Friday, April 6, 2007

வெட்டிகாரு செப்பண்டி........

சில சமயத்திலே ஆபிஸிலே காலங்காத்திலே ஓவரா ஆணி பிடுங்க விட்டு கடுப்பேத்துவானுக. அந்தமாதிரி சமயத்திலே இருக்கிற கடுப்புக்கு எவனாவது ஒருத்தனை பிடிச்சு வம்பிழுக்கமின்னு தோணும், அப்பிடியொரு நொந்து நூலாகி நூடுல்ஸாகி வெறுப்பான சூழ்நிலையிலே மாட்டினவர் தான் நம்ம பாஸ்டன் புயல், பாலாஜி. அன்னிக்குன்னு பார்த்து தான் அவரு கொல்டி - சில திடுக்கிடும் உண்மைகள்'னு பதிவு போட்டுருந்தார். அது போதாது நமக்கு வம்பிழுக்க... ஹி ஹி...

நான்:- "வாப்பா பாலாஜி, இன்னும் தூங்கலையா?"

வெட்டி:- "வாங்க.. இப்போலாம் எனக்கு சரியா தூக்கம் வரதில்லை?"

நான்:- "ஓ இப்போ கனவெல்லாம் சுமா தானா?"

வெட்டி:- "ஐயோ நீங்களுமா? அது சும்மா கதைக்காக வந்த கதாபாத்திரம் பேருங்க!"

நான்:- "திரும்ப திரும்ப பொய் பேசுனா அது உண்மை'ன்னு ஆகிறுமா?"

வெ:- "பார்த்தீங்களா? நீங்களே அதே பொய்'ன்னு ஒத்துக்கிறீங்க?"

நா:- "ஏலேய் நான் சொன்னது நீயி எங்ககிட்டே சொல்லுவியே? இல்லே! இல்லேன்னு சொல்லுற அந்த பொய்யை பத்தி மக்கா"

வெ:- "அண்ணே! ஒங்களுக்கு இன்னிக்கு வேலை எதுவும் இல்லியா?"

நா:- "ஆமாம்.. ஆனா இன்னிக்கு ஒன்க்கிட்டெயிருந்து உண்மை வரவைக்கிறது இன்னிக்கு என்னோட பெரிய வேலையே!"

வெ:-" அப்போ சரி! அதை உண்மைன்னு வைச்சுக்கோங்க! இப்போ வேற டாபிக் பேசலாம்!"

நா:- "இன்னொரு நாள் அந்த வேற டாபிக்கை பத்தி பேசலாம்! இன்னிக்கு சுமா டாபிக் பத்தி மட்டுமே பேசுவோம்!"

வெ:- ":(((((((((((("

நா:- "எதுக்கு இத்தனை அழுவாச்சியை போடுறே?"

வெ:-" பின்னே அழாமே? என்ன செய்யுறது? நீங்க இந்தமாதிரியெல்லாம் கேள்வி கேட்கிறது வெளிநாட்டு சதினாலே தான்!"

நா:- "ஏலேய்! என்ன சதி இடியாப்பத்துக்கு சொதி'ன்னு பேசிட்டு இருக்கே? உண்மைய சொல்லு? அது நிஜத்திலே நடந்த கதையா? இல்லய்யான்னு?"

வெ:-"ஐயோ அது கற்பனை கதை தாண்ணே!"

நா:- "அப்பிடின்னா ஏன் அடுத்து இந்தியா வர்றப்போ சென்னைக்கோ இல்ல பெங்களூருக்கோ வர்றாமே நேரா ஹைதராபாத்'க்கு போறே? சரி இதுக்கு ஏதாவது ஒரு காரணம் சொல்லுவே! அந்த கதை நீ சொல்லுற அதே எழுதி எவ்வளோ நாள் ஆச்சு! இப்போ எதுக்கு தூசு தட்டி மறுபடியும் எடுத்து வைச்சிருக்கே? அப்போ ஏதோ காரணம் இருக்கு இல்லியா?"

வெ:- "இப்போ வாய் விட்டு அழுதுட்டு இருக்கேன்! என்னை விட்டுருங்க!"

நா:- "டேய் டேய் நீயாவது அழுவுறதாவது? அதெல்லாம் செய்யமாட்டே'ன்னு தெரியும், ஆமா லவ் பண்ண பொண்ணு தேடுனோப்போ ஏன் தெலுங்கு பொண்ணை செலக்ட் பண்ணினே? கொல்டிஸ் நிறைய வரதட்சிணை கொடுப்பாங்கன்னா?"

வெ:-" அண்ணே நான் ஆணியே பிடுங்கலே! என்னை இப்போதைக்கு விட்டுறுங்க!"

நா:- "அடடே இப்பிடியெல்லாம் வடிவேல் வசனம் பேசுனா நாங்க சிரிச்சிட்டு விட்டுருவோமா? உண்மைய சொல்லுடி கண்ணு? எதுக்கு ஒன்னோட விமானம் ஹைதராபாத்'லே தரையிறங்க போகுது'ன்னு?

வெ:- "ஐயோ! எதுக்கு இப்பிடி அப்பிராணியே போட்டு பாடாப்படுத்துறீங்க? நான் நல்லவண்ணே!"

நா:- "இப்போ யாரு நீ நல்லவன் இல்ல! கெட்டவன்னு சொன்னது! இப்பிடி கண்டம் விட்டு கண்டம் பேசுறதே சுமா'ன்னா யாரு? அவளோட உண்மை பேரு என்னான்னு தெரிஞ்சுக்க தான்?"

வெ:-"அண்ணே டிவியிலே வர்றமாதிரியே பேசுறீங்க! நான் சீக்கிரம் இந்தியா வர்றது உண்மைதான், ஆனா ஒங்களுக்கு எப்பிடி தெரிஞ்சுச்சு? அதுமில்லாமே ஹைதராபாத் வரதுக்கு எப்பிடி தெரிஞ்சது?"

நா:- "அதுதானே! அப்பிடி வா வழிக்கு? அப்போ நீ இந்தியா வர்றதும் உண்மை அதிலே ஹைதராபாத் போறதும் உண்மை! அதிலே சுமா'வே மீட் பண்ணப்போறதும் உண்மைதானே?"

வெ:-"உண்மை!உண்மை'ன்னு ஏண்ணே இப்பிடி பேசியே உசுரை வாங்குறீங்க?"

நா:- "நீ எவ்வளோ நாளா அந்த சுமா பொய் பொய்'ன்னு சொல்லிட்டு இருந்தே? நீ வர்றப்போ ஒன்னயே வரவேற்க பெரிய ஏற்பாடுகள் நடந்துக்கிட்டு இருக்கு ராசா!"

வெ:- "என்ன எல்லாருக்கும் பண்ணுறமாதிரி கரகாட்டம் வைச்சு வரவேற்க போறீங்களா??"

நான்:- "என்னாப்பா இப்பிடி சொல்லிட்டே? நீ இங்கே வந்து இறங்கிறப்போ ஏர்போர்ட்'க்கே சாம்பிராணிப்புகை போடுற நாலு பேரை கூட்டிட்டு வந்து புகைமண்டலம் உண்டாக்கி விடுறோம்! ஒரு பக்கம் நீ நடந்து வர்றப்போ இன்னொரு பக்கத்திலே இருந்து சுமா நடந்து இல்ல ஓடிவர்றாங்க, ஒங்களுக்கு சைடுலே துணை நடிகை நாலு பேருக்கு உஜாலா'லே முக்கியெடுத்த துணியை உடுத்த சொல்லிட்டு ஓடி வர்ற சொல்லுவோம், இந்த மூவ்மெண்ட் எல்லாமே லூஸ் மோஷன்'லே நடக்கும். இன்னொரு முக்கியமா டொய்ங் டொய்ங்கு'ன்னு காட்டுதனமா ஒரு பாட்டை தெலுங்கு மீசீக் டைரக்டரை விட்டு பாட்டு பாடச்சொல்லி பேக்கிரவுண்ட்'லே வேற போடுவோம்! "

வெ:- "அடபாவிகளா! ஏய்யா இப்பிடியெல்லாம் கொலைவெறியோட திரியீறீங்க?"

நா:- "ஆஹா இன்னொன்னு மிஸ் ஆகிடிச்சு! நீ ஒரு பக்கம், சுமா ஒரு பக்கம் இன்னொரு பக்கம் துணை நடிகைஸ், அதிலே இன்னொரு பக்கம் நாங்கெல்லாம் ஒட்கார்ந்துகிட்டெ பார்ப்போம்"

வெ:-" நாங்கெல்லாமின்னா யாரு? யாரு?"

நா:- "ம்ம் அதுவா? நானு,தம்பி,புலி,ஜிரா,விவசாயி,அபிஅப்பா,கொத்ஸ், இன்னும் இங்கே நான் சொன்னதவிட நிறைய பேருக அதாவது ஒன்னோட ரசிககண்மணிகள் எல்லாரும் வருவாங்க!"

வெ:- "ஆஹா மொத்ததிலே என்னைய வெச்சு படமே எடுக்க போறீங்க! எனக்கு தூக்கம் வருது! போயி தூங்குறேன்!"

நா:- "கனவிலே சுமா மட்டுமே வர்ற வாழ்த்துக்கள்"

மக்களே இந்தமாதிரி நாமெல்லாம் ஜாலியா பேசுவோமா? உங்க ஐடி கொடுங்க.....