Thursday, February 8, 2007

ஆத்தா! நானும் சுடர் ஏத்திட்டேன்!!!



ஒலிம்பிக்'லே ஒவ்வொரு கண்டமா சுடரை தூக்கிட்டு ஒடி இன்னொருத்தவங்கிட்டே சேர்த்து அவங்களையும் ஒடவைக்கிறமாதிரியே, ஒருத்தருக்கு இன்னொருத்தர் கேள்விகேட்டு அவரு இன்னொருத்தருக்கு கேள்வி கேட்டு வர்ற சங்கிலிதொடர் இங்கே தேன்கூட்டு சுடர் பதிவா ஆகிருக்கு, முதலிலே ஏத்துனது வெட்டிவீரர் பாலாஜி, அவரு நம்ம 12B'கிட்டே குடுக்க, அவரும் வழக்கம்போலே நக்கல்நையாண்டி எல்லாம் பண்ணிமுடிச்சிட்டு அதை நம்ம அகில உலக வருத்தப்படாத வாலிபர்கள் சங்கத்தின் தல'கிட்டே கொடுக்க அதை அவரு இப்போ என்கிட்டே குடுத்துருக்காரு,

தல,
எனக்கு சின்னவயசிலே படிச்ச குறளு ஒன்னு சட்டுன்னு ஞாபகம் வந்துச்சு,ஆனா அதுக்கு சரியா அர்த்தம் வேற தெரியலை.

சரின்னுட்டு நம்ம மன்னார்'கிட்டே கேட்டேன், அவரு என்னா சொல்லிருக்காருன்னா..


இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
[517- தெரிந்து வினையாடல்]

இப்ப ஒனக்கு ஒரு காரியம் நடந்தாவணும். அத்தயும் இன்னொருத்தர் பண்ணணும்னு நெனக்கற நீ. இன்ன பண்றதுன்னு யோசி. இந்தக் காரியத்தை இன்னின்னாருதான் பண்ண முடியும்னு ஒரு லிஸ்டு போட்டு, அதுல யாரு இதுக்கு தோதா வரும்னு முடிவு பண்ணு. அந்தாளக் கூப்ட்டு 'என் ராசா! நீஇதான் கண்ணு இந்தக் காரியத்தச் சேய்யனும் எனக்காவ'ன்னு சொல்லி அவங்கிட்ட கொடுத்திடு. நீ நம்பினதுக்கே அவன் ஒனக்காவ சுத்தபத்தமா முடிச்சுக் கொடுப்பான்.


நீ எம்மேலே இம்புட்டு நம்பிக்கை வைச்சு என்னையும் மனிசனா மதிச்சு அஞ்சு கேள்வி கேட்டுருக்கே... எல்லாரும் ஒன்னய அடிக்கடி சொல்லுறமாதிரி நானும் சொல்லுறேன்.

"நீ ரொம்ப நல்லவரு தல"

1. குரூ...பெங்களூருதல்லி நிமகே இஷ்டமான, ப்ரீத்தியான நாலு சமாச்சாரங்கள் சொல்ல பேக்கோ.

ஏழித்தினி பிடி..

I) இங்கே இருக்கிற பசுமையான இயற்கைசூழல், எல்லா இடத்திலும் சின்ன அளவாவது ஒரு பூங்கா ஒன்னு இருக்கும்.

II) கர்நாடக மக்களின் மொழிவளமை. தாய்மொழிக்கு முன்னுரிமை தரதோடு மட்டுமில்லாமே இந்தி, இங்கிலிஸ்'ன்னு எல்லாமொழியையும் ஆரம்பகல்வியிலே இருந்தே ஆரம்பிக்கிறது.

III) ஹி ஹி பொண்ணுங்க.....

IV) டிராபிக் ஜாம்:)

2. அவ்வப்போது ராயலைக் கவிதை எழுதத் தூண்டுதலாக இருப்பது என்ன?

மண்டையிலே மசாலா காலியாகிறப்போ அந்த தப்பை பண்ணுவேன், அதிலே இந்த காதல் கவிதை எழுதுறேன்னு சொல்லி படிக்கிற எல்லாரையும் நிறைய தடவை வெறுப்பேத்தி இருக்கேன்.

3. உன்னோட வாழ்க்கையில நடந்த, இக்கட்டான சூழ்நிலையில் மாட்டி மீண்ட மாதிரி ஏதாவது ஒரு சம்பவம்/அல்லது நகைச்சுவை சம்பவம் ஒன்னைச் சொல்லப்பா?

ஒன்னா? ரெண்டா ? நிறைய தடவை நடத்துருக்கு, அதைக்கூட நான் ஏன் மாத்தினேன்னா?ன்னு பதிவை போட்டு செய்வினை வைக்கிறவங்களை தேடிப்போயி என் சொந்தசெலவிலே வைச்சிக்கிட்டேனே???

இப்போ லேட்டஸ்டா ஒன்னு சொல்லினுமின்னா போனவாரம் வெள்ளிக்கிழமை ஜிரா விட்டிலே சின்ன வலைப்பதிவர் மீட்டிங் நடத்துச்சு, நான் அவரு வீட்டுக்கு முன்னபின்னே போனது கிடையாது, அதுனாலே சரியா வழியும் தெரியாது, ஒரு இடத்திலே இருத்துட்டு அவருக்கே போன்பண்ணி நீங்களே வந்து என்னை பிக்கப் பண்ணிட்டு போயிருங்கன்னு சொன்னேன், சரி அவரு வர்றவரைக்கும் ஏன் சும்மா இருப்போமின்னு விவசாயிக்கு போன்பண்ணி நீங்க எங்கே இருக்கீங்கன்னு கேட்டேன், அவரு அதுக்கு "நானு ரொம்ப பிசி, நீங்க எங்க இருக்கீங்கன்னு கேட்டுட்டு அப்பிடியா எல்லாரையும் போய் மீட் பண்ணிட்டு போன் பண்ணுங்க"ன்னு சொல்லி வைச்சிட்டாரு.

ஜிரா வீட்டுக்கு போனா அங்கே பெரிய கோஷ்டியே உட்கார்த்து கும்மியடிச்சிட்டு இருத்துச்சு, முத்து தமிழினி, நாமக்கல் சிபி , கொலைவெறி படை தலைவர் செந்தழல் ரவி, காதல்முரசு அருட்பெருங்கோ, ஓமப்பொடி சுதர்சன், வீட்டுக்கு ஓனரு ஜிரா, அப்புறம் இன்னொரு எக்ஸ்டரா'வா ஒரு உருவம் உட்கார்த்திருச்சு, அவரை பார்த்ததும் சரியா யாருன்னு மட்டுபடலை, கிட்டத்தட்ட அரைமணி நேரமா பேசிட்டு இருந்தோம், ஆனா எல்லாரும் என்னைப் பார்த்து ஹி ஹி'ன்னு ஒருமாதிரியா தான் சிரிச்சுட்டு இருந்தாங்க...

கடைசியிலே முத்து "என்னா ராம் எல்லாரையும் சரியா அடையாளம் கண்டுபிடிச்சு பேசினீங்க..!ஆனா இந்த ஆசாமியை விட்டுட்டிங்க?"ன்னு கேட்டாரு, எனக்கு அவர யாருன்னே தெரியலை? இருந்தாலும் ஒரு Guess'க்கு இளா'வான்னு கேட்டேன், ஆனா மனுசன் என்னை கலாய்ச்சு தொங்கப்போடனும்மின்னே குரலை கூட மாத்தி ஆளை அதை வச்சு கூட கண்டுபிடிச்சிறகூடாதுன்னு பெரிய வில்லத்தனமெல்லாம் பண்ணிருந்தார். அங்கே இருந்த எல்லாப்பேரும் திட்டம் போட்டு என்னை ஓட்டி எடுக்கனுமின்னு பெரிய பிளான்'டோ இருந்திருக்காங்க. இளா'வுக்கு நான் போன் பண்ணுறோப்போ அவரு ஜிரா வீட்டுலே உட்கார்த்திருக்காரு. அதுவுமில்லமே நான் பேசினதை ஸ்பிக்கர்'லே வேற பொட்டு விட்டுருக்காரு.

கிட்டத்தட்ட ஒரு வருசமா பழக்கமிருந்தாலும், சங்கமின்னு வேறே ஒரே இடத்திலே கும்மியடிச்சாலும் இப்பொதான் நேரா பார்க்கிறேன். ஹீம் என்னபண்ண? விட்றா! விட்றா !இந்தமாதிரி பல்பு வாங்கிறது நமக்கு மொததடவையான்னு மனசை தேத்துக்கிட்டேன். எல்லாரும் ஹெக்கெபிக்கென்னு சிரிச்சு முடிச்சதும் வழக்கம்போலே ஒரு வீரவசனம் "நான் உள்ளே வர்றப்பவே நினைச்சேன், நீங்க இளாவான்னு கேட்கலாமின்னு தோணுச்சு"ன்னு உதார் விட்டேன்.

4. மிசஸ் ராயல் பத்தி மிஸ்டர் ராயலின் கனவுகள் என்னென்ன?

அது கனவு எல்லாம் இல்லை....தவம்ன்னு கூட வைச்சுக்கலாம். காரணம் என்னான்னா என்னாலே ஒரு சரியான முடிவு எடுக்கமுடியாது, அப்பிடியே எடுத்தாலும் எங்கேயாவது ஒரு இடத்திலே மாட்டிக்கிட்டு பே'ன்னு முழிப்பேன், அதுவுமில்லாமே மெனக்கெட்டு ஊதி ஊதி எரிச்சா எரியிற வாழைமட்டை மாதிரி வேறே நானு,ஒருத்தர் தார்குச்சியை வெச்சுக்கிட்டு அடியை போட்டு விரட்டுனா தான் என்னைலே வேலையே பார்க்கமுடியும். அதுனாலே என்னை வழிநடத்துற எஜமானியா என்னோட மிஸ்ஸஸ் வரனுமின்னு ஆசை இருக்கு.

5. தமிழ் திரையுலகில் உங்களைக் கவர்ந்த இரு திரைப்படக் காட்சிகளைச் சொல்லவும். ஏன் பிடிச்சிருக்கும்னும் சொல்லணும்?

I) இப்போ திடீரென்னு முளைச்சு நான் லிட்டில், பாட்டிலு சூப்பர்ஸ்டார்'ன்னு சவுண்ட் விடுறாய்ங்கே, நம்மளோட எப்பவும் சூப்பர்ஸ்டார் நடிச்ச படமான 'ஆறிலிருந்து ஆறுபது வரை' எனக்கு ரொம்ப பிடிக்கும். அதிலே ஒரு காட்சியிலே ஏழ்மை நிலையிலே இருக்கிற கதாநாயகன் தன்னோட சகோதரி வீட்டுக்கு போறோப்ப தன்னால் இயன்றவரையிலே வாங்கிட்டு போனதை அவள் உதாசினப்படுத்திரதும், அதுக்கு ரஜினி தன்னோட இயலாமையை நினைச்சிட்டு அப்பிடியே கலங்கின கண்களோடு வெளியே வருவார். மேலும் அவருமேலே தங்கை இன்னும் சுடுவார்த்தைகளை பிரயோகிப்பாள். அதையும் அமைதியா கேட்டுட்டு வெளியே வருவாரு..... இப்போ எங்கேய்யா எங்க தலைவர்...???

II) பதினாறு வயதினிலே படத்திலே வர்ற "ஆத்தா ஆடு வளர்த்துச்சு, கோழி வளர்த்துச்சு, ஆனா நாய் மட்டும் வளர்க்கலை! அதுக்கு பதிலா என்னை வளர்த்துச்சு!!!" வசனத்தை நாமே நிறைய இடத்திலே கேட்டுருப்போம். ஆனா அந்த வசனம் வர்ற சூழ்நிலையான கதாநாயகி எந்தவொரு ஆதரவும் இல்லாமே உடல்நிலை சரியில்லாத நிலையிலே அருகிலே இருந்து அவளை கமல் கவனித்துவிட்டு அப்பிடியே தூங்கிருவாரு. ஸ்ரீதேவி கண்முழிச்சு பார்த்து சந்தேகம் + அருவெருப்பு பார்வையோட பார்க்கிற அந்த தருணத்திலேதான் கமல் அந்த வசனம் பிரயோகிப்பார்.

அப்பாடி அஞ்சு கேள்விக்கும் பதில் சொல்லுறதுக்குள்ளே மண்டை காய்ச்சுருச்சுடா சாமியோவ்... இப்போ நான் வேற அஞ்சு கேள்வி கேட்கணுமா???யாரை பிடிக்கிறது, அவங்ககிட்டே என்ன கேட்கிறதுன்னு ஒரே கன்பியூசனு? "ஐயோ ஐயோ'னு உட்கார்ந்து அழாத குறையா இருந்தேன்." ஏன்னா நாப்பாட்டுக்கு எதாவது விளையாட்டா கேட்கப்போக அது வேறமாதிரி அவங்க புரிஞ்சுக்கிட்டா என்னப்பண்ணுறதுன்னு பயம் வேற தொத்திக்கிருச்சு. ரொம்ப நேரமா யோசிச்சு கடைசியா சிக்கினவங்க நம்ம கவிதா'க்கா.

ஓகே ஓவர் டூ கவிதா




1) இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. குறளுக்கு அர்த்தம் தெரியுமாக்கா?

2) அணிலு அணிலுன்னு சொல்லுறீங்களே... அது உங்க மல்டிப்பிள் பர்சனாலிட்டியிலே ஒன்னா?

3) இப்போ இருக்கிற வட்டத்தை தாண்டி நீங்க ரசிக்கிற விஷயங்கள் என்னென்ன?

4) இன்னவரைக்கும் நீங்க நினைச்சு நினைச்சு சிரிக்கிற சம்பவம் என்ன? (அதை படிச்சா எங்களுக்கும் சிரிப்பு வரணும்)

5) ஒரு கற்பனை:- டயம் மிஷின் கிடைச்சு அதிலே நீங்க பின்னோக்கி போகலாமின்னு சொன்னா எந்த வயசை தேர்த்தெடுப்பீங்க?


அப்பாடி நம்ம வேலை முடிஞ்சு போச்சு... குறளோட ஆரம்பிச்சமாதிரி அதை வைச்சே முடிச்சிறேன்.

குறளுக்கு அர்த்தம் சொன்ன மன்னாரு'க்கு அவரு வீட்டு முக்குலே இருக்கிற கடையிலே டீயும், பீடிகட்டும் ஓசியிலே எத்தனை தடவை வேணுமின்னாலும் வாங்கிக்கலாம். அதுக்கு ஆகிற செலவை தல தன்னுடைய சொந்த பணத்திலிருந்து அளிப்பார்.




"தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன் தெரிவார்."
[104-- செய்ந்நன்றி அறிதல்]

நீ ஒரு ஆளுக்கு ஒரு நல்ல காரியம் பண்றேன்னு வையி. அதென்னமோ ஒன்னியப் பொருத்தவரைக்கும் ரொம்ப சின்ன காரியமா இருக்கலாம். ஆனா, அத்தோட மகிமையப் புரிஞ்சவனுக்கு அது ஒரு மலையளவுக்கு பெருசாத் தெரியும். இன்னா காரியம் செஞ்சுப்புட்டேப்பான்னு ஒன்னியக் கொண்டாடிருவான்.