Wednesday, May 10, 2006

கவிதை + விடுகதை



மானுடர் வயிறார

சாயும் கோபுரங்கள்.....?




கண்டுபிடிங்க பார்க்கலாம்......?

மிகவும் பிடித்த கவிதை

முதல் வேலை
என்ன இது வேலை
எனக்கு பிடித்தவாறு
உடை அணிய உரிமை மறுக்கும் வேலை!!!
என் தாய்மொழி,
என் நாவில்,
எட்டிப்பார்க்ககூட தடை போடும் வேலை!!!
போலியான புன்னகையொன்றை,
நிரந்தரமாய் என் முகத்தில்ஒட்டிவிட்ட வேலை!!!
சரித்திரம் படைக்கவேண்டும்!
புரட்சியாய் புறப்படவேண்டும்!
தேசத்தை நிமிர்த்தவேண்டும்!
எனும் கனவையெல்லாம்கம்ப்யூட்டரில் கட்டிப்போட்டவேலை!!!
காந்தி விரட்டிய,வெள்ளையன்
இரவில் நித்திரை காண
என் நித்திரை கலைக்கும் வேலை!!!
இங்கு கற்றதையும்,பெற்றதையும்,
வெளிநாட்டு டாலருக்கு
அடகுவைத்துவிட்ட வேலை!!!
குவியலாய் இறுகிப்போன
இந்த வெறுப்பையெல்லாம்
சுக்குநூறக சிதறடித்தது,
"இருதுளி" கண்ணீர்!"
ரெம்ப சந்தோசமா இருக்குடா"
முதல்மாச சம்பளத்தை நீட்ட,
தாயின் கண்ணில் தோன்றியஒருதுளி!"
ரெம்ப கஷ்டமாக இருக்குடா"
வெகுநாளாய் வேலை தேடும்,
நண்பனின் கண்ணில் தோன்றியமற்றொரு துளி!!
-K.கார்த்திக் சுப்புராஜ்