Friday, September 29, 2006

பேய்....! பிசாசு...! ஆவீ...!

முணு நாலு வருசத்துக்கு முன்னாடி நடந்த சம்பவம் இது. கொஞ்சம் பயங்கரமான சமச்சாரம் வெறேங்க, அதனாலே பொறுமையவே படிங்க.

அப்பதேய்ன் குஷி படம் ரிலிஸ் ஆகி இருந்த சமயம், , இன்னிக்கு இந்த படத்தே பார்த்திராலாமின்னு அதுவும் ஞாயித்துகிழமை அதுவுமா நைட் ஷோவுக்கு நானு எங்க கோஷ்டி மொத்தம் ஆறுபேரு சகிதம் கூட்டமா கிளம்பி போனோம். போறேப்பவே ஏரியாக்குள்ளே ஏய் இங்கே பாரு போறமில்லே போறமில்லே... நைட்ஷோ பார்க்கப்போறமில்லேன்னு சத்தமா சவுண்ட் விட்டுக்கிட்டே வந்தான் பிரண்டு கணேசன்.. ஒரே சத்தமா கத்தி பத்துமணிக்கெல்லாம் தூங்கப்போறவய்ங்களெல்லாம் வெறுப்பேத்திட்டு தான் அந்த இடத்தே விட்டு கிளம்பிப்போனோம். பல பேரு வெளியே வந்து புலம்பிட்டுதான் போனாய்ங்க... அதிலெ ஒருத்தேய்ன்.

நிர்மல்:- "ஏலேய் உங்களுக்கு டிக்கெட்டே கிடைக்காதுங்கடா... போயிட்டு சும்மாதான் வரப்போறீங்க... தொலைஞ்சுபோங்கடா நீங்க திரும்பிவர வரைக்கும் இந்த ஏரியா கொஞ்சம் நிம்மதியா இருந்தா சரி.... "

கணேஷ்:- "ஆமாப்பா கலியுலக முனிவரு சாபம் விட்டாருடோய்... போடி போ போயி கவுத்தடிச்சு படு செவனென்னு, ஏலேய் நிருமலா நாளைக்கி நீ வேலைக்கு போயீ கழட்ட போகணும், எங்களுக்கு தான் அதில்லே அதுனாலேதான் நைட்ஷோ போறோம்....அப்புறம் மச்சான் வா தம்மடிக்க போலாமினு சாயங்காலம் கூப்பிடுவேல்லே அப்போதைக்கு பார்ப்போமிடி உன்னோட சாபத்தே..."

நானு:- "டேய் கணேசா ஏண்டா இந்த சவுண்ட் தேவையா... பேசமா வாடா, இப்போ யாரு கேட்டா நீயும் அவனும் தம்மடிக்கிற மேட்டரை.. சும்மா வாடா எங்கப்பா காதிலே விழுந்தா நானும் தம்மடிக்கிறேன்னு..நாளைக்கி என்னையே பெல்ட்'லே அடிப்பாருடா..... "

சங்கர்:- "டேய் ராமா உனக்காச்சிம் பரவாயில்லே.. உங்கப்பா உன்னையே வீட்டுக்குள்ளே வச்சு வெளுப்பாரு.... எங்க நைனா நடுரோட்டிலேயே ஓட ஓட விரட்டி அடிப்பாருடா...... "

கணேஷ்:- "தொடநடுங்கி பயலுகளா... ஏண்டா அப்பாவுக்கெல்லாம் இப்பிடி பயப்பிடிறீங்க.... உங்களுக்கெல்லாம் உங்கப்பாவே எப்பிடி வளர்க்கமின்னுத் தெரியலே... இப்போ என்னை எடுத்துக்கோ, நான் எப்பிடி வளர்த்துக்கிறேன் பாரு, நான் என்னா சொன்னாலும் சரின்னு கேட்பாரு எங்கப்பாரு..... "

நானு:- "உன்னைமாதிரி வீம்புக்கு விளக்குமாத்திலே அடிவாங்குற ஜோலி எங்களுக்கு வேணாமிட்டோய், ஆனா எதுக்கு போனமாசத்திலே ரெண்டுவாரம் உங்க அக்கா வீட்டுலே போயி கிடந்தே, பாண்டியமன்னன் திருச்சி உறையூருக்கு பட்டணபிரவேசம் போயிருந்தாரா... நீ மொத்து வாங்கீ ஊருக்கு ஓடிப்போனது நம்ம முக்குச்சந்து குஞ்சுகுளுவானுக்கும் தெரியுமிடா.... உனக்கு இந்த வாயி மட்டும் இல்லே, அந்த மணிநாயி கூட மதிக்காது..... வா செவனென்னு..."

வினோத்:-" நல்லா கேளு மாமா... நேத்திக்கு சின்னகடை தெருவுலே டீ குடிச்சிக்கிட்டு இருக்கிறப்போ இந்தபய வந்து என்னாடா ஊமையா உனக்கு குழந்தை பொறந்திருக்குன்னு சொல்லவே இல்லேன்னு எதிர்தாப்பலே நின்னுக்கிட்டு இருந்த என்னோட ஆளுக்கு கேட்கறமாதிரி சவுண்டுவிட்டான் செங்ககாட்டான்..!"

நானு:- "டேய் அடங்குடா.... உங்க ஆளு..அய்யோ கேட்கவே கொடுமைடா... ஏலேய் கணேசா வா பேசமே, பாரு ஊமையன் கூட சவுண்டுவிட ஆரம்பிச்சிட்டான்.... நாமேதான் படம் பார்க்கப்போறோம்... ஊருகாரயங்களுக்கு நம்மை படத்தை பயாஸ்கோப்பிலே காட்ட இல்லே...!"

வினோத்:-" டேய் அவனவன் காதல் பண்ணிபாருங்கடா... அப்போ தெரியுமில்லே, நாங்க படற அவஸ்தையெல்லாம்..!"

கார்த்திக்:-" அப்பா சாமிகளா தியேட்டர் வந்திருச்சிடா, மொக்கயனை முன்னாடிப்போய் டிக்கெட் எடுக்க சொன்னோம், எடுத்தானான்னு தெரியலெ..."

சரவணன்: - "டேய் பசங்களா, ஆறுப்பேத்துக்கும் டிக்கெட் எடுத்தாச்சிடா.!வாங்கடா உள்ளுக்க போவலாம். "

படம்மெல்லம் நல்லாதான் இருந்து ஒருபய கூட தூங்ககொள்ளமேதான் வெளியெ வந்தோம். அது ஞாயிற்றுக்கிழமைனலே சாதாரணமாகூட திறந்து இருக்கிற கடைகண்ணி எதுவுமே இல்லெ, அதுவும் மணி ஓன்னறையா ரெண்டொன்னு மறந்துப்போச்சு. அமிர்தம்,மீனாட்சி தியேட்டர்லே இருந்து தெற்குவெளி வீதி வரைக்கும் கொஞ்சகூட்டம் எங்ககூட வந்தாங்க. அதுக்கப்புறம் நாங்க மட்டுந்தேய்ன் நடந்துப்போறோம், ரோட்டிலே.... எங்க காலடி சத்ததை மீறீ ஒரு சத்தம் கேட்குது எல்லா பய காதுக்கும். டைமிலே எல்லாரும் திரும்பிப்பார்த்தோம் யாராவது பொம்பளையாலு யாராச்சிம் வர்றாங்களான்னு.... ஒருத்தரையும் காணோம்... லேசா பயம் அடிவயத்திலே இருந்து கிளம்பி ராக்கெட் கணக்கா ஜிவ்வ்ன்னு மேலே நோக்கி தொண்டை வழியா அம்பூட்டு பேருக்கும் பேசறேன்னு சொல்லி காத்தா வருது.



நானு:- "டேய் சனிபயலுவலா.... பயமுருத்தினுமின்னே எவனாவது கொலுசே பைலே போட்டுக்கிட்டு சேட்டை பண்ணிருக்கீங்களா... சொல்லீருங்கடா பயமாஇருக்கு, ஏலேய் கணேசா ஒன்னோட வேலைதானா இது.? "

கணேஷ்:-" இல்லடா...நான் எதுக்கு செய்யபோறேன் இந்தவேலையெல்லாம்......நேத்து ராத்திரி HBO'லே பார்த்தா பேய் படமெல்லாம் ஞாபகம் வருதுடா எனக்கு."

சரவணன்:- "டேய் நீங்க ரெண்டுபெரும் பேசறப்போகூட அந்த ஜல்ஜல்ன்னு சத்தம் கேட்டிச்சுடா.! "

வினோத்:- "அடேய் இப்போயும் கேட்குதுடா, போறப்பவே எங்க அம்மாச்சி சொன்னுச்சு, ஏண்டா பார்த்து சூதனாமா வந்துசேருடா, இங்கே பாரு நாமெல்லே போயீ பேய்,பில்லி,சூனியத்தோட சேர்ந்து வர்றோம். "

நானு:- "ஊமை செவன்னெனு வாடா. இங்கே பாரு கார்த்தியும், இந்த சவுண்டன்(கணேஷ்)னும் விட்டா இங்கே ... போயிருவானுக போலே... "

சங்கர்:- "கிளம்புறநேரத்திலே கொஞ்சநஞ்சமா பேசினே சவுண்டா... இப்போ பேசுடி கண்ணு,இப்போ பேசு....? "

கணேஷ்:- "டேய் சங்கரா ஏண்டா இந்த மொக்ககுத்து குத்துறே.... விடுடா, இங்கே பாரு நானும் நாலு வார்த்தை பேசலாமின்னு பார்க்கிறேன், ஒன்னுஒன்னா அதுவும் காத்து காத்தா வருதுடா, என்னோட சட்டைவேட்டியெல்லாம் நனைச்சு போச்சுடா.! "

நானு:-" சவுண்டா உன்னோட சட்டை நனைஞ்சது சரி, வேட்டி எப்பிடிரா நனைச்சு போச்சு... அப்புறம் நம்மகூட வர்றது பொம்பளை பேயின்னு நினைக்கிறேன், கொலுசு சத்ததேன் கேட்குது! "

கார்த்திக்:- "ராமா இந்த ஆராய்ச்சிகேள்வி தேவைதானா இப்போதைக்கு..? "

சரவணன்:- "ஆமாண்டா அவனவனுக்கு அவன் உசுரு மேலேயும் கீழயும் போயி வந்து இப்போ பேசுறெப்போ தொண்டைகுழியிலே எட்டிப்பார்க்கிது. இவியங்களுக்கு ஆராய்ச்சியெல்லாம் பண்ணச்சொல்லுது இந்த நேரத்திலே, "

சங்கர்: - "டேய் இங்க பாருங்கடா அமிர்தம் தியேட்டர் நம்ம வீட்டிலே இருந்து பத்துநிமிசம் நடைதான்.... ஆனா பயத்திலே இப்போ அந்த முக்குலே இருந்து இங்கே வர்றதுக்கு ஒருமணிநேரம் ஆனா மாதிரி இருக்கு.... இன்னும் ரெண்டு சந்து போகணுமிடா, இப்போ ஈரக்கொலைலே என்னோமோ புடுச்சு ஆட்டுறமாதிரி இருக்குடா..! "

நானு:-" டேய் ஒன்னு பண்ணுவோமா.... பேசமே ஓடுவோமாடா இங்கெயிருந்து... நடக்க நடக்கதானே நம்மக்கூட அந்த சத்தம் வருது... !"

ஓடியே எங்கதெருமுனைக்கு வந்துட்டோம், ஆனா அந்த சத்தம் நிக்கலே.... இங்கே இன்னோரு வினை ஆரம்பிச்சது, ஊருக்குள்ளே இருக்கிறே அம்பூட்டு நாயும் அங்கேனேதான் கிடந்துச்சுக, நாங்க ஓடி வந்தவுடேனே என்னோமோ வேத்துகிரகத்திலே இருந்து வந்தக மாதிரி தொரத்துக அம்பூட்டு நாயிகளும் எங்களை, ஓடினாதானே கொரைக்குதுன்னு மெதுவா மறுபடியும் நடக்க ஆரம்பிச்சோம், பேயிக்கிட்டே தப்பிச்சு நாயிக்கிட்டே மாட்டிக்கிட்டே கணக்கா சேர்த்துதான் மறுபடியும் கொரக்க ஆரம்பிச்சதுக, அப்போ ஒரு அதிசயம் நடந்த மாதிரி எங்க தெரு மணி நாயி சத்ததே கேட்டு ஓடி வந்துச்சு, அதுக்கு நாங்க பிஸ்கெட்ட்ல்லாம் வாங்கிப் போட்டுறதினாலே ஒரு சவுண்ட் விட்டுச்சு, அந்த எபக்ட்க்கு எல்லா நாயிகளுக்கும் ஓடிப்போயிருச்சுக,

நானு:-"அப்பா சாமி மணி நாங்க வாங்கி போட்ட பிஸ்கெட்டுக்கு ஒரு உதவி பண்ணியே, அப்பிடியே எல்லார் வீட்டு வரக்கும் வந்து ட்ராப் பண்ணிட்டு போயிரு..!!!"

கணேஷ்:- "ஏலேய் யாருகூட பேசிட்டு வர்றே நீயீ.. ??"

நானு:- "நம்ம கொலச்சாமி மணிக்கிட்டே!!"

கணேஷ்:- "அதுச்சரி நாயிக்கெல்லாம் பேசிக்கிறீங்களா..பேசுங்க பேசுங்க.. இன்னும் பாரு அந்த ஜல்ஜல் சத்தம் கேட்குது.. இந்த மணிநாயி வந்தும் கேட்குதினா எவன் ரத்தம் குடிக்க பின்னாடி வருதுன்னு தெரியலே.. ??"

சவுண்டன் பேசி முடிக்கிறக்குள்ளே மணி அவன் காலே கடிச்சிட்டு ஓடிப்போயிருச்சு, என்னா பிரச்சினையோ அவங்க ரெண்டு பேருகளுக்குள்ளே, என்னா சண்டைன்னு கூட தெரியலே.. அதுக்கப்புறம் அந்த பயலே இழுத்துக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடி அவங்க வீட்டுக்கு போயி தகவல் சொல்லி முடியறதுக்குள்ளே விடிஞ்சுப்போச்சு.

ஆனா விடியறவரைக்கும் விடாமே திரும்ப திரும்ப ஜல்ஜல்ன்னு எல்லா பய காதிலேயும் கேட்டுக்கிட்டேதான் இருந்திச்சு.