Tuesday, June 27, 2006

குட்டிப்பெண்

சின்னப்பெண் அவள் தந்தையுடன் ஒரு நதி மேல் செல்லும் பாலத்தின் வழியே பயணம் மேற்க்கொள்கிறாள்.அப்பாலத்தை கடக்கையில் நதியின் வேகத்தை கண்ட தந்தை பயத்துடன்

அப்பா: கண்ணு அப்பா கையை கெட்டிப்பிடிச்சுக்கோமா...!

மகள்: இல்ல என் கையை நிங்க பிடிச்சுக்கோங்ப்பா...!

அப்பா: என்னடா பாப்பா குழப்பறே? என்ன வித்தியாசம் இருக்கு நீ என் கைய
பிடிச்சுக்கிறதுக்கும்,நான் உன்னோட கைய பிடிச்சுக்கிறதுக்கும்,

மகள்: அப்பா நிறைய வித்தியாசம் இருக்கு.இப்ப நான் உங்க கையை பிடிச்சுட்டு வந்தேனா ஒரு வேளை இந்த பாலத்திலருந்து தவறி விழும்படி ஆச்சுன்னா நான் பயத்துல உங்க கையை விட்டுருவேன். ஆனா நீங்க என் கையை பிடிச்சிருந்திங்கேன்னா என்னை கீழே விழ விடமாட்டீங்கே அதுக்குதான்...

அப்பா: என் செல்லக்குட்டி....!

So hold the hand of the person whom you love rather than expecting them to hold urs