Tuesday, December 18, 2007

எங்கயிருந்துடா கிளம்புறீங்க?

போன ஜென்மத்திலே பெரிய பெரிய பாவமெல்லாம் பண்ணினதாலேதான் பெரிய பெரிய சிட்டிகளிலே கஷ்டப்படுறோமின்னு மனசுக்குள்ளே நினைச்சிக்குவேன், ஹைதராபாத், சென்னை கடைசியா பெங்களூரூன்னு வாழ்க்கை வருஷமா போயிட்டுருக்கு, இப்போ அதுக்கு என்னாடா'னு கேட்கீறிங்க, ஒங்க கேள்விக்கு பதில் என்னான்னா பேச்சிலரா வண்டியோட்டுறது பெரும் பாடா இருக்குங்க, No more imagination. சோத்துக்கு பெரும்பாடா இருக்கு, காலையிலே ரெண்டு இட்லிய தின்னுட்டு ஆபிஸிக்கு போலாமின்னு பார்த்தா அடர்பச்சை கலரிலே சாம்பார்கிற பேருலே கொடுக்கிறானுக, அதை கஷ்டப்பட்டு எப்பிடியாவது தின்னுட்டு பொழுதை போக்கிட்டு இருந்தா மதியத்துக்கெல்லாம் சரியா சொல்லி வைச்சமாதிரி பசி வந்துருது, பச்சை கலரு பானக்கரம் சாம்பாரை நினைச்சா படக்கென்னு அமுங்கி போயிருது. நம்ம சோட்டு பயலோட கூட்டாளி இங்கன வந்து ரெண்டு நாளு இண்டர்வீயூ'க்கா தங்கியிருந்தான். வேலைக்கு ஆஃபர் லெட்டர் கிடைச்சும் வேணாவே வேணாமின்னு போயிட்டான், அதுக்கு அவன் சொன்ன காரணம்...

"நிக்க வைச்சி சோறு போடுறானுவே! சாம்பார்'னு என்னத்தயோ ஊத்துறானுக, தின்னுமுடிச்சி நாலு மணிநேரத்துக்கும் இனிக்குது"

"ஆட்டோக்காரனை கூப்பிட்டா என்னாம்மோ அவங்கிட்டே கடன்கேட்டமாதிரி நிக்காமே போறான்"

"ஊரு முழுக்க ரோடு மறியல் நடக்கிறமாதிரி வண்டிக்காரனுக ஊர்ந்துக்கிட்டே போறானுக"

நீங்களே இங்க கிடந்து அனுபவிங்கடா, என்னாலே கொட்டமுடிஞ்ச குப்பைய சென்னையிலே கொட்டிக்கிறேன்னு போயிட்டான்.... :(

எங்கயிருந்துடா கிளம்புறீங்க?

______________________________________________________________________________________


வெளியூருலே வந்துதான் நம்ம உசுரை வாங்கிட்டு போனானுகன்னு ஊருக்கு போயிருந்தப்போ நம்ம பேவரைட் கடையிலே ஈரல் ரோஸ்ட்'டோ பொரட்டா சாப்பிட்டு இருக்கிறப்போ எங்க ஏரியா தண்ணி வண்டி ஒன்னு ஆடிட்டே வந்து எப்பக்கத்திலே ஒக்கார்த்துச்சு. வந்ததும் என்னாடா ஊருக்குள்ளே பொழக்க வக்கில்லாமே வெளியூருலே வெளக்கெண்ணை ஜாகை மாத்திக்கீட்டியாமே'னு கேட்டுச்சு. என்னத்த சொல்ல, ஆமாம் இங்கன இருக்கிற ஒன்னமாதிரி இம்சைகதான் என்னை தொரத்திவிட்டிங்கன்னு பதிலு சொன்னேன், அப்போ கடைக்காரன் இலை போட்டதும் அவங்கிட்டே இம்சைய கூட்ட ஆரம்பிச்சிருச்சு. ஏய் இங்காரு, நேத்துதான் எனக்கு ஆம்பிளேட் போட்டுக் கொடுத்து ஏமாத்திட்டே, இன்னிக்காவது பொம்பிளைட் கொடு'ன்னு மொக்கை ஜோக்கை ஒன்னை சொல்லி தானா சிரிச்சுச்சு, ஐயோ அவ்வளவு நேரமா வேகமா வயித்துக்குள்ளே போயிட்டு இருந்த பொரட்டா மெதுவா நகர ஆரம்பிச்சிருச்சு. ஏலேய் பெங்களூரூ'க்கு நான் இருவது வருசத்துக்கு முன்னாடி டூர்'லே வந்திருக்கேன், அங்கதானே லாலுபார்க்கு இருக்கு, அதை சுத்திதானே ஊரு, இப்போ எப்பிடியிருக்கு ஊரு, அப்பிடிதானே இருக்குன்னு கேள்வி கேட்டு தொலைச்சது, என்னத்த பதில் சொல்ல? பொரட்டா பிச்சி போட்டு குழம்பு ஊத்தி திங்க ஆரம்பிச்சதும் இன்னும் தொண தொண'ன்னு கேள்வி கேட்டு ஊசுரை வாங்கிட்டு இருந்துச்சு. அப்போதான் ஏண்டா நாமே ரெண்டு பொரட்டா வாங்கி தொலைச்சோமின்னு வெறுப்பிலே இருந்தேன். கடைக்காரன் குழம்பு ஊத்த வந்தப்ப்போ முதலிலே பச்சை கலருலே சால்னா ஊத்தினே இல்லை, அங்க ஒருத்தர் சாப்பிட்டு இருக்காரு பாரு அந்த் செவப்பு கலரு சாலுனா'வே ஊத்துன்னு கேட்டுச்சு. நான் சாப்பிட்டது போதும் என்னை இவங்கிட்டே இருந்து காப்பத்திரு மீனாச்சியத்தா'னு ஓடி வந்துட்டேன்.

எங்கயிருந்துடா கிளம்புறீங்க?

______________________________________________________________________________________


காலேஜ் படிச்சு முடிச்சதும் ஜீனியரை'யே கரம்பிடித்த நம்ம சோட்டு பய வீட்டுக்கு கூப்பிட்டானேன்னு போயிருந்தேன். அம்மணி மார்கெட் போயிருந்தாங்க, டெய்லி இவந்தான் போவான். இன்னிக்கு ராம் வர்றான், அவங்கிட்டே நாந்தான் எல்லா வேலையும் பார்க்கிறேன்னு தெரியக்கூடாது'ன்னு அவங்க காலிலே விழுந்து எந்திருச்ச தடயத்தை கவனிச்சதும் பயப்புள்ள சன் டீவி, திருவாளர் திருமதி'ன்னு பேச்சை மாத்திட்டான். அந்த நிகழ்ச்சியிலே இவனும் இவன் அம்மணியும் கலந்துக்கனுமின்னு ஆசையா இருக்குன்னு சொன்னான். சரி அது பெரிய ஏதோ குவீஸ் ப்ரோகிராம் போலே, அதிலே இவங்க அறிவை திரட்டி ஜெயிச்சிட்டு வர்றதுக்கு துடிக்கிறானுக'னு கருமம் அந்த நிகழ்ச்சியை பார்க்கிற வரைக்கும் நினைச்சிக்கிட்டேன். கருமத்தை ரெக்கார்ட் வேற பண்ணிவைச்சிருந்து அதை வேற பிளே பண்ணி காட்டினான். அவன் மேலே என்னிக்கும் மரியாதை வைச்சது கிடையாது, இதை பார்த்துட்டு இந்த நிகழ்ச்சியிலே கலந்துக்கனுமின்னு துடிக்கிற அவனை என்னத்த சொல்லி தொலைக்கிறது. Are you mad'னு கேட்டதுக்கு பயப்புள்ள'க்கு கோவம் பொத்துக்கிட்டு வந்துருச்சு! முதலிலே ஒங்க வீட்டுக்கு கிளம்புடா'ன்னு பத்தி விட்டுட்டான். அந்நேரம் வீட்டுக்குள்ளே வந்த அவன் சம்சாரம் இரு, சாப்பிட்டு போ'ன்னு சொன்னுச்சு, இவன் உள்ளே இருந்துக்கிட்டு பொறமை பிடிச்சவனுகெல்லாம் சோறு போடாதம்மா'னு சொல்லிட்டான்.... :(


உண்மையிலே கேட்கிறேங்க எங்கயிருந்துதான் இவனுகளுக்கெல்லாம் கிளம்பி வர்றாங்கன்னு தெரியலை...