Wednesday, September 6, 2006

போயி விவசாயத்தை பாருங்கய்யா.......

போனமுறை ஊர்பக்கம் போனாப்ப எங்கப்பத்தா கிராமத்து பக்கம் போயிட்டு வராலாமின்னு கூப்பிட்டுச்சு.அங்கெனே சிம்பிளா இருக்கிற மாதிரி காட்டனுமின்னு லீ ஜீன்ஸ்+ ரீபேக் ஷீ நம்ம படபொட்டி, தூக்கிட்டு திரியிற பொட்டி,ரேபான் கிளாஸ் சகிதமா கிளம்பினேன் பட்டிகாட்டுக்கு.

பஸ்'லே ஊருக்குள்ளே போறதுகுள்ளே பாதி உசுருபோச்சு, எப்பிடிதான் தினமும் இதிலே போயிட்டி வருதுகுலோ சனங்க எல்லாம். நாங்கலெல்லாம் பெங்களுருலே ஏசி காத்து'லெ போயிட்டு வர்றோம். அய்யோ அய்யோ.....

ஊருக்குள்ளே போயி இறங்கினவுடனே தடல்புடலா வரவேற்பானுங்கன்னு பார்த்தா ரெண்டு அரைடிக்கெட்டுக பக்கத்திலே வந்து பார்த்துட்டு ஹீம் பூச்சாண்டி இல்லயின்னு கன்பார்ம் பண்ணிட்டு போயிருச்சுக. அதுக்கப்புறமும் கண்ணாடி போட்டுக்கிட்டு தானே நடந்தேன். காடுகரையே காட்டுறேன்னு காச்சுபோன கட்டதரையை காட்டதானே என்னை இழுத்துட்டு வந்தியா நீயீ, ஏலெய் செவனைன்னு வாடா இன்னும் கொஞ்சம் தூரந்தான் நம்ம காடுகரை,நடநட நடந்து கடைசிய தோட்டவீட்டுக்கு கூட்டிட்டு போச்சு அப்புத்தா, அய்யோயோ அந்த வீட்டுலபெருசு ஓன்னு கெடக்கு, எங்க வீட்டுக்கு வந்தாலே நொணநொண்ணு கேள்வி கேக்கும் என்னா கேட்கபோகுதோ.... நினைச்சுக்கிட்டு போன மாதிரியே நோண்ட ஆரம்பிருச்சு.

"என்னப்பே என்னா வேலை பார்க்கிறே பெங்களூருலே...?"

"நானு கம்பியூட்டர் இஞ்சினியர்..! "

"அதிலே என்னா வேலை பார்க்கீறே..? "

"என்னா வேலைன்னா எதுமாதிரின்னு கேட்கிறீங்களா..?"

"ஆமாப்பே "

"நானு சிஸ்டம் அட்மினிஸ்டேரர்...!"

"என்னப்பே என்னா சொன்னே இங்கிலிபிஸ்ல சொல்லு "

"நானு கணினி நிர்வாகி "

"அப்பிடின்னா என்னாதான் உனக்கு வேலை "

என்னாத்தா சொல்ல அதுக்கிட்டே............ கம்ப்யூட்டர்,ரவுட்டரு,சுவிச்சுன்னு மெயிடென் பண்ணறே வேலை அதுஇதுன்னு கொஞ்சம் விளக்க வச்சேன்.

"சரிசரி விடு ஒரே வார்த்தைலை சொல்லுனுமின்ன கழுதை மேய்கீறே..?"

"ஏய் பெருசு என்னா கிராமத்துகுத்தல்னா இதுதானா ஆமா கழுதைதான் மேய்க்கீறேன் அதுவும் கம்ப்யூட்டர் கழுதைக அதுக்கு இப்போ என்னாங்குறே...?"

"ஆங் எம்புட்டு ஓவா வாங்குறே அதுக்கு கூலியா..?"

"கழுதை மேய்க்குறவன் வாங்குறதோட கொஞ்சுண்டு அதிகமாதான் நான் வாங்குறேன்...!"

அதுக்குப்புறம் அது கேட்ட பலகேள்விகளுக்கு நான் எதுவுமே பதிலே பேசலே.முக்கியமா கம்பிட்டர் படிச்சவே பூரா பயலுகளும் முட்டாபசங்கன்னு சொல்லி மடக்கப் பார்த்துச்சு...எங்கப்பா எதுக்கடுத்தாலும் நாங்கல்லாம் அந்த காலத்திலே எம்புட்டு கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்தோம் நீங்க இப்பிடி சொகுசு வாழ்க்கையா இருக்கும்போதே எண்பதிரண்டு நொட்டைசொல்லுன்னு நீட்டிமுழங்குவாரு. நாமெல்லும் அந்த கஷ்டமான வாழ்க்கையின்னா என்னான்னு பார்க்கலாம் வந்தா இதுகதான் இங்க கஷ்டங்களா.

என்னப்பத்தா நீங்க வாழ்ந்த வீடெல்லாம் காட்டுறேன்னு சொல்லி கூட்டியாந்தே, இம்சையே தான் கூட்டிவச்சிருக்கே, டேய் நீ நிக்கிறது நம்ம மண்ணுடா,ஆனா இதுக்கு முன்னாடி இது பூராவும் பொட்டகாடா கிடைத்துச்சு, உங்கப்பன்சித்தப்பனுங்க தான் வந்து இதையெல்லாம் மண்ணையெல்லாம் தட்டிவிட்டு கிணறு வெட்டி நாலுபக்கமும் மரங்கொடியெல்லாம் நட்டு விட்டானுங்க. நமக்கு எம்புட்டு நிலமிருக்குன்னு சர்வே பண்ணி திருமங்கலத்திலே சர்க்கார் ஆபிஸ்ல பதிச்சு வச்சிருக்கானுவே அவிய்ங்களுக்கு அடுத்து நீதான் அம்புட்டுக்கும் கையெழுத்து போடபோற வாரிசுன்னு சொன்னிச்சு. அய்யோ ஒங்க கொடுமை தாங்க முடியலயே, இதை எல்லாத்தையும் வித்தாலும் அஞ்சுடிஜிட் அமவுண்ட் காசு வராது, வேற எதாவது பொன்னு காசுன்னு சேர்ந்திருந்தா கூட தூக்கிட்டாச்சிம் போகலாம், இத வச்சி என்னா பண்ணமுடியும்.

சரி கிளம்புற நேரத்திலேயாவது நம்ம சேட்டையே பெருசுக்கிட்டே காட்டாலமின்னு பெருசு நாப்பது மொழம் கவுறு வாங்கியாரேன், இந்த நிலபுலத்தெயல்லாம் கட்டி மதுரைக்குள்ளே நம்மை வீட்டு பக்கம் கொண்டாந்து விட்டுறு, நான் அங்கேனே சேல்ஸ் பண்ணிக்கிறேன்னு சொன்னேன். ஒரு மொறை மொறைச்சு பார்த்து வாயை திறந்துச்சு, அப்புறமா எனக்கு காதும் கேட்கலை, அது இருக்கிற பக்கத்திலே கண்ணும் சரியா தெரியலே.

இந்த ஊருல எங்கப்பாரு என்னா கஷ்டப்பட்டாருன்னு கடைசிவரைக்கும் தெரியலே. எனக்கு நல்லாதான் குட்டிசாத்தான் அலறிச்சு, தூக்கிட்டுதிரியறிதிலே ஓயீபீ கனக்ட் ஆச்சு. எனக்கு தெரிஞ்சு அங்கனே கஷ்டமின்னா சும்மா தொணதொணன்னு பேசிக்கிட்டே இருந்தானுவே, ஒரு பய வீட்டுலேயும் ஏசி மெசினே காணோம், ஊரை சுத்தி மரமா இருத்துச்சு, சும்மா சும்மா ஜில்லுன்னு காத்து வேற அடிச்சிக்கிட்டே இருந்துச்சு.இங்க வேலையிலிருந்து பத்தி விட்டாங்கனா விவசாயம் பார்க்கப்போறேன் ஏன்னா அதுவும் சும்மா உட்கார்த்திருக்க வேலைதானே.

அதுக்கு முன்னாடி அந்த பெருசை போட்டு தள்ளிட்டுதான் ஊருக்குள்ளே போகணும்.