Thursday, November 15, 2007

சொ.செ.சூ

எங்க ஊருக்குள்ளே அடிக்கடி எவனுக்கும் எவனும் ஆப்பு வைக்கமுடியாது, ஆப்புக்கிறது தனியா ஒரத்திலே தான் கிடக்கும் அதை நாமே தேடி வைச்சிக்கிட்டாதான் உண்டு'ன்னு சொலவாடை சொல்லி வெறுப்பேத்துவானுக. அதையெல்லாம் கேட்டு கெடமாடு மாதிரி மண்டய ஆட்டிக்கிட்டு நாமே ஏறி உட்கார்ந்துட்டு அய்யோ அம்மா'ன்னு கத்தி பிரயோசனமில்ல தானே?? என்ன ஆச்சு நம்ம பயப்புள்ள'க்குன்னு நீங்க பதறது புரியுது, அதுவும் ஒன்னுமில்லங்க நானும் டாக்டர் விஜய் நடிச்ச கலைகாவியமான அழகிய தமிழ்மகனை பார்த்து தொலைச்சிட்டேன்.சுருக்கமா புலம்பனுமின்னா வரவனையூருலேருந்து கிளம்புன புனிதபிம்பம் சொன்னமாதிரி சொ.செ.சூ'வே செவ்வாய்க்கிழமை நைட் நானே வைச்சிக்கிட்டேன்.

நன்றி - அருட்பெருங்கோ
படம்மாய்யா அது.. கலை காவியமய்யா!!!??? கருமம் காறி துப்பி துப்பியே தொண்டை தண்ணி வத்தி போச்சு. நம்ம டாக்டரு பெரிய ஓட்டப்பந்தய வீரராம்,(கருமம் பிடிச்ச எழவு) அவரு எல்லா போட்டியிலும் அவருதான் மொதலிலே வந்து தொலைப்பாராம், (பின்னே எந்த ஹீரோ'டா தோத்து போன மாதிரி காட்டி தொலைச்சிருக்கீங்க?) இவருக்கு போட்டியாளர் ஒருத்தருக்கு ஹீரோ போட்டிக்குள்ளே வந்துட்டா நாமே
தோத்துப் போயிருவோம்'ன்னு பயந்து எந்த திரையுலகத்திலேயும் உபயோகப்படுத்த முடியாத டெக்னாலாஜி'யே யூஸ் பண்ணுறாரு, அடேய் அரைடவுசர் ஆப்பாயில் மண்டை வில்லனுகளா ஏண்டா எல்லாரும் ஒரே மாதிரி லூசா'வே திரியுறீங்க, முடியலடா விட்டு தொலைச்சிருங்கடா... அந்த டெக்னாலாஜி என்னா தெரியுமா? கண்ணுக்கு தெரியாத கம்பி ஒன்னை ஹீரோ பைக் ஓட்டிட்டு வர்ற பாதையிலே குறுக்கே கட்டி வைக்கிறாரு, அதெய்யல்லாம் தெரியாமே நம்ம ஹீரோ பைக் ஓட்டிட்டு வந்துறாரு, அந்த சூழ்ச்சியிலே எப்பிடி தப்பிக்கிறான்னு தான் நாமெல்லாம் சீட் நுனியிலே உட்கார்ந்துறானும். (அப்பிடிய நுனியிலே உட்கார்ந்தமாதிரியே வெளியே ஓடி வந்து தொலைக்கனும்) எங்கனயோ இருந்து பட்டாம் பூச்சி ஒன்னு பறந்து வந்து அந்த கம்பியிலே வந்து உட்காருது, ஸ்பீடா கண்ணுமண்ணு தெரியாமே பைக் ஓட்டிட்டு வந்து நம்ம ஹீரோ சடனா என்னாத்தயோ பண்ணி வீலீங்க் எல்லாம் பண்ணி பறக்குறாரு, (எனக்கு அப்பிடியே எங்களை விட்டுருங்கடா பிளிஷ்ன்னு வீல்'ன்னு கத்த தோணுச்சு !!). எங்கிட்டோ இருந்து நாலஞ்சு குண்டனுக வந்து ஆச்சூ,பூச்சுன்னு கத்தி அடிவாங்கிட்டு ஓடி போயிறானுக, ஹீரோ அங்கன இருந்து வந்து பந்தயத்திலே ஓடி பிரைஸ் வாங்கிறாரு.... (கண்ணுல H2O எல்லாம் வத்தி போயி பிளட் வருதுங்க).அப்புறமென்னா முன்னால் முன்னால் வாடா, உன்னால் முடியும் தோழா'ன்னு பாட்டு பாடி தொலைக்கிறாரு, ஆனா இவ்வளவு மொக்கையா ரஹ்மான் பாட்டை கெரியக்கிராபி பண்ணி எந்த டைரக்டரும் ஒப்பேத்துனது இல்லை.

அப்புறமென்ன வெளக்கெண்ண கதாநாயகர் வந்துட்டாருலே, பின்னாடியே அரைலூசு கதாநாயகி களத்திலே குதிச்சு தொலைக்கனுமில்ல. அம்மணி அழகா என்னத்தயாவது காட்டிக்கிட்டே கோவிலுக்குள்ளே இண்ட்ரோ ஆகுறாங்க, அங்கன இருந்த கதாநாயகர் பார்க்கிறாரு, பார்த்த நிமிசத்திலே பத்திக்கிருச்சாம், ஓவரா ஃபீலிங்க் பண்ணுறாரு, பிறகு என்னமோ காமெடி'னு பண்ணிட்டு இருந்தானுக, அதெல்லாம் பார்த்துட்டு முடியலைங்க முடியல... இதுக்கு முன்னாடி பிட்டுக்காக சொந்தமண்ணிலே பொழக்க முடியாமே தடைவாங்கினவங்க வேற வந்து திருவண்ணாமலை ஜோதி, பரங்கிமலை ஜோதி'ன்னு சந்தானத்தை டயலாக் பேச வைக்கிறாங்க, ஆனா நல்லாதாய்யா கேமராசாட்'ஐ வைச்சி தொலையிறீங்க, எழவு நம்ம டாக்டரு வேற அதெ தன்னோட கையாலே ஜாடை வேற செஞ்சு காட்டி தொலைக்கிறாரு....... (இன்னும் அவங்க அப்பா படத்திலே அத்தைக்கு சோப் போட்டு விட்டத மறந்து தொலைக்கலை போலே). இதிலே எல்லாத்தையும் விட பெரிய கொடுமை என்னான்னா இவரு சொல்லுற கவிதை,கவிஜ,கவுஜை'ன்னு ஏதோ ஒன்னை சொல்லி பச்சப்புள்ள பிரைசு வாங்கிட்டு வருது, அந்த புள்ளய வைச்சாவது உருப்படியா கதை கொண்டு போவனுக'னு பார்த்தா ஹீரோ'க்கு ஏதோ வெளக்கெண்ண சக்தி இருக்குன்னும், எதிர்காலத்திலே நடக்கிறத அவரு இப்பவே கணிக்க முடியுமின்னு என்ன எழவயோ கூட்டி அந்த பிள்ளைய கொன்னுருனாக..... :( உண்மையிலே என்ன வெறுப்போட உச்சக்கட்டத்துக்கு கொண்டு போன சீன் அது.(போங்கடா நீங்களும் ஒங்க ஹீரோ'சியமும்) .

அந்த வெறுப்பிலே படம் பார்த்து தொலைச்சா, இவரு அடுத்து இன்னோரு ஓட்டப்பந்தய போட்டியிலே மொக்க காரணத்துக்காக விட்டு கொடுத்து அம்மணி மனசிலே இடம் பிடிக்கிறாரு, அய்யா நல்லவனுகளா அது எப்பிடிடா ஒங்க தியாகத்தை அடுத்தவங்கிட்டே சொல்லுறப்போ கரக்டா பின்னாடி ஹீரோயின் நின்னு தொலையிறாளுக. அப்பிடியே கட் பண்ணி பாட்டு வேற பாடி தொலையுதுக. இனி என்னாலே முடியலைடா'ன்னு நம்ம சோட்டு பய ஓடி போயிட்டான், நான் மட்டும்தாங்க கடைசி வரைக்கும் பார்த்து தொலைச்சேன், தீடீரென்னு டாக்டரு அப்பா இவரே தேடி ஊருக்குள்ளே வர்றாரு, அப்பயே தெரிஞ்சு போச்சு, இன்னொரு எழவே கூட்டி தொலைய போறானுகன்னு, சரியாதான் இருந்துச்சு. ஊர் உலகத்திலே என்னனோமோ கஷ்டமும் வந்து தொலைக்கிது, நமக்கு ஒத்த ஆளு தனியா போயி அம்பது பேரை காப்பாத்திறதை பார்த்து தொலையனுமின்னு கஷ்டம் போலே... :( எப்போடா இன்னோரு டாக்டரை காட்டப்போறீங்கன்னு பார்த்துட்டு இருந்தா வர்றாய்யா அழகுசிங்கம், வாயிலே சிகரெட்'ஐ வைச்சிட்டு நாலு பேத்தை அடிக்கிறாரு, மவனே இதுக்கு பேருதான் ஸ்டைலிஸ் இண்ட்ரோ'வா.... :(

இவரு வந்ததுக்கபுறந்தாங்க கதை சூடு பிடிக்குது, பின்னே நமீதா வர்றாங்களே, சூடு பறக்காதா என்ன? அவ அப்பன் சூரத்திலே துணி வியாபாரம் பண்ணுறானாம், அங்கன மிச்சம் கெடந்த துணியை தைச்சு போட்டு ஆடுது ஆட்டம். பாட்டு முடிஞ்சதும் என்னோமோ நடந்துச்சாம், நல்லவேளை எனக்கு போன் வந்துருச்சு, அதை நான் கவனிக்கலை. தீடீரென்னு பார்த்தா ரெண்டாவது டாக்டரு சென்னைக்கு வந்துறாரு, வந்த இடத்திலே ஸ்ரேயா பார்த்து அவங்க வீட்டுக்கு போறாரு. அங்க போனதும் அவங்க காசுபணத்தை பார்த்தும் ஆள்மாறாட்டம் பண்ணனுமின்னு முடிவு பண்ணிறாரு. இனிமே இந்த வெண்ண படத்த பார்க்கவே கூடாதுன்னு நானெல்லாம் அப்பயே முடிவு பண்ணிட்டேன்.

இவ்வளவு தூரம் டைப் பண்ணினதுக்கே எனக்கே நெஞ்சு வலிக்குதுங்க, அந்த மொக்கை படத்துக்கு இம்புட்டு பெரிய போஸ்டா'ன்னு, அத விட சில பேருக்கு ஹார்ட் -அட்டாக்'ஐ வரும்...

அதன் காரணிகள்:-

1) டாக்டர் விஜய் #1 படத்தில் கல்லூரி மாணவர்

2) டாக்டர் விஜய் #1 பேசுற பஞ்ச் டயலாக் (எவ்வளவோ பண்ணிட்டோம்.. இதைப்பண்ண முடியாதா?)

3) டாக்டர் விஜய் #1 கிளைமேக்ஸில் செய்யும் தியாகம்..... (அர்ஜீனா அவார்ட் இல்லன்னா ஆஸ்காரு நிச்சயம்)

4) டாக்டர் விஜய் #1'க்கும் டாக்டர் விஜய் 2'க்கும் உள்ள வித்தியாசம்!!!???!!!???

5) டாக்டர் விஜய் அவர்களை இளையதளபதி அடைமொழியிலிருந்து இதயதளபதி'ஆக இந்த நல்லுலகம் அறியப்பட போவது!!!