Sunday, October 14, 2007

அதிரடி எழுத்தாளர் ஜி'யுடன் Gtalk உரையாடல்

வீட்டுலே நேத்து நைட்டு 2 மணி வாக்கிலே ஆபிஸ் வேலையை பார்த்துட்டு இருந்தோப்போ நம்ம நெல்லைசீமையின் சிங்கமான எழுத்து புயல் ஜி ஆன்லைனில் வந்தார். அவருடைய அருமை பெருமைகளை பத்தி சொல்லனுமின்னா அது கொஞ்சம் ஓவர்டோஸ்'ஆ இருக்கும், ஏன்னா அவரு தன்னடக்கத்தோட சுரங்கம், எழுத்துதிறமையோட அரங்கம் என பல பெருமைகளுக்கு சொந்தக்காரார். சமீபத்திலே கூட அவருடைய போட்டோ'வே பார்த்துட்டு பாலிவுட்,கோலிவுட்,சாண்டல்வுட்'ன்னு எல்லா வுட்'களுக்கும் ஹீரோவாக்குமின்னு கியூ கட்டி நிக்கப்போய் அவரு அதெல்லாம் வேணாவே வேணாம், நாமே இருக்கிற இருப்புக்கு ஹாலிவுட்'தான் குட்'ன்னு அமெரிக்கா வந்தவரு. அவரே நம்மக்கிட்டே வந்து பேசுனா அது எவ்வளவு பெரியமனசு, அப்பிடியே அந்த வரலாற்று சிறப்புமிக்க உரையாடலை பதிஞ்சுருக்கேன், படிச்சி பாருங்க.

ஜி:- "என்னங்க 2மணிக்கு ஆன்லைனிலே இருக்கீங்க? அவ்வளவு பெரிய கடலையா வறுத்துக்கிட்டு இருக்கீங்களா?"

நான்:- "ஹிம் ஒன்னத்துக்கும் வக்கிலாமே தான் நீங்க பிங் பண்ணினதும் உடனே ரிப்ளை பண்ணிட்டு இருக்கேன், ஏங்க சும்மா வெறுப்பேத்துறீங்க? என்ன ஜி பதிவெழுதியே ரொம்ப நாளாகி போச்சு? ஏன் மேல்மாடி இன்னமும் காலியா இருக்கு?"

ஜி:- "இல்ல இப்போ கொஞ்சமா நிறைஞ்சு தான் இருக்கு! அதுதான் நாளையிலிருந்து மறுபடியும் பதிவுலக வாழ்க்கையை தூசுதட்டி ஆரம்பிச்சிறலாமின்னு இருக்கேன். நான் ரீ-எண்ட்ரி கொடுக்கிறதுக்கு நல்ல ஐடியா'வா சொல்லுங்களேன்"

நான்:- "என்னது நான் ஒங்களுக்கு ஐடியா சொல்லவா? தன்னடக்கம் இருக்கவேண்டியதுதான், அதுக்காக இம்புட்டெல்லாம் இருக்கக்கூடாது சாமியோவ்! சரி வேணுமின்னா ஒன்னு பண்ணுங்க, இப்போதைக்கு ஆஸ்திரேலியா கூட மரண அடி வாங்குனாலும் அடுத்த மேட்ச்'லே செயிச்சுருவோமின்னு திரியுற கிரிக்கெட் ரசிகர்களை தாக்கி பதிவு போடுங்க, சும்மா கும்முன்னு ஹிட் ஆயிராலாம்."

ஜி:- "எப்பிடி கிரிக்கெட் எல்லாம் ஒரு விளையாட்டா'ன்னா? அது ஏற்கெனவே எங்கயோ படிச்சிட்டேனே? வேற இன்னொன்னு பண்ணலாமா? இப்போதைக்கு ஒரு டீம்'ஐ திட்டி பதிவு போடுறதுக்கு தலைப்பு கண்டென்ட்'ன்னு ரெடி பண்ணி வைச்சிட்டு இந்த சீரியஸ் முடிச்சதும் போட்டுறலாமா?"

நான்:- "அப்பிடி கூட நம்ம மோகன்தாஸ் ரெடி பண்ணி வைச்சிட்டாருங்க, வேறமாதிரியா யோசிங்க, இப்போ நீங்க ரீ-எண்ட்ரி ஆனதும் எல்லாருக்கும் பத்திக்கனும், இன்னும் ரெண்டு மூணே வாரத்திலே ஜொலிச்சிறனும், அந்தமாதிரி எழுதப்பாருங்க"

ஜி:- "அவ்வ்வ்வ்வ்வ்வ், இவ்வளவெல்லாம் என்கிட்டே எதிர்பார்க்கீறீங்களா நீங்க? சீக்கிரமே ஜொலிக்க போற அளவுக்கெல்லாம் என்னத்தங்க நானெல்லாம் எழுதிட்டேன்?? இனிமேதான் அந்த அளவுக்கெல்லாம் எழுத முயற்சிக்கனும்!"

நான்:- "அடபாவி மக்கா நீயெல்லாம் இப்பிடி சொன்னா நானெல்லாம் என்னத்தையா சொல்லிக்கிறது? அதுவும் அறிவுஜீவிகளுக்கு மட்டுமே புரியுற அடர்த்தியான எழுத்துகள் வடிக்கவும், எங்களை மாதிரி சாதாரண வாசகர்களுக்கும் புரியுறமாதிரி எளிமையான நடையிலே எழுதி கலக்குற உங்களை மாதிரி நல்ல எழுத்தாளர்கள் எல்லாம் இப்பிடி சொன்னா நல்லாயிருக்குமா?"

ஜி:- "ஐயா சாமி என்னையெ வைச்சி நீங்க காமெடி கீமடி எதுவும் பண்ணலையே?"

நான்:- "நீங்கதான் வைகை புயல் வடிவேல் இல்லயே? ஒங்களை வெச்சி என்னத்த காமெடி பண்ணுறது? நீங்க பதிவுலகத்திலே பேமஸாக ஐடியா கேட்டீங்க, எனக்கு தெரிஞ்சத சொன்னேன் அம்புட்டுத்தேய்ன்!"

ஜி:- "அப்போ இன்னொன்னு பண்ணலாமா? ஆரம்பமே அதிரடியா நான் ஏன் ஸ்டார் ஆகவில்லை'ன்னு பதிவை போட்டு கலவரத்தை உண்டாக்கிவிட்டு அதிலே ஊர்வலமா வந்துறவா?"

நான்:- "ஹிம் நல்லாந்தான் யோசிக்கீறீங்க! ஆனா உங்களுக்குமுன்னாடியே இன்னொருத்தர் யோசிச்சு பதிவா போட்டுட்டாறே! இன்னும் பெட்டரா யோசிங்க, ஒங்களுக்கு இருக்கிற அளவிடவே முடியாத மூளையிலே கொஞ்சகாணு எடுத்து உபயோகப்படுத்தி பாருங்க, நல்லதொரு ஐடியா கிடைக்கும்... "

ஜி:- "ஆங் நல்ல ஐடியா அமெரிக்கா'விலே தமிழனுங்க சேட்டை'ன்னு சீரியஸா பதிவு போட்டுருவோம், நிலைமை கலவரமா போச்சின்னா உங்களை மாதிரி நான் அதை நகைச்சுவைக்காக எழுதின்னேன்னு சொல்லிக்கலாம்? எப்பிடி ஐடியா?"

நான்:- "யோவ் நான் உண்மையிலே ஜாலிக்காக தாய்யா அந்த பதிவே எழுதினேன்! நீ US'லே இருந்து இங்கன பெங்களூரூலே இருந்த அஞ்சாறு மாசத்திலே ஒன்னையே எத்தனை தடவை வாட்ச் பண்ணிருக்கேன், அந்த பதிவிலே இருக்கிறமாதிரியே எத்தனை தடவை நீ வென் ஐ வாஸ் யூ எஸ்'ன்னு பீலா விட்டுருப்பே? இப்போ அங்கன போனதும் டகால்டியா?"

ஜி:- "சரி சரி யாரும் பார்க்கலை, ஃபிரியா விடுங்க! இப்போ என்னந்தான் பண்ணுறது, கொஞ்சம் சீக்கிரமா எதாவது ஐடியா கொடுங்க!"

நான்:- "அப்போ இவர் கவனத்துக்கு அவர் கவனத்துக்கு'ன்னும் பதிவு போடுங்க, அதுவுமில்லான்னா எனக்கு கராத்தே தெரியும், குங்பூ தெரியும், அட்லிஸ்ட் குங்குமபூ போட்ட பால் குடிக்க தெரியுமின்னு வீடியோ எடுத்து பதிவா போட்டுருங்க!"

ஜி:- "ஆஹா இதுக்கூட நல்ல ஐடியா'வே இருக்கே? இதை டிரை பண்ணி பார்த்திறலாம்.."

நான்:- "ஒரு முக்கியமான விஷயம், அதிலே நீங்க சட்டை போடக்கூடாது, ஆனா கட்டாயமா கூலிங் கிளாஸ் மட்டும் போட்டுக்கனும்"

ஜி:- "Kewl, அப்பிடியே செஞ்சுறலாம், நாளைக்கே நான் ஒரு பதிவு போட்டுறேன்!"

நான்:- "நல்லது, இப்போ நாமே பேசினதை பதிவா போடப்போறேன்"

ஜி:- "ஹய்யோ, நாமே எவ்வளோ சீரியஸா'லாம் பேசிட்டு இருந்தோம், அதை பதிவா போட்டா என்னத்துக்கு ஆகிறது?

நான்:- "ஏய்யா வாளும் வேலும் என் இரு கண்கள்...போர்க்களம் என்பது இந்த ஜி-யின் பொழுதுபோக்கு... உறைந்த ரத்தம் நான் உறுஞ்சும் வாசம்...உருண்டோடும் தலைகள் நான் எட்டி விளையாடும் பந்துகள்'ன்னு புரொப்பலிலே போட்டு வைச்சிட்டு இதுக்கெல்லாம் கவலைபட்டா என்னத்துக்கய்யா ஆகுறது?? ஒரு வேளை இது சீரியஸா போச்சினா எல்லாரும் சொல்லுறமாதிரி நகைச்சுவைக்கு எழுதினதுன்னு சொல்லிக்கிறேன்! எப்பிடி என்னோட ஐடியா?"

ஜி:- "அது சரி எதோ ஒன்னு நடந்தா சரி!"