால் பஸ்ஸில் சென்ற அலுப்பில் அன்று மதியம் தூங்கி இரவு ஏழுமணிக்குத்தான் எழுந்தேன்.மிகவும் தயக்கத்துடன் போனை ஒத்தி எடுத்து மேடம் மன்னிஞ்சிருங்க கொஞ்சம் தூங்கிட்டேன்.நீங்க கோவித்துக்கொள்ளாமல் சர்வோதயா இலக்கியப்பண்ணை இப்போது வரமுடியுமா என்றேன், ஓ தாரளமா என எதிர்முனையில் பதில் வந்தவுடன்தான் அப்பாடா என்றிந்தது.ஆனா 9.30க்குள் அவர் தங்கியிருக்கும் விடுதிக்கு சென்றுவிடவேண்டும் என ஒரு கண்டிசனுடன்.

லிவிங்ஸ்மைல் வித்யா

எட்டு மணிக்குத்தான் நானும் அவரும் சர்வோதயா போய்ச்சேர்ந்தோம்.எதாவது ஒரு சந்திப்பு நிகழும்பொழுது பின்ணனி இசையில் யாராவது ஒருத்தர் குறித்து விளக்கவுரை வாசிப்பர்.அட்லிஸ்ட் ஒரு மியூசிக்காவது வரும்.எங்களுக்கும் நல்ல மியூசிக்கா தான் கொடுத்தய்ங்கே.ஹீம் சார் அலைஒசை எங்கேருக்கு... அண்ணே கடல்ப்புறா எங்கேருக்குனு. நான் லிவிங்ஸ்மைல் வித்யாப்பத்தி புத்தகக்கடையில் ஒன்றும் கேட்கவில்லை.ஏனெனில் 8.30மணிக்கு மிகச்சரியாக அக்கடை பூட்டிவிடுவேர் எவ்வளவு பெரிய வியாபரமெனிலும்.அவருக்கு நம் தமிழ் வலைப்பூக்கள் நண்பர்கள் சார்ப்பாக புத்தகங்கள் பரிசளிக்கலாம் என்று என்னுடய தேர்வாக வைரமுத்துவின் கவிதாயினி காக்கைப்பாடினியாரின் சரித்திரம் சொல்லும் வில்லோடு வா நிலவே எடுத்துக்கொடுத்தேன்.அவர் என்னோமோ இரண்டு புத்தகங்களை செலக்ட் செய்தார்.நான் வழக்கம் போல் சாண்டில்யன் முன்று புத்தங்களை தூக்கிவந்தேன்.புத்தகக்கடையிலே சிலர் அவள்விகடனில் வந்தவர் போல் உள்ளதே என தங்களுக்குள் விசாரித்துக்கொண்டிருந்தனர்.

புத்தக பர்சேஸ் முடித்தவுடன் அருகிலிருக்கும் ஹோட்டல் சென்று பின்னனி இசையாக இட்லி,மூனு தோசைன்னு சத்தத்துடன் சாப்பிட்டுக்கொண்டே பேச ஆரம்பித்தோம்.வித்யா சொல்லுங்க அவள்விகடனில் சொல்லாததை இப்போ என்று கேட்டவுடன் என்னை ஒரு மொறை மொறைச்சிட்டு என்னோட பேரு வித்யா இல்ல...லிவிங்ஸ்மைல் வித்யான்னார்.ஏதோ ஒரு படத்தில் கவுண்டமணி என்பேரு பக்கிரி இல்லை பிக்பாக்கெட் பக்கிரினு கர்ச்சிப்பை வெச்சு ஒரு ஸ்டைல் செய்வார்.அதுப்போல் இவரும் செய்வாரனு பயந்தேதான் போனனேன்.அவரும் அதே போல் ஒரு கர்ச்சிப்பை ஸ்டைலாதான் கழுத்தில் கட்டி இருந்தார்.எனவே தமிழ்க்கூறும் நல்லுலகத்திற்கு ஒரு வேண்டுகோள் வித்யாவை லிவிங்ஸ்மைல் வித்யா என்றே தயவுச்செய்து அழைக்கவும்.

என்னைப்பற்றியும் என் குடும்பத்தையும் விசாரித்தார்.நானும் அவரைப்பற்றியும் விசாரித்தேன்.அப்படியே பேச்சு வலைப்பூக்களை பற்றிவந்தது.பிடித்தவலைப்பதிவரில் பொன்ஸ்,உஷா,துளசி கோபால் ஆகியோரை குறிப்பிட்டுச்சொன்னார்.எனக்கு பெங்களுர் வலைப்பூ சந்திப்பில் கிடைத்த பின்னூட்ட அட்வஸை அவருக்கும் கொடுத்தேன்.மரணத்தை பற்றி கவிதையை விசாரித்தப்போது அது தனக்கு வாழ்க்கை தந்த அனுபவத்தின் சில வரிகள் என்றாள். சென்னையிலிருந்த அனுபவங்கள் பூனே சென்ற அனுபவங்கள் பற்றியும் விவரித்தாள்.இன்னும் நிறைய விசயங்களை பதிவேத்த போவதாகவும் சொன்னாள்.ஒரு நிமிடம் ஆடிதான் போனனேன்.சில விசயங்களை நான் சொல்லி உங்களுக்கு தெரிவதைவிட அவளின் எழுத்துக்கள் புரியவைக்கும் நமக்கு மிக நேர்த்தியாக.அதற்க்குள் சில மணித்துளிகள் கரைந்து ஒன்பதரை தொட ஆரம்பித்தவுடன் ரயில்சப்வே வழியாக அவளின் விடுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.இப்பொழுது ரயிலும்,பயணிகளும் சேர்ந்து எழுப்பும் ஒசைகளுடன்....

கடந்தவை பற்றி பேசி அவளை மேலும் மேலும் கஷ்டப்படுத்த வேண்டாமேனே அப்புறம் உங்க எதிர்கால லட்சியங்களை சொல்லுங்களேன் என்றவுடன் மிகவும் ஆர்வத்துடன் விவரிக்க ஆரம்பித்தார்.தன்னைப்போல் உள்ளவர்களை பற்றியும் அவர்களை பற்றி வந்துள்ள படைப்புகளை சேகரிப்பதாகவும் சில மற்ற விசயங்களும் எடுத்துரைத்தாள்.இதற்கு நிறைய செலவாகும் பட்சத்தில் என்ன செய்வது சிலரிடம் பணஉதவி நாடலமே என கேட்டேன்.அவளின் அதற்கு தந்த பதில் மிகவும் ஆச்சாரியமுட்டியது.வள்ளவப்பெருத்தகையின் வினை பற்றிய குறள் தான் நினைவுக்கு வந்தது.கடைசியாக உலகத்தின் இடுச்சொற்களான அவன்,அவள்,அது என்பதில் அது என்றிலிருந்து அவள் என்றே உலகம் மாற்றி அழைக்க ஆரம்பித்தது எப்படி இருக்கிறது என கேட்டவுடன் அய்யோ எதோ தவறான கேள்விக்கேட்டு விட்டதாக பயந்து மனது துடித்தது.ஆனாலும் சிறிதும் தயக்கமோ கோபமோ இன்றி அவளிடம் இருந்து தெறிந்தன வார்த்தைகள்.
விவரிக்க இயலாத சந்தோசமாதான் இருந்தது.அதற்கு தான் இவ்வளவு போரட்டங்களும்.இந்நிலை எனக்கு மட்டுமில்லை, இவ்வுலகில் என்னைப்போல் இருக்கும் மற்றவர்களும் தங்கள் நிலை மாறி முன்னுக்கு வரவேண்டுமென.


ஆயிரத்தில் ஒருத்தி என்பதை சும்மா சொல்ல வில்லை.அவளின் மனஉறுதி வலிமையின் அடுக்குகள் சேர்ந்த கோட்டைதான் எனக்கு புரிந்தது.நம்மைப்போல் பெற்றோர்,குடும்பமென பாதுக்காப்பு வாழ்க்கையில் சாதனை புரிவது மிகவும் எளிது.ஆனால் உலகம் ஒதுக்கிய தருணங்களிலும் தானும் ஒரு பிரஜை என அதுவுமொரு வெற்றி பிரஜையாக நிருபித்தவள் அவள்.

உங்களுக்கும் எனக்கும் ஒரு நல்ல சகோதரதோழியாய் ஒரு இனிய வரவு அவள்.விடை பெற்றேன் விடுதியின் வாசலிருந்து அப்போது... இப்பொது ஒரு கனமான ஆனால் நிறைவான மனதுடன்.....

Friday, July 14, 2006

அடடே வாங்க.. வாங்க.... (பாகம்-1)

எதாவது புது விசயம் சொல்லிருப்பேன் நினைச்சு வந்திருந்திங்கனா என்னை மன்னிச்சுருங்க.இந்த மாதிரி எல்லாம் எழுதலாமுனு முடிவுக்கு வந்ததே லக்கிலுக் பதிவு பார்த்துத்தான்.மனுசன் ஒரு நாளைக்கி ரெண்டு பதிவு கணக்கப்போட்டுறார்.அனோகமா ஏதோ சாப்ட்வேர் கம்பெனியில் கஷ்டமான வேலை பாப்பார் போலிருக்கு.அதான் மச்சிக்கு நிறைய நேரம் கிடைக்கிது.நானும் ஒரு முடிவுக்கு வந்துட்டேன்.உருப்படியில்லாத ஒவ்வொரு விசயமா உருப்படியா பதிவேத்திறதுனு.

அப்பா சாமிகளா நான் எந்த இடத்திலேயும் லக்கிலுக் உருப்படியா ஒன்னும் எழுதவேல்லைனு சொல்லலை.கலகத்த மூட்டிவிட்டு கம்முன்னு கப்பளா கட்டைய கக்கத்தில் வெச்சிக்கிட்டு போயிறாதிங்க....

விசயத்துக்கு வர்றேன்.என்னானு நீங்களை படியுங்களேன். நான் அஞ்சாவது படிச்சப்போ எங்க சித்தாப்பா பைக் ஒன்னு எங்கள் குடும்ப நண்பரிடம் இருந்து வாங்கினார்.அப்போ என் சித்தாப்பா இந்த வண்டி எண் கூட்டுத்தொகை 8 வரலை அதானல கூட எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குனு சொன்னார்.என்னா கூட்டுத்தொகை என்னானு எனக்கு ஒரே குழப்பம்.குடும்பநண்பர் அவர்களே எனக்கு விளக்கமளித்தார்.அன்னக்கி பிடித்தது ஒரு வியாதி எந்த பைக் இல்ல காரு எந்த நம்பர் போர்டு இருந்தாலும் அதோட எண்களை கூட்டுத்தொகை பார்க்கிறது.எவ்வளவு அவசர வேலையில் வெளியே போனாலும் சரி இந்த பழக்கம் போக மாட்டேன்னு உயிரை வாங்குது.
ஒரு தடவை நானும் என் பிரண்டும் பைக்கில் சென்று வரும் போது இன்னொரு பைக் மோதி விழுந்தப்போ கூட அந்த இடிச்ச பைக்கோட எண்ணை கூட்டிப்பார்த்தேன்.இங்கே பெங்களுரு வந்ததுக்குப்பறம் அந்த கரும்மாத்தரம் ரொம்ப தான் வளர்ந்துப்போச்சு.ஏன்னா கொஞ்சநஞ்சமா வண்டிவாகனங்களிருக்கு இங்கே.

நானும் எவ்வளவோ மைண்ட் டைவர்ட் பண்ணிப்பார்த்துட்டேன்.ஹீகூம் ஒன்னும் முன்னேற்றத்த காணோம்.ஒரு தடவை டாக்டர்கிட்டே போனப்பே இதை பத்தி கேட்டேன்.அவரு போட்டார் ஒரு குண்டை.என்னனா அது ஒரு மனவியாதியாம்.அதுக்கு பேரு வேற என்னாமோ போபியான்னு சொன்னார்.அது இருந்தா இப்படிதானாம் பைசாக்கு லாயிக்கில்லாத வேலை எல்லாம் பார்க்கச்சொல்லுமாம். அதிலிருந்து எனக்கு மட்டும்தான் கடவுள் அருள் கொடுத்திருக்காரா இல்லை மத்தவங்களுக்கும் இருக்கானு ஒரு சந்தேகம்.இப்போ தீர்ந்துப்போச்சு ஏன்னா இனம் இனத்தோட சேருமுனு எங்கூரு சொலவாடை சொல்லுவாங்க.நல்ல வேளை உங்களுக்கும் அந்த போபியா இருக்கும் போல அதுதான் இதே முழுசா படிச்சிக்கிட்டு இருந்திங்க இல்ல........!!!!!!!!

இது பாகம் ஒன்னுதான்.இன்னும் நிறைய இருக்கு, ஒவ்வொண்ணா எழுதுறேன், வந்து படிங்க...நமக்கு நாமே அதரவு குடுத்தா தான் உண்டு....!

எப்போ தான் தீருமோ இந்த வியாதி நமக்கெல்லாம்..... :-)))))

(பி.கு:- குடும்பநண்பர் யார் எனில் மாண்புமிகு தவத்திரு குன்றக்குடி பொன்னாம்பல அடிகளார்.இது நடந்து 15 வருடங்களாகின்றன.இன்னமும் என் முழு பெயரையும் நினைவில் வைத்து அழைப்பார்.அவருடைய இளமை வயதிலேயே தமிழ்ப்பற்று மற்றும் பேச்சாற்றல் அருமையானது இன்னமும் கூட.என்னுடைய சிறிய வயதில் ஒரு அருமையான தாக்கத்தை ஏற்படித்திய நபர்களில் அடிகளார் முதன்மையானவர்.மேலும் அவருடைய தகவல்களை அடிகளாரின் அனுமதிப்பெற்று ஒரு பதிவிடுகிறேன்.)

Wednesday, July 12, 2006

சிவாஜி தீம் பாட்டு

சிவாஜி படத்தோட தீம் மீயூசிக்காம்.கேட்டுப்பாருங்க இது எந்தளவுக்கு உண்மையினு தெரியலை.....

எனக்கு ஒரு நண்பர் மின்னஞ்சலில் அனுப்பியது.

Monday, July 3, 2006

குரங்கு சேட்டை