Monday, July 9, 2007

போங்கடா! நீங்களும் ஒங்க வேலையும்.....

நம்ம அருமை பெருமையெல்லாம் அடுக்கோ அடுக்கி பதிவா போட்டும் இன்னும் மிச்சம் இருக்கிறதையெல்லாம் சொல்லுடா'ன்னு கூப்பிட்ட இத்தனை பேரையும் மதிச்சு பதிவை போடமுடியாமே ஆபிஸிலே வேலையை தவிர வேற எதையும் பண்ணக்கூடாதுன்னு எல்லாத்திலேயும் ஃபீயூஸ் பிடுங்கிட்டானுக! அவனுக கிட்டே சண்டை போட திராணியில்லாமே இப்பிடிதான் தலைப்பு வைச்சிக்க முடியுது... :(

1) கப்பி பய
2) தலைவலி
3) தருமி ஐயா
4) மணிகண்டன்
5) கவிதாயினி
6) கொல்லிமலை ஜே.கே




என்னையும் மதிச்சு கூப்பிட்ட அவங்க பாசத்தை நினைச்சி ஆனந்த கண்ணிரு பெருக்கெடுத்து ஓடுதுங்க.அந்த வெள்ளத்தை தடுத்து நிறுத்திட்டு வந்தா நம்ம ஆனைக்குட்டி லேப்டாப்'லே ஒட்கார்ந்துட்டு அடம்பிடிக்கிது, அதை ஓரமா ஒரு இடத்திலே பார்க் பண்ணிட்டு நம்மோட ஒலக சாதனைகளை ஒவ்வொன்னா எடுத்து விடுறேன். கல்லை விட்டு அடிக்கிறதா இருந்தா ஒவ்வொருத்தரா அடிக்கனும், இப்பிடியெல்லாம் மொத்தமா எல்லாம் சேர்ந்துக்கிட்டு அடிக்கப்பிடாது. டேமேஜ் ரொம்ப பலமா ஆகுதுலே.... :)

1) எங்கன இருந்தாலும் வேஷ்டி இல்ல கைலி, சட்டையோட தான் இருக்கிறது. பெங்களூரூலே தம்பி வேலைப் பார்க்குதே கொஞ்சம் நல்லாலாம் டிரெஸ் போட சொல்லக்கூடாதா'ன்னு எங்க தெருக்காரங்க அம்மா'க்கிட்டே சொல்லிட்டே இருப்பாங்க. ஹிம் அதுக்கு அவங்க ரிக்கார்டட் டயலாக் " பண்டி பய எதைச் சொன்னாலும் கேட்டு தொலையுறான் இல்ல"

2) படிச்சது என்னோமோ கணக்கிலே இளங்கலை பட்டம். ஆனா பார்க்கிறது கம்ப்யூட்டரிலே வேலை. நாமே எடுத்த மார்க்'லாம் இஞ்சினீயர் சீட்டு எல்லாம் கொடுக்கமுடியாது'ன்னு சொல்லிட்டாலும் நாங்கெல்லும் என்னத்தயோ படிச்சி கம்ப்யூட்டர் ஆஞ்சுனேயர் ச்சீ இஞ்சினீயர் ஆகியாச்சுலே...

3) எங்கப்போனாலும் நாமே பேசுற பேச்சு, அப்புறம் பண்ணுற நொணநாட்டியத்தை வைச்சே இது மருதயிலே இருந்து கிளம்புனது'னு ஈஸியா எல்லாரும் கண்டுப்பிடிச்சிருவாய்ங்கே.

4) அப்புறம் இந்த கதை எழுதுறேன், கவிதை எழுதுறேன்னு என்னத்தயோ பண்ணக்கிட்டு இருக்கிறது! என்னோட டைரியை படிச்ச ஒரு நல்லவர் ஒங்களுக்கு நல்ல மொழி வளமை??? இருக்குன்னு சொல்லிப்பிட்டார். ஹி ஹி இனி ஒங்க பாடுதான் பெரும் திண்டாட்டம்.

5) பசங்க எல்லாரையும் ஓட்டி லந்து விடுறதுதான் மொத வேலையே! ஒரு பயப்புள்ள கல்யாணத்துக்கு போய் அவனை மேடையிலே வைச்சே செமயா லந்தை விட்டு இன்னவரைக்கும் அவன் எங்கக்கிட்டே பேசுறதே இல்லை.

6) டெக்னாக்லாஜிலே எக்ஸ்பர்ட் ஆகுறேன் பேர்வழின்னு என்னத்தயாவது போட்டு நொண்டோ நொண்டி அதை ஒன்னுமில்லாமே ஆக்கி ஒப்பேத்துறது பெரிய சாதனை மக்கா... எங்கப்பாரு அடிஅடின்னு அடிச்சும் இன்னவரைக்கும் அது குறைஞ்சப் பாடு இல்ல...

7) எத்தனதடவை தான் சொல்லுறதுன்னே தெரியலை.. இப்பவும் சொல்லிக்கிறேன், பொஸ்தகத்தை படிக்க ஆரம்பிச்ச அதை கீழே வைக்கிறதே இல்ல. சின்னவயசிலே அம்புலிமாமா படிக்கிறோப்போ எங்கப்பார் சொல்லுவாரு.. "இந்த பயலை வீட்டிலே விட்டுட்டு போனா திருடன் வந்து திருடிட்டு போனாலும் அவன் பாட்டுக்கு படிச்சிட்டு இருப்பான்!"

8) இதுதாங்க என்னோட அருமை பெருமையெல்லாம் என்னை எல்லாருக்கும் அடையாளம் காட்டுறது. அது என்னான்னா என்னோட சோம்பேறித்தனம். எல்லாரும் ஒன்னா கூடி எங்கய்யாவது வெளியா போலமின்னு இருந்தா நாந்தான் லாஸ்டா நிப்பேன். அம்புட்டு சுறுசுறுப்பான சோம்பேறி.