Friday, August 4, 2006

கவிதையாய் கைப்புள்ளை காவியம் (101 வரிகளில்)

திக்கற்ற கட்டிட காடுதனிலமர்ந்து
கணினியென்னும் அடிமையை
ஏவல் செய்யும்
விழிகருக்கும் பணியில்
புத்துணர்வு திரும்பவேண்டி
வலைபூக்கள் சொரிந்த
சாலைகளில் பயணிக்கும்
பயணிகள் அனைவருக்கும்
தாய்மொழி தங்கதமிழில்
சிரிப்பு தரவேண்டி சங்கமென்றை
கண்டளித்தாய் எமக்கு
செந்தமிழில் பெயரிட்டாய்
வருத்தப்படாத வாலிபர் சங்கமென..

கைப்புள்ளயெனும் தானே
தலைவர் எனறிவித்து
அடிவாங்கும் உன் திறமைதனை
பலவகைகளை கண்டறித்தாய்
உன் திறமையின் விளைவுகளின்
விளைவாக விளைந்த
விழுபுண்களில் சாய்ந்து
விழுந்திராத விழாநாயகனான
உன்னைப்போற்றி கவிஎழுத
மின்மடலில் வினவினேன்...!

பதிலுற்றாய் விதிமுறையோடு
அதை வாசித்தால் நகைச்சுவை
மிளிரவேண்டுமெனவும்
வாசிக்கும் நெஞ்சங்கள்
சிறிதளவேணிணும்
புண்பட்டிட கூடாதென
இவ்வாறே உன்னுள்
வியாபித்திற்கும் தலைவனுக்கே
உரித்தாகும் சீரியபண்பு...?

அந்தூர் எந்தூர்
இந்தூரில் வசித்தாலும்
மாசுமருவற்ற தங்கதலைவனான
உன் திருமுகம் மனகண்ணில்
நிறுத்திட வரம்வேண்டி
நிழற்படம் வெளியிடகோரலாம்
தினமும் தரிசிக்கும்
பாக்கியம் பெற்றவர்
கழிக்கவேண்டும் திருஷ்டி
ஆகவே வேண்டாம்..

உன்னை வாழ்த்திட
பத்துவரியை மனதிலுறுத்தி
எழுத தொடங்கினேன்
அனுமார் வாலென
நீட்டித்தது உந்தன்புகழ்
எப்படியும் நிறைவுறும்
நூறாவது வரிகளின் இறுதியில்...!
சங்கத்தின் நூறாவதுநாள்
உந்தன் புகழ்பாடும்
பதிவுகளின் கணக்கு நூறு
அன்னியமொழி சேரும்
அச்சமேனே எனகருதி
தமிழில் உரைக்கிறேன்
இதொரு உடன்நிகழ்வுசெயல்

வாழ்த்தி உரைத்து
முடிக்கிறேன் இவ்வரியை
தொடங்கலாம் கலாய்க்கும்திணைதனை...

உதார்விடும் உன்னழகில்
கவரப்பட்ட இரும்பாய்
கழக கண்மணிகளின்
ஆதரவுகரங்கள் எண்ணிக்கை
கடல்தாண்டியும் செல்லுமெனில்

இளமாய் மிதமாய்
அடிகள் இடியென
விவாயத்திலும் விழுமோ
வெடிகுண்டுகள் அழிக்கும்
சிவம்தனிலும் பிரதிபலிக்குமோ
தேவகானங்கள் இயற்றும்
அரசவை கவிஞனுக்கும்
விழுமோ உன்மாதிரி...?

மண்ணின் மைந்தன்
பாண்டிய அன்புசெல்வன்
வில்லாய் வடிக்கும்
வீரதிருமகன் வாங்கும்
அடிகள் உன்னளவில்
சற்று குறையே...!
நீர் பெற்றதை பகிர்ந்தளிக்கும்
மனபாங்கு சிபிமன்னனிடம்
கிடையாதென்பது திண்ணம்....!

மக்கள்படை மாத்திரமே
சார்ந்ததல்ல உந்தன்பாசறை
களிறுபடையும் கப்பற்படையும் சேர்ந்தே
பொன்னெ மிளிர்கின்றன....!

திங்களொரு ஒன்றுமறியாமானுடர்
உன்னவை வரப்பெற்று
பரிசில்கள் பலபெறுவார்யென....!
உள்ளவாகை மிகுதியில் வந்து
அம்மானுடர் பெற்றுசெல்வது
ஆப்பசைத்த மாருதியின்
இலவச ராசனுபவங்கள்...!

சிரிப்பன்பதை மட்டுமே கொள்கைகொண்ட
இவ்வரசவை வாழுமெனில்
கவிதனை முடிவுற விளைகிறேன்
மனதில் தொங்கும்வினாவுடன்

சச்சரவுகளில் பயணிக்கும்
பயணிகள் அனைவருக்கும்
சுயவெறுப்புகளை கடந்து
ராஜபாட்டையில் வரவியலுமாயென...........?????

கைப்புள்ள கிளம்பு உன்வேட்டைக்கு
காத்திருக்கிறோம் நாங்கள்
நீ வாங்கிவரும் குச்சிமிட்டாயிக்கும்,குருவிபொறைக்கும்.... :-)