Friday, September 14, 2007

நாளை முதல் தமிழ் பார்வையாளனுக்கு....??????

கண்டமேனிக்கு கவுத்தடிச்சு யோசிச்சாலும் நமக்கு மட்டுப்படாத விஷயம் ஒன்னே ஒன்னுங்க. எல்லாத்தையும் கூட்டி கழிச்சு வகுத்து பெருக்கி பார்த்தும் புரியமாட்டேங்கீதுங்க. என்னான்னு நீங்க கேட்கிறது புரியுது, ஒருத்தவங்க் வீட்டுக்குள்ளே தகறாறு போலே அதுனாலே அவங்க பண்ண தொழிலே பிரிச்சிக்கிட்டாங்க. சரி அதுக்குக்காக புது கடை ஒன்னு ஆரம்பிக்கிறாங்க. பத்து கடைக்கு இருபது கடையா வைச்சிருக்கிற ஒருத்தர்க்கு போட்டியா ஆரம்பிக்கிறாங்க. அதுவும் அவங்களுக்குள்ளே ஒட்டும் ஒறவுமா இருந்துட்டு இப்போ தனிகடை போடப்போறாங்களாம்.

இந்த கடை எவ்வளோ நாளா இருக்கும், மறுபடியும் அவங்க கூடிட்டா இந்த கடையா மூடிருவாங்களா? இல்ல இந்த கடையே அந்த கடைகளோட சேர்ந்துருவாங்களா?

முன்னாடி எங்கயோ எதோ ஒரு ஜோக் ஒன்னு படிச்சேன். (இல்லாத) எமலோகத்திலே நைட் 7.30 மணிக்கு பச்சை விளக்கு எரியும், 8மணிக்கு மஞ்சள் லைட் எரியுமின்னு இப்போ இந்த கடையிலும் 7.30'க்கு எதோ கொடுக்க போறாங்களாமே, அப்போ இனிமே 7.30 மணிக்கு பச்சையும்,மஞ்சள் விளக்கு சேர்ந்து எரியுமா??