Monday, February 4, 2008

2007 - எழுதியதில் பிடித்தது....

மூன்று வருடங்களுக்கு முன்னர் எங்கோ ஏதோவொன்றை தேடப்போக தமிழ்வலைபூக்களை தெரியவர அன்றிலிருந்து வேலை நேரத்தை தவிர இங்குதான் பொழுது போக்கு. அதிலும் தமிழில் முதன்முதலில் எழுதியபிறகு கிடைத்த சந்தோஷம் இருக்கே, அப்பப்பா இன்னும் பிரமிப்பு அடங்கவில்லை. அதுவும் திணமணி நாளிதழில் போட்டோவெல்லாம் வந்த அந்த பெரிய பிரமிப்பெல்லாம் இன்னும் அடங்கவில்லை. பதிவுகள் எழுத ஆரம்பித்து இரண்டுவருடங்களுக்குள் கிட்டத்தட்ட ஆறு குழுப்பதிவுகளிலும் இணைந்தாயிற்று, அதில் இன்னும் இரண்டு - மூன்று பதிவுகளில் எழுதவே ஆரம்பிக்கவில்லை. எனக்கும் டைம் மேனஜ்மெண்ட்'க்கும் ஒத்து வரவே வராது. கிடைக்கிற நேரத்தை சரியாக உபயோகப்படுத்திக்கவும் தெரியாது. போன வருடத்தில் நிறைய பதிவுகளும் சிறுகதைகளும் மதுரை மொழி நடையில் எழுதனுமின்னு ரொம்பவே மெனக்கெட்டேன். கடைசிவரை முடியாமலே போனது.

போனவருடத்தில் மொத்தமாய் வைகையில் எழுதிய நாப்பத்தி முன்று சொச்சம் பதிவுகள், சங்கத்தில் பத்து, தேன்கிண்ணத்தில் கொஞ்சம்,சுவரொட்டியில் ஒட்டியது கொஞ்சமின்னு நூறை தாண்டியது. அதில் உருப்படியாக எழுதியாக என்ன எழுதியிருக்க போறேன்னு என்னால் ஏதுவும் எடுக்கமுடியவில்லை. எதையும் உருப்படியாக செய்திருந்தால் தானே அதை எடுத்துக்காட்டி பெருமைப்படலாம். காதல் கவிதைகள் எழுதுறேன் பேர்வழின்னு படிக்கிற காலத்திலே டைரிலே கிறுக்கினதை நண்பர்கள்கிட்டே காட்டி பெருமைப்படுவேன். அதிலிருந்து ரெண்டு மூணு கவிதைகளை இங்கயும் போட்டேன். வழக்கம்போல எல்லாரும் அதை கும்முன்னு கும்மி இனிமே எந்த காதல் கவிதைகளையும் பிளாக்'லே போடவேகூடாதுன்னு கொள்கை முடிவு எடுத்துட்டேன்... :)

அப்புறம் இந்த சிறுகதைகள் எழுதியதுன்னா பிளாக்'லே எழுதிய முதல் கதைக்கே தேன்கூடு போட்டியிலே நான்காம் பரிசு கிடைக்க அந்த வேலையாவது உருப்படியாக செய்யனுமின்னு கொஞ்சநாளு மெனக்கெட்டு எழுதிய இந்த கதைக்கு வழக்கம்ப் போலே இது உன்னோட சொந்த கதையா'ன்னு கேட்டு அன்னிலிருந்து கற்பனா கதாப்பாத்திரத்தை என்னோட வருங்கால மனைவி பெயர்'ன்னு சொல்லி எங்க போனாலும் இப்போ மகா எப்பிடியிருங்கன்னு கேட்கவைச்சிட்டாங்க... :( இந்த வேலைய செய்த புண்ணியவானுகளா நல்லாயிருங்க நல்லாயிருங்க... அதற்கு பின்னர் என்னோட சித்தப்பா பொண்ணு மரணத்தை கருவாக வைத்து எழுதிய மாணிக்கமலர். அதன்பின்னர் பொழைக்கிற பொழைப்பிலே நடக்கிற விசயங்களை வைத்து எழுதிய காதல் கதையும் எழுதியதில் பிடித்ததுதான்.

ஆனால் இதையெல்லாம் மீறி எனக்கு ரொம்பவே பிடித்தது சவடன் கதைதான். அதிலே நான் எழுத வந்த விஷயத்தை தருமி ஐயா தவிர யாருக்கும் படித்த பொழுது புரியவில்லை என்று நினைக்கிறேன். மேல்சாதியை சேர்ந்த நபரும் கீழ்சாதியை சார்ந்த நபரும் நண்பர்களாக இருக்கும்பட்சத்தில் ஏதாவதொரு சந்தர்ப்பத்திலே வரும் பிரச்சினைய சுற்றியிருப்போர் எப்பிடி மேல்சாதிக்காரனுக்கு ஏத்தமாதிரி மாற்றுவார்கள் என்பதே அந்த கதையின் கரு. அதுவும் சுத்தமான மதுரை கிராமத்து மொழி நடையிலே எழுதினா மட்டுந்தான் சரியா வருமின்னு முடிவு செய்து கிட்டத்தட்ட பத்து - இருபது முறையாவது அதை திரும்ப திரும்ப படித்து சரி பார்த்து கொண்டேயிருந்தேன். கொஞ்சம் மிஸ் ஆனாலும் அது தப்பான அர்த்தத்தை இங்கே ஏற்படுத்தி விடும் என்பதால் மிகவும் கவனத்தோடுதான் அதை பப்ளிஷ் பண்ணிண்ணேன். பெரிய அளவுக்கு வரவேற்பு இல்லாட்டியும் பெரிய அளவுக்கு பிரச்சினைய கொண்டு வராதுனாலே அந்த கதைதான் எனக்கு ரொம்பவே பிடித்தது.... :)


இதேமாதிரி எனக்கு பிடித்ததை நீங்களும் சொல்லுங்கன்னு நான் கூப்பிட போறது எனக்கு முதல் பின்னூட்டம் இட்ட குமரன் ததா.

இவரும் ஒரு வகையிலே எனக்கு கற்று கொடுத்தவர் அவருதான் கிரேட் மொக்கை புயல் செந்தழல் ரவி

எந்த கதை எழுதினாலும் இவரை மாதிரி எப்பிடியாவது எழுதியிறனுமின்னு முடிவு பண்ணி ஆரம்பிப்பேன்,வழக்கம்ப்போலே முடியாவே முடியாது. அவருந்தான் கள்ளியிலும் பால் வடித்த ஜிரா.

இவரு கொஞ்சம் ஸ்பெசலுதான் எங்க ஊருக்காரு. என்ன பதிவு போட்டாலும் மனசார பாரட்டுவாரு. அவருதான் நம்ம மதுரையம்பதி... :)

கப்பி, இம்சையக்கா வலையுலக தபூசங்கர் நவீன்'ன்னு எல்லாரும் சொன்ன வேலைய சரியா செஞ்சுட்டேன்னு நினைக்கிறேன்... நீங்க நாலு பேரும் நான் சொன்னதை சரியாக செஞ்சுருங்க... :)