எனக்கான வெளியில்.......
சுயமறிதலின் போரட்டங்களில்
பறக்குமெனது ஆத்மா!
மேகக்கூட்டங்களில் கரைசலை நீர்க்கும்
வான்வெளியில் கலவாத
போரட்ட பாங்கொடு ஓப்பிட தொடங்கியதன் பயணம்
உச்சமென்னும் நிலைக்கு அடிபணியும்
நிலவிடமும்,உச்சமென்னும் நிலையொன்றை ஆளும்
ஞாயிறென்னும் மாயை தர்க்கம் கண்டு தோற்று
நிலையற்ற தன்னிலை அறிந்து திரும்பியதும்
இன்னுமொரு இரவிலும் தன் பயணத்தை தொடர
அதனின் திட்டங்களை வரையறுத்து கொண்டது.
அதன் பயணகால திட்டநடவடிக்கை வரையிலான
என் இருப்பு
குழப்பவெளிகளில் அலையும்
குருட்டு புலியின் வன்மைக்கு
ஒப்பானதே.