Wednesday, March 7, 2007

மடச்சாம்பிராணி'யின் பா.கே.ப.பி

பொன்ஸ்'க்கா என்னிடம் ஒப்படைத்த, பார்த்ததில், கேட்டதில் படித்ததில் பிடித்தது சங்கிலித்தொடர்'க்கு என்னத்தை எழுதலாமின்னு யோசிச்சி யோசிச்சு பார்த்தேன், அப்புறந்தான் தெரிஞ்சது முளை இருக்கிறவங்க யோசிச்சாதான் எதாவது வரும், என்னைமாதிரி காலிமனை கோஷ்டிகளுக்கெல்லாம் ஒன்னுமே தோணாதுக்கிற உலக ரகசியத்தை ரொம்ப நேரமா விட்டத்தை வெறிச்சு பார்த்திட்டே ஒரு பேனா கையிலே பிடிச்சிட்டு அதை வேற முகவாட்டுலே தட்டிக்கிட்டே இருந்தப்போதான் தெரிஞ்சுக்கிட்டேன்.

"என்னத்தை படிச்சாலும் நீ ஒன்னத்தக்கும் தேறதே மடசாம்பிராணியா இருக்கே...? நாலு நல்ல விஷயத்தையாவது பார்த்து தெரிஞ்சுக்கோ அதிலே என்ன புதுவிஷயமிருக்கோ அதை கத்துக்கோ..!!" இது எங்கப்பா சன்ரைஸ் விளம்பரத்திலே வர்றமாதிரி அடிக்கடி உபயோகப்படுத்துற வார்த்தைகள்.. அதை பொறுமையா கேட்டாலும் இன்னமும் மடசாம்பிராணியாதான் இருக்கிறது எனக்கு ரொம்ப பிடிச்சது :)

ஓகே ஸ்டார்ட் மீசிக்....



பார்த்ததில்:-

ரஜினி ரஜினியாய் நடிச்ச எல்லாப்படங்களும் பிடிக்கும்.




ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும், காயத்திரி......

கமலின் மிகைப்படுத்தபடாத நடிப்பில் வந்த பல படங்கள் பிடிக்கும்.


இந்தி:-

ஷோலே

லகே ரஹோ முன்னாபாய்

டான் (original & Duplicate)


ஆங்கிலம்:-



The Pied piper of Hamelin. (புத்தகத்திலே படிச்சதை விட படத்திலே நல்லா இருந்துச்சு)






ERIN BROCKOVICH (ஜீலியா ராபர்ட்ஸ்'க்காக பார்க்கலாமேன்னு பார்த்த படம், ஆனா படம் பார்த்ததுக்கப்புறம் ஜீலியா பேர் மறந்து "எரின்" தான் கண்ணுக்குள்ளே தெரிஞ்சாங்க)






The Matrix (Neo'வே லினக்ஸ் Tux'க்கு கற்பனை பண்ணிட்டு படம் பார்த்தேன்)

இன்னும் லேட்டஸ்டா இதை ரொம்பவே ரசித்தேன்...





கேட்டதில்:-


நாயகன் படத்திலே கமல் பாடிய "தென்பாண்டி சீமையிலே.."

திருமதி பழனிசாமி படத்திலே வர்ற "பாத கொலுசு பாடிவரும்"

ரோஜா படத்திலே வர்ற "தமிழா தமிழா.. நாளை உந்நாளே"

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஜெயசந்திரன் பாடிய "ஒரு தெய்வம்"

பிரிட்டனியக்கா குதிச்சு குதிச்சு பாடிய "ஓ பேபி பேபி"

JLO'வோட "வெயிடிங் ஃபார் டுநைட்"

ரிக்கியோட "மரியா...மரியா..."

படிச்சதிலே:-

--கல்கி--
பொன்னியின் செல்வன்,
சிவகாமியின் சபதம்,

--சாண்டில்யன்--
கடல்புறா,
கடல்ராணி,
யவனராணி,
இராஜதிலகம்,
........

--வைரமுத்து--
கள்ளிக்காட்டு இதிகாசம்,
கவிராஜன் கதை,
கொஞ்சம் தேநீர் நிறைய வானம்,
பெய்யெனப் பெய்யும் மழை,
தண்ணீர்தேசம்,
வில்லோடு வா நிலவே,
கருவாச்சி காவியம் (இன்னும் படிக்க கொஞ்சம் பக்கங்கள் இருக்கு)

--தபூசங்கர்--
விழியிர்ப்பு விசை,
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்,
திமிருக்கும் அழகென்று பெயர்,
எனது கருப்புப்பெட்டி,
மழையானவள் (இது ஓசிலே போயிருச்சு)

--இன்னும் சில--

வடிவேலுவின் "வடி வடி வேலு வெடிவேலு"
ஆண்டாள் பிரியதர்ஷணியின் "மன்மதஎந்திரம்"
சிசு செல்லப்பாவின் "வாடிவாசல்"
தா.பாண்டியனின் "சேகுவாரா"
புலவர் செம்பியன் நிலவழகனின் "பழகுதமிழ்ப் பாட்டெழுதும் பாங்கு"
முனைவர் தமிழ்ப்பிரியனின் "அனைவருக்கும் பயன்தரும் அடிப்படைத் தமிழ் இலக்கணம்"

--என்றென்றும்--

ஐயனின் திருக்குறள்..
முண்டாசு கவிஞனின் அனைத்தும்..


இவ்வளவு தூரம் படிச்சிங்களே... வழக்கம்போலே மொக்கதனமான பதிவாதான் இருந்துச்சுல்லே... அப்போ நான் மடச்சாம்பிராணிதான்னு நீங்க கன்பார்ம் பண்ணிக்கோங்க....

சரி அடுத்து இந்தமாதிரி எழுதச்சொல்லுறதுக்கு என் கண்ணு முன்னாடி வந்துப்போன உருவம், வரவனை'யிலிருந்து கிளம்பி இப்போதைக்கு தூத்துக்குடி கலங்கரைவிளக்காக இருக்கிற குட்டப்புஸ்கி செந்தில் தான்..... ;)

வாங்க வரவனையான், நீங்க குடிச்சதிலே பிடிச்சது வில்ஸ்பிட்டரும் & பழைய மங்கனுமின்னு எங்களுக்கு தெரியும் ஆனா பார்த்ததிலே பிடிச்சதும், கேட்டத்திலே பிடிச்சதும், படிச்சத்திலே பிடிச்சதும்....?? என்னென்னு சொல்லுங்க...