Monday, September 24, 2007

ஹைய்யா...கெலிச்சிட்டோம்........ :)

கிரிக்கெட் விளையாட்டில் பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் பங்குப்பெற்ற இறுதியாட்டாத்தை கண்டுகளித்த சந்தோஷத்திடன் இடப்படும் பதிவு. ஜெயிக்க வேண்டிய மேட்ச்'ஐ இப்பிடி கோட்டை விட்டுருக்கனுகளே, இவனுகளே என்னத்த சொல்லித் தொலைக்கிறது'ன்னு புலம்ப வைச்சிருவானுகளோன்னு வேற பயம். இன்னிக்கு சாயங்காலம் அஞ்சுமணிக்கே ஆபிஸிலே பாதி பேத்த காணாம். அம்புட்டு பயப்புள்ளகளும் வீட்டுக்கு ஓடிப்போயி டிவி முன்னாடி உட்கார்ந்துருச்சுக. ம்ம் ஜெயிச்சா வின்னர் தோத்தா ரன்னர்'ன்னு தான் பார்க்க ஆரம்பிச்சதினாலே பெரிய எதிர்பார்ப்பு ஒன்னும் வரலைன்னு பொய் சொல்லிட்டு தான் மேட்ச் பார்க்க வேண்டிய சூழ்நிலை.

நம்ம பசங்க மேலே அப்பிடியொரு நம்பிக்கை...........

ஹிம் இம்புட்டு எதிர்பார்ப்பு'ஐ ஏற்படுத்திட்டு அந்த அளவுக்கு விளையாட்டு தொலைச்சானுக'ன்னு பார்த்தா எழவு அதுவும் இல்ல... கெளதம் காம்பீர்'ஐ தவிர எல்லாபயலுகளும் சொத்தையா ஆடி பேட்டிங்'லே கவுத்திட்டானுக... கவுதம் காம்பீர்'க்கு அடுத்து உருப்படியா ஸ்கோர் பண்ணினது RP.சர்மா தான். காம்பீர் 75ம் RP.சர்மா 30'ம் எடுக்க அந்தா இந்தா'ன்னு ஐந்து விக்கெட்கள் இழப்பிற்கு 157 ரன்கள் இந்தியா எடுத்தது.




சரி அந்தா இந்தா'ன்னு ஆடி முடிச்சி சரக்கே தூக்கிட்டு சந்தைக்கு வந்தாச்சி, வியாபாரத்தையாவது ஒழுங்க செய்யுவானுகளா, இல்ல இங்கனயும் சொதப்பிருனுவாங்கன்னு பயந்துதான் ஆட்டமே பார்க்க ஆரம்பிச்சோம். முதல் ஓவரிலே RP.சிங் ஹபிஸ்'ஐ தூக்க இன்னொரு பக்கம் இம்ரான் நசிர் நாலாபக்கமும் பாலை விரட்டிக்கிட்டு இருந்தவும் இல்லாமே ஸ்ரீசந்த்'ஐ தொவைச்சி காயப்போட்டுட்டான். மூணாவது ஓவர்'லே கம்ரான் அக்மல்'ஐ சிங் போல்ட்-அவுட் பண்ண ஆட்டம் சூடுகண்டது. இந்த அமளிதுமளியிலும் இம்ரான் சுத்திட்டு இருந்தான், ஒன்னோ ரெண்டோ எடுக்கிறோம்'ன்னு ஓட உத்தப்பா எறித்த டைரக்ட் ஷட்'லே ரன் -அவுட், இப்போ ஆட்டம் மேலும் சூடு பிடிக்க ஆரம்பித்தது. இதன் பின்னர் மிக சாதாரணமாக நகர்ந்த பாகிஸ்தான் ரன் சேர்க்கிறத ஜோகிந்தர் யூனிஸ்-கான்'ஐ கழட்ட வெற்றி இந்தியா பக்கம் நகர ஆரம்பித்தது.

பதான் சோயிப் மாலிக்'ஐ தூக்க உள்ளே வந்தார் சிக்ஸர் சிங்கம் அப்ரிடி. வந்த மொத பால்'லே சிக்ஸர் தூக்குறேன் பேர் வழி'ன்னு மிட்-அப்'லே ஸ்ரீசாந்த்'கிட்டே கேட்ச் கொடுத்துட்டு குகைக்கு திரும்பிருச்சு சிங்கம். அந்தா இந்தான்னு இந்தியா மாதிரி பாகிஸ்தானேயும் மூணு இலக்கத்துக்கு நகர்த்திட்டு போன மிஸ்பா-அல்-உக் ,யாசிர்-அரபாத் ஜோடியை பதான் பிரிக்க இன்னும் கொஞ்சம் இந்திய வெற்றி ஜெகஜோதியா தெரிஞ்சது. ஆனா மிஸ்பா-அல்-உக்'லே என்னமோ உள்ளே நுழைச்ச கதையா வரிசையா மூணு சிக்சர் அடிச்சி வயித்திலே புளியை கரைக்க ஆரம்பிச்சிட்டான்.

கடைசி மூணு ஓவர்'லே 35 ரன்கள் தேவைக்கிறப்போ ஸ்ரீசாந்த் போட்ட முதல் பால்'லே சிக்ஸ்ர்... ரெண்டாவது பால் வைடு... அஞ்சாவது பால் சிக்ஸ் ஜெகஜோதியா எரிஞ்ச விளக்கு அணையப் போகுதா:( அப்பா தங்கமே எதாவது பண்ணுடா'ன்னு இருந்தா ஸ்ரீசாந்த் ஸ்டிக் ஒன்னை கழட்டி தூக்கி எறிச்சிட்டான்...... :)

இன்னும் கொடுமை'க்குன்னு கடைசி ஓவரு'லே 13 ரன்ஸ் வேனுமின்னு போட்ட ரெண்டாவது பால்'லே சிக்ஸ்ர் அடுத்த பால்'லே கேட்ச்'னு பயபுள்ள அல்-ஹக் அவுட் ஆக இந்தியா வெற்றி பெற்றது


வேகமாக அடிச்சது... புரியலைன்னா மன்னிச்சோங்க மக்கா....