Friday, October 27, 2006

மதுரை வலைபதிவர் சந்திப்பு

முகம் தெரியா மனிதர்கள், சில வேளைகளில் கருத்து ஒற்றுமை என்பதை பேச்சளவில் கூட ஏற்றுக்கொள்ளா மனிதர்கள், இவ்வளவு முரண்பாடுகள் நிறைந்த எங்களை ஒன்றிணைந்தது தமிழ், அதுவும் தமிழ் வலையுலகு.

சிலவேளைகளில் பேச்சு,எழுத்து அனைத்திலும் ஆங்கிலமாகி போனவுடன் எனக்கு சின்ன சலிப்பு தட்ட ஆரம்பித்தது. என்னவொரு வாழ்க்கை அதுவும் நம்முடைய தாய்மொழியில் எழுதவோ, சுயகருத்துகளை பிறரிடம் பகிர்ந்துக் கொள்ளக்கூட வழிவகை இல்லமால் போயிட்டனோ என்று???.

அப்போது அறிமுகமான வலைப்பூ உலகத்தில் சிலவகைகளை பதிய ஆரம்பித்தேன். நான் சில பதிவர்கள் பதிவுகளை படித்து சிலாகித்து இருக்கிறேன், எப்படி இவ்வளவு அருமையாக எழுதுகிறார்கள், விவாதங்கள் நடத்துக்கிறார்கள் என்று. அதையெல்லாம் நான் செய்ய முயன்று தோற்றுப்போயிருக்கிறேன்.ஆனால் அவர்களின் அன்பை சம்பாரித்து(???) அவர்களின் குழுமத்தில் ஒரு அங்கத்தினராக இடம் பிடித்திருக்கிறேன். வலைப்பூ பதிவர் சந்திப்புக்கு கலந்துக் கொள்ள சென்றேன் என்றால் என்னையும் அங்கிகரித்து உள்ளார்கள் என்றே அர்த்தம்.



எதுக்கு இம்பூட்டு பில்டப்ன்னு நீங்க கேட்கறது புரியுது, அது ஒன்னுமில்லைங்க என்னையும் ஒரு மனிசனா மதிச்சு மீட்டிங்கெல்லாம் கூப்பிட்டாங்களே அதுவும் அதை பத்தி ஒரு பதிவு வேறே போடப் போறோமின்னு ரெண்டு நாளா யோசிச்சு மேலே இருக்கிற ஒரு பாரா எழுதினேன்.:)

வலைப்பதிவர் சந்திப்புன்னா போண்டா,டீ இல்லாமல் கூட நடத்தி காட்டமுடியிமின்னு செய்து காட்டிய தருமி ஐயாவிற்கு ஒரு நன்றி. ஆனா எல்லாப்பேத்துக்கும் ஓசிலே பவண்டோ, கைமுருக்கு,அதிரசம் கிடைச்சுச்சே. முருக்கு, அதிரசம் கொண்டுவந்த மகேஷ்க்கு நன்றி.



சந்திப்பு நடைப்பெற்ற இடமான அமெரிக்கன் காலேஜே பத்தி கொஞ்சுண்டு சொல்லிக்கிறேன். இது 1881 வருடத்தில் அமெரிக்க மெசனரிகளால் துவங்கப்பட்ட கல்லூரியாகும். அக்காலத்து பாணி சிவப்பு வண்ண அழகான கட்டிடங்களும், பசுமை நிறைந்த மரஞ்செடி கொடிகளால் சூழப்பட்ட அற்புதமான வளாகம்.

நான் போறப்பா சரியா மணி 3.05 ஆச்சு. மீட்டிங்க் 3 மணிக்குன்னு சொல்லிருந்தாங்க. நமக்குதான் இந்த பஞ்சு மிட்டாயே(Functionality)பிடிக்காதே. பேருக்கு அனுமதி வாங்குறமாதிரி சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லிட்டு உள்ளே போனேன். வாசலிலே தருமி,ஞானவெட்டியன் ஐயா,பிரபு ராஜதுரை,ஜி.ராகவன்,முத்து,மகேஷ் ஆகியோர் நின்று கொண்டு இருந்தார்கள்.



தருமி ஐயா எல்லாரும் சொல்ற மாதிரி மொதல்ல இருந்த போட்டாவுக்கும் நேரில் பார்க்கிறதுக்கும் துளியும் சம்பந்தமில்லாமல்தான் இருந்தார். கொஞ்சம் நேரங்கழிச்சு வந்த வித்யாக்கா என்னா தருமி சார் நீங்க பார்க்க ராம் மாதிரி யூத்தா இருப்பிங்கன்னு பார்த்தா அதவிட ரொம்ப சூப்பரா இருக்கீங்க'ன்னு ஒரு கமெண்ட் அடிச்சார். அதிலே இருந்தது எனக்கு உள்குத்தா இல்லே தருமி ஐயாவுக்கு வெளிக்குத்தான்னு தெரியலே. எனிவே வித்யா அதை மைண்ட்லே வச்சிருக்கேன், எப்போ தேவைபடுதோ அப்போ வந்து இந்த மாதிரி பட்டும் படாமே யாருக்காவது ஒரு குத்து விட்டுக்கிறேன். அப்புறமா இவருதாங்க ஜிரான்னு சத்தியம் அடிச்சு சொல்லறவரைக்கும் அவருதான் ஜி.ராகவன்னு வித்யா நம்பவே மாட்டேன்னு சொல்லிட்டாங்க. என்னா பண்ண போட்டோவிலே இருக்கிறமாதிரி எப்பவும் இருக்கமுடியுமா என்னா???



ராஜ்வனஜ் வந்துச் சேர்ந்ததும் கல்லூரி வளாகத்திள்ளே இருக்கிற கேண்டினுக்கு சென்றோம்,. அங்கே இருக்கிற கல்பெஞ்சிலே உட்கார்ந்து கதைக்க ஆரம்பித்தோம். அதற்க்குள் வரவனையான் அவருடைய நண்பர் சுகுணாவுடன் வந்து சேர்ந்தார். வந்ததும் மொதல் கமெண்டே "போட்டோவிலே தான் ரொம்ப அழகா இருக்கீங்க" தருமியை பார்த்து. அனைவருடைய அறிமுகபடலம் தொடங்க ஆரம்பித்தது. அதில் ஞானவெட்டியன் ஐயா தன்னைப் பற்றி சின்ன உரைதான் ஆற்றினார். அதற்கப்புறம் யாருமே அறிமுகத்துக்காக வாயே திறக்கவில்லை.


எல்லாரும் மாதிரி நானும் தொடரும் போட்டுக்கிறேன்.



ஆளாளுக்கு வந்துக்கிட்டு போட்டோவிலெதான் அழகாக இருக்கீங்கன்னு சக்கை ஓட்டு ஓட்டுறானுங்க.. இந்த பயலே மாதிரி நான் ஏன் மாத்தினேன்னா'ன்னு ஒரு போஸ்ட் போட்டு படத்தே மாத்திப்பிடணும்.