Friday, August 4, 2006

கவிதையாய் கைப்புள்ளை காவியம் (101 வரிகளில்)

திக்கற்ற கட்டிட காடுதனிலமர்ந்து
கணினியென்னும் அடிமையை
ஏவல் செய்யும்
விழிகருக்கும் பணியில்
புத்துணர்வு திரும்பவேண்டி
வலைபூக்கள் சொரிந்த
சாலைகளில் பயணிக்கும்
பயணிகள் அனைவருக்கும்
தாய்மொழி தங்கதமிழில்
சிரிப்பு தரவேண்டி சங்கமென்றை
கண்டளித்தாய் எமக்கு
செந்தமிழில் பெயரிட்டாய்
வருத்தப்படாத வாலிபர் சங்கமென..

கைப்புள்ளயெனும் தானே
தலைவர் எனறிவித்து
அடிவாங்கும் உன் திறமைதனை
பலவகைகளை கண்டறித்தாய்
உன் திறமையின் விளைவுகளின்
விளைவாக விளைந்த
விழுபுண்களில் சாய்ந்து
விழுந்திராத விழாநாயகனான
உன்னைப்போற்றி கவிஎழுத
மின்மடலில் வினவினேன்...!

பதிலுற்றாய் விதிமுறையோடு
அதை வாசித்தால் நகைச்சுவை
மிளிரவேண்டுமெனவும்
வாசிக்கும் நெஞ்சங்கள்
சிறிதளவேணிணும்
புண்பட்டிட கூடாதென
இவ்வாறே உன்னுள்
வியாபித்திற்கும் தலைவனுக்கே
உரித்தாகும் சீரியபண்பு...?

அந்தூர் எந்தூர்
இந்தூரில் வசித்தாலும்
மாசுமருவற்ற தங்கதலைவனான
உன் திருமுகம் மனகண்ணில்
நிறுத்திட வரம்வேண்டி
நிழற்படம் வெளியிடகோரலாம்
தினமும் தரிசிக்கும்
பாக்கியம் பெற்றவர்
கழிக்கவேண்டும் திருஷ்டி
ஆகவே வேண்டாம்..

உன்னை வாழ்த்திட
பத்துவரியை மனதிலுறுத்தி
எழுத தொடங்கினேன்
அனுமார் வாலென
நீட்டித்தது உந்தன்புகழ்
எப்படியும் நிறைவுறும்
நூறாவது வரிகளின் இறுதியில்...!
சங்கத்தின் நூறாவதுநாள்
உந்தன் புகழ்பாடும்
பதிவுகளின் கணக்கு நூறு
அன்னியமொழி சேரும்
அச்சமேனே எனகருதி
தமிழில் உரைக்கிறேன்
இதொரு உடன்நிகழ்வுசெயல்

வாழ்த்தி உரைத்து
முடிக்கிறேன் இவ்வரியை
தொடங்கலாம் கலாய்க்கும்திணைதனை...

உதார்விடும் உன்னழகில்
கவரப்பட்ட இரும்பாய்
கழக கண்மணிகளின்
ஆதரவுகரங்கள் எண்ணிக்கை
கடல்தாண்டியும் செல்லுமெனில்

இளமாய் மிதமாய்
அடிகள் இடியென
விவாயத்திலும் விழுமோ
வெடிகுண்டுகள் அழிக்கும்
சிவம்தனிலும் பிரதிபலிக்குமோ
தேவகானங்கள் இயற்றும்
அரசவை கவிஞனுக்கும்
விழுமோ உன்மாதிரி...?

மண்ணின் மைந்தன்
பாண்டிய அன்புசெல்வன்
வில்லாய் வடிக்கும்
வீரதிருமகன் வாங்கும்
அடிகள் உன்னளவில்
சற்று குறையே...!
நீர் பெற்றதை பகிர்ந்தளிக்கும்
மனபாங்கு சிபிமன்னனிடம்
கிடையாதென்பது திண்ணம்....!

மக்கள்படை மாத்திரமே
சார்ந்ததல்ல உந்தன்பாசறை
களிறுபடையும் கப்பற்படையும் சேர்ந்தே
பொன்னெ மிளிர்கின்றன....!

திங்களொரு ஒன்றுமறியாமானுடர்
உன்னவை வரப்பெற்று
பரிசில்கள் பலபெறுவார்யென....!
உள்ளவாகை மிகுதியில் வந்து
அம்மானுடர் பெற்றுசெல்வது
ஆப்பசைத்த மாருதியின்
இலவச ராசனுபவங்கள்...!

சிரிப்பன்பதை மட்டுமே கொள்கைகொண்ட
இவ்வரசவை வாழுமெனில்
கவிதனை முடிவுற விளைகிறேன்
மனதில் தொங்கும்வினாவுடன்

சச்சரவுகளில் பயணிக்கும்
பயணிகள் அனைவருக்கும்
சுயவெறுப்புகளை கடந்து
ராஜபாட்டையில் வரவியலுமாயென...........?????

கைப்புள்ள கிளம்பு உன்வேட்டைக்கு
காத்திருக்கிறோம் நாங்கள்
நீ வாங்கிவரும் குச்சிமிட்டாயிக்கும்,குருவிபொறைக்கும்.... :-)

77 comments:

said...

ஐயயோ ராம்!
என்னப்பா இது? கலாய்க்கிறேன்னு சொல்லிட்டு இப்பிடி போட்டு கழுவி கமுத்திட்டியே? இனிமே நா எப்பிடி இந்த ஊருக்குள்ள தலை நிமிந்து நடப்பேன்?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

ராமு, வாடா என் செல்லம்
என்னம்மா கலக்கி இருக்க.
ஆனாலும் கொஞ்சம் உள்குத்தோட கலக்கி இருக்க
நல்லா இருக்கு ராம்
நல்லா இருக்கு.

said...

ராம்,நம்ம 'தல' கப்பு நூறடிச்சதுக்கு
(http://kaipullai.blogspot.com/2006/08/blog-post_03.html)கவிதையில
வாழ்த்திய தங்கமே! சங்கம் உள்ளவரை உன் மங்காப்பகழ் வாழ்க !!! :-))))

said...

ஒரு வரியில் சொல்லனும் என்றால் "பின்னி பெடல் எடுத்து இருக்க"

said...

நூறாவது நாளில் வாழ்த்திய ராம் அவர்களுக்கு நன்றி!

தலை கண்ணைத் துடைச்சுக்கோ!

said...

//என்னப்பா இது? கலாய்க்கிறேன்னு சொல்லிட்டு இப்பிடி போட்டு கழுவி கமுத்திட்டியே?//
இதே டவுட் தான் எனக்கும்
ஏதாவது தனியா பணம் கொடுத்தியா என்ன?

said...

//இதே டவுட் தான் எனக்கும்
ஏதாவது தனியா பணம் கொடுத்தியா என்ன?//

எனக்கென்னவோ இதெல்லாம் ஒன் வேலைன்னு தான் தோணுது புலி.

said...

ராமு கண்ணா..
எப்படிப்பா..எப்படி இதெல்லாம்??

கைப்பு..உன் கண்ணுல இனி நான் ஆனந்த கண்ணீரை தான் பார்க்கனும்...

said...

அடேங்கப்பா கலக்கிட்ட ராம்! :))

//ஐயயோ ராம்!
என்னப்பா இது? கலாய்க்கிறேன்னு சொல்லிட்டு இப்பிடி போட்டு கழுவி கமுத்திட்டியே? இனிமே நா எப்பிடி இந்த ஊருக்குள்ள தலை நிமிந்து நடப்பேன்?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் //

ஹிம் இதெல்லாம் நமக்கு புதுசா என்ன?

said...

கவிஜ இன்னும் இருக்கு கண்ணுங்களா... மீதியும் முடிச்சிட்டு இந்தா வந்துறேன்..
:-)

said...

//எனக்கென்னவோ இதெல்லாம் ஒன் வேலைன்னு தான் தோணுது புலி. //
சீ... ஒரு டீக்கு சிங்கி அடிச்சுகிட்டு இருக்கேன். இதுல காசு கொடுத்து உன் புகழ்ந்து வேற பாட சொல்லுறேன். அட போப்பா. அப்படி கொடுத்தாலும் நான் என்ன பத்தி தான் பாட சொல்லுவேன். உன்ன பத்தி ஏன் சொல்ல போறேன். :)

said...

//முடிச்சிட்டு இந்தா வந்துறேன்..//
நீயும் இந்தா வருவ, அந்தா வருவனு, நானும் பாத்துகிட்டே இருக்கேன். ஆனா நீ வர மாதிரி தெரியல. எங்க நைனா தூங்க போயிட்டியா?

said...

//நீயும் இந்தா வருவ, அந்தா வருவனு, நானும் பாத்துகிட்டே இருக்கேன். ஆனா நீ வர மாதிரி தெரியல. எங்க நைனா தூங்க போயிட்டியா?
//

அதே தாம்பா நானும் யோசிச்சிக்கினு கீரேன்...

said...

ம் சரி இன்னும் கிளப்புங்க பட்டையை.....

said...

//நீர் பெற்றதை பகிர்ந்தளிக்கும்
மனபாங்கு சிபிமன்னனிடம்
கிடையாதென்பது திண்ணம்....!
//

:)

பட்டையக் கிளப்புங்க ராம்!

said...

லேட்டா வந்தாலும் லேட்டாஸ்டா தான் வந்து இருக்க
நல்லா இருக்கு மதுர தங்கம்

said...

//பட்டையக் கிளப்புங்க ராம்! //
தளபதியாரே, எனக்கு என்னமோ பட்டை அடிச்சதால் அண்ணாத்த பட்டைய கிளப்புற மாதிரி தோணுது.
உண்மையா ராம்

said...

கண்ணுங்களா நூத்துக்கு நூத்திஒன்னா எழுதியாச்சு.... வேற என்னா என்னா கொடுக்கணுமா. இப்பவே சீக்கிரம் கொடுத்திருங்க.... :-)))

said...

//கண்ணுங்களா நூத்துக்கு நூத்திஒன்னா எழுதியாச்சு//

மேல எதுனா போட்டுக் குடுங்க!

ஹி.ஹி..

said...

//ஐயயோ ராம்!
என்னப்பா இது? கலாய்க்கிறேன்னு சொல்லிட்டு இப்பிடி போட்டு கழுவி கமுத்திட்டியே? //

இதுக்கு பேருதான் கலாயக்கிறது தல...

//இனிமே நா எப்பிடி இந்த ஊருக்குள்ள தலை நிமிந்து நடப்பேன்?//

இதல்லாம் நமக்கு புதுசா என்னா... அடிவாங்கினாலும் தொடச்சு விட்டு பிட்டு போயிக்கிட்டே இருக்கனும்...

said...

//ராமு, வாடா என் செல்லம்
என்னம்மா கலக்கி இருக்க.
ஆனாலும் கொஞ்சம் உள்குத்தோட கலக்கி இருக்க//

வா புலிமாமு... வந்தவுடனே ஆரம்பிச்சிட்டியா உன்னோட வேலையே...

//நல்லா இருக்கு ராம் நல்லா இருக்கு.//

எதுக்கு ரெண்டு தடவை சொல்லுற... உள்குத்து வேற ஏதாவது இருக்கா....?

said...

//கவிதையில
வாழ்த்திய தங்கமே! சங்கம் உள்ளவரை உன் மங்காப்பகழ் வாழ்க !!! :-))))//

வாங்க புதுமாப்பிளை ராஜா...
தல பற்றி கவிஜபாடும் எண்ணற்ற கவிஜர்களில் நானும் ஒருவன்... :-))))

said...

//ஒரு வரியில் சொல்லனும் என்றால் "பின்னி பெடல் எடுத்து இருக்க"//

தலைக்கு சைக்கிள் ஓட்ட தெரியாதுகிறானால குத்திகாட்டுறேயா....

said...

//தலைக்கு சைக்கிள் ஓட்ட தெரியாதுகிறானால குத்திகாட்டுறேயா.... //
கக்கக்கபோ ராம்.......

said...

//கண்ணுங்களா நூத்துக்கு நூத்திஒன்னா எழுதியாச்சு.... வேற என்னா என்னா கொடுக்கணுமா. இப்பவே சீக்கிரம் கொடுத்திருங்க.... :-))) //

சங்கத்தின் 101 ஒன்றாம் நாளான இன்று 101 வரிகளில் ஒரு காவியம் படைத்து உள்ளாய். மிக்க மகிழ்ச்சி.
இது போல கூடிய விரைவில் 1001, 10001, 100001 என்று தொடர வேண்டும்
என்ன சரியா

said...

//வாங்க புதுமாப்பிளை ராஜா...
தல பற்றி கவிஜபாடும் எண்ணற்ற கவிஜர்களில் நானும் ஒருவன்... :-))))//
பொற்கிழி எல்லாம் சரியா வருதா, இல்ல அதிலயும் ஏமாத்துறாரா?

said...

//சீ... ஒரு டீக்கு சிங்கி அடிச்சுகிட்டு இருக்கேன்.//

எதுக்கு சிங்கி அடிக்கணும்... கப்ளாகட்டை இருக்குல....!

//இதுல காசு கொடுத்து உன் புகழ்ந்து வேற பாட சொல்லுறேன். அட போப்பா. அப்படி கொடுத்தாலும் நான் என்ன பத்தி தான் பாட சொல்லுவேன். உன்ன பத்தி ஏன் சொல்ல போறேன். :)//

உன்ன பத்தியும் அடுத்ததா எழுதிறேன்.ஆனா மத்தல்லாம் கரிக்கிட்டா வந்திடாணும் என்னா.

said...

வணக்கம்ண்ணா......:)

said...

//மேல எதுனா போட்டுக் குடுங்க!

ஹி.ஹி.. //


வாங்க சிபி இனிமே எதும் போடமுடியாதுன்னு நினைக்கிறேன். ஏன்னா தலயோட வீரதீர?? நினைச்சு நினைச்சு நினைச்சு கவிஜ எழுதி கொஞ்ச நஞ்சமும் மேல்மாடில காலியா கெடக்கு இப்போ.... :)

நீங்க வேற சங்கத்திலே ஆராய்ச்சிகட்டுரையெல்லாம் போட்டுருகிங்க... இன்னிக்கு வெள்ளிகிழமை வேற... :-))))))

said...

//சங்கத்தின் 101 ஒன்றாம் நாளான இன்று 101 வரிகளில் ஒரு காவியம் படைத்து உள்ளாய். மிக்க மகிழ்ச்சி.
இது போல கூடிய விரைவில் 1001, 10001, 100001 என்று தொடர வேண்டும்
என்ன சரியா //

ஓகே புலி

said...

//பொற்கிழி எல்லாம் சரியா வருதா, இல்ல அதிலயும் ஏமாத்துறாரா? //

இன்னை வரைக்கும் ஒன்னும் வரலை.... :-)))

said...

//வணக்கம்ண்ணா......:) //

வாங்க தேவ்... உங்களை அரசவை கவின்னு சொன்னா இப்படியா லேட்டா வர்றது....?

said...

//அதே தாம்பா நானும் யோசிச்சிக்கினு கீரேன்... //

நானு எப்பவே வந்துட்டேன்.....
கப்பி உனக்கு அப்புறம் நம்ம வலைபூ நண்பர்கள் அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

said...

/நானு எப்பவே வந்துட்டேன்.....
//

ராம்..இன்னிக்கு நான் தான் லேட்டு :))..

//கப்பி உனக்கு //
வாழ்த்துக்கள் ராம்..

நானும் //அப்புறம் நம்ம வலைபூ நண்பர்கள் அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்... //

said...

போட்டு தாக்குங்க...இத படிச்சிட்டு இனிமே தல தலயெடுக்க முடியும்...நம்ம பங்கு புலி குட்டி சொன்னது தான்...கக்கக்க போ...:-)

said...

ராம் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

said...

//போட்டு தாக்குங்க...இத படிச்சிட்டு இனிமே தல தலயெடுக்க முடியும்...நம்ம பங்கு புலி குட்டி சொன்னது தான்...கக்கக்க போ...:-) //

வாங்க ஸ்யாம்,

உங்கள் வரவு நல்வரவாகுக.... :-)

said...

//ராம் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் //

நன்றி சிவா...

said...

//
கைப்புள்ள கிளம்பு உன்வேட்டைக்கு
காத்திருக்கிறோம்
//

பொருள் எல்லாம் ரெடியா இருக்கு தல சிக்கிரம் கிளம்பு.

said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

said...

//பொருள் எல்லாம் ரெடியா இருக்கு தல சிக்கிரம் கிளம்பு. //

வாம்மா மின்னலு... என்னா பொருளு...? எதானச்சும் பெசல வச்சிருக்கியா என்னா..?

said...

//கக்கக்க போ//

எங்க பாத்தாலும் இத ஒன்னு சொல்றாங்க. இதுக்கு என்னப்பா அர்த்தம்? எந்த படத்துல வருது?

said...

//எங்க பாத்தாலும் இத ஒன்னு சொல்றாங்க. இதுக்கு என்னப்பா அர்த்தம்? எந்த படத்துல வருது? //

யப்பா ராசாக்களா ஓடி வாங்க சீக்கிரம்...? தலைக்கு என்னாமோ சந்தேகமாம்....! வந்து சொல்லிட்டு போங்க அது கரடி + வில் + அம்பு....... :-)))

said...

////கக்கக்க போ//

எங்க பாத்தாலும் இத ஒன்னு சொல்றாங்க. இதுக்கு என்னப்பா அர்த்தம்? எந்த படத்துல வருது? //
இது உனக்கு தெரியாது, அத நாங்க நம்புனும். ஏன் இந்த பொழப்புனு கேட்குறேன்.
இது எந்த படத்துல வந்துச்சுனு எனக்கு தெரியாது, ஆனா இந்த வார்த்தை ப்ளாக் உலகில் வந்தது சங்கத்தின் மூலம் தான்.

said...

//வாம்மா மின்னலு... என்னா பொருளு...? எதானச்சும் பெசல வச்சிருக்கியா என்னா..? //
இந்த மேட்டரு தெரியாதா உனக்கு. என்ன நீ இன்னும் சின்ன புள்ளயாவே இருக்க.

பொருள் கேள்விப்பட்டது இல்லனு சொல்லுற

said...

//வாங்க ஸ்யாம்,

உங்கள் வரவு நல்வரவாகுக.... :-) //
வா பங்காளி, ராமும் நம்ம ஆளு தான். அடிக்கடி வந்து கண்டுகினு போ.
பாசக்கார மதுர பய.

said...

//இது உனக்கு தெரியாது, அத நாங்க நம்புனும். ஏன் இந்த பொழப்புனு கேட்குறேன்.//

கேளூ புலி நல்லா.... செய்யுறதயும் செச்சுபுட்டு பச்சபிள்ளையாட்டம் கேள்வியா பாரு....

//இது எந்த படத்துல வந்துச்சுனு எனக்கு தெரியாது, ஆனா இந்த வார்த்தை ப்ளாக் உலகில் வந்தது சங்கத்தின் மூலம் தான்//

இது ஊரு உலகத்துக்கே தெரியுமில்லே... நீ என்னா புலி தீடீர்ன்னு ஜகா வாங்குறே..

said...

//இந்த மேட்டரு தெரியாதா உனக்கு. என்ன நீ இன்னும் சின்ன புள்ளயாவே இருக்க. //

இரூ எங்க டீச்சர்ட்டே சொல்லிதாரேன்.... :-)))

//பொருள் கேள்விப்பட்டது இல்லனு சொல்லுற //

என்னாப்பே அது ஒன்னும் புரியமாட்டேன்கிது.....!

மதுரகாரங்கே பொருளா....????

said...

//வா பங்காளி, ராமும் நம்ம ஆளு தான். அடிக்கடி வந்து கண்டுகினு போ.
பாசக்கார மதுர பய. //


தாங்சுப்பா புலி... இருந்தாலும் குடுத்த காசுக்கு நல்லாவே கூவுறே....

said...

ராம் said...
//பொருள் எல்லாம் ரெடியா இருக்கு தல சிக்கிரம் கிளம்பு. //

வாம்மா மின்னலு... என்னா பொருளு...? எதானச்சும் பெசல வச்சிருக்கியா என்னா..?
/./.

இங்க இருக்கு பெசலு

http://kaipullai.blogspot.com/2006/07/blog-post_22.html

( தல சும்மா ஒரு விளம்பரம் கண்டுக்காத..))

said...

//இது உனக்கு தெரியாது, அத நாங்க நம்புனும். ஏன் இந்த பொழப்புனு கேட்குறேன்.//

அட சத்தியமா தெரியாதுங்கப்பா! நம்புங்க. புலிகேசி படத்து டயலாக்கா?

said...

//இங்க இருக்கு பெசலு//

மின்னலு நல்லா புரியுதிப்பே....

said...

//அட சத்தியமா தெரியாதுங்கப்பா! நம்புங்க. புலிகேசி படத்து டயலாக்கா? //

தல இதெல்லாம் ஒரு பொழப்பா....

said...

//தாங்சுப்பா புலி... இருந்தாலும் குடுத்த காசுக்கு நல்லாவே கூவுறே..//
ராம், நாங்க எப்பவுமே அப்படி தான். கொடுத்த காசுக்கு தகுந்த மாதிரி தான் கூவுவோம். எக்ஸ்டராவாக எல்லாம் கூவ மாட்டோம்.
அப்புறம், பைசா இன்னும் நம்ம அக்கவுண்ட்ல கிரேடிட் ஆவல. என்னனு பாரு.....

said...

//ராம், நாங்க எப்பவுமே அப்படி தான். கொடுத்த காசுக்கு தகுந்த மாதிரி தான் கூவுவோம். எக்ஸ்டராவாக எல்லாம் கூவ மாட்டோம்.//

என்னா ஒரு உயர்ந்த உள்ளம். கொசுருல்லாம் குடுக்க மாட்டியா....?

//அப்புறம், பைசா இன்னும் நம்ம அக்கவுண்ட்ல கிரேடிட் ஆவல. என்னனு பாரு..... //

உன்னோட சுவிஸ் அக்கவுண்ட்'ஆ செக் பண்ணி பாருப்பா.... :-))))

said...

//என்னா ஒரு உயர்ந்த உள்ளம். கொசுருல்லாம் குடுக்க மாட்டியா...//
ஹும் மாட்டேன்.
வியாபாரம் வேறு நட்பு வேற. இரண்டும் கலப்பது இரண்டுக்குமே நல்லது இல்ல. (ஆஹா கருத்துட்டோய்)

//உன்னோட சுவிஸ் அக்கவுண்ட்'ஆ செக் பண்ணி பாருப்பா.... :-))))//
சுவிஸ்ல அக்கவுண்ட் இருந்தா நான் ஏன் உனக்காக எல்லாம் கூவிக்கிட்டு இருக்கேன். ஏமாத்தாம பணத்து அனுப்பு செல்லம்.

said...

//ஹும் மாட்டேன்.
வியாபாரம் வேறு நட்பு வேற. இரண்டும் கலப்பது இரண்டுக்குமே நல்லது இல்ல. (ஆஹா கருத்துட்டோய்)
//


வாப்பா கருத்து கண்ணாயிரம். உன்னோட கருத்தை கேட்டு நான் எதோயோ தேடுறேன், அது என்னான்னா.... ?

said...

//சுவிஸ்ல அக்கவுண்ட் இருந்தா நான் ஏன் உனக்காக எல்லாம் கூவிக்கிட்டு இருக்கேன். ஏமாத்தாம பணத்து அனுப்பு செல்லம். //

உன்கிட்டே சுவிஸ் அக்கவுண்ட் இல்லயா.. அப்ப நான் யாருக்கு பணம் போட்டேன்.....?

போச்சா போச்சா... சரி போ சங்கத்து அக்கவுண்ட்'ல போடறேன், அங்கனே எடுத்துக்கோ...!

said...

//போச்சா போச்சா... சரி போ சங்கத்து அக்கவுண்ட்'ல போடறேன், அங்கனே எடுத்துக்கோ...! //
நைனா இந்த மாதிரி எத்தன படத்த நாங்க பாத்து இருப்போம். போட்டு இருப்போம். எங்க கிட்டவேவா....
சங்கத்து அக்கவுண்டையும் செக் பண்ணியாச்சு.
பணம் மட்டும் வந்து சேரலனு வையி. அப்புறம் இருக்குடி உனக்கு வெட்டு.

said...

//நைனா இந்த மாதிரி எத்தன படத்த நாங்க பாத்து இருப்போம். போட்டு இருப்போம். எங்க கிட்டவேவா....//

எத்தனை படம் போட்டே புலி... ?எண்ணிசொல்லு சீக்கிரம்...?

//சங்கத்து அக்கவுண்டையும் செக் பண்ணியாச்சு.
பணம் மட்டும் வந்து சேரலனு வையி. அப்புறம் இருக்குடி உனக்கு வெட்டு. //

உனக்கு முன்னாடியே யாரோ எடுத்தாடங்க போல... எதுக்கும் தல'கிட்டே கேளு.... :-)

said...

wow lovely,
Nice job you are did,I Like below lines. Keep it up...!

//
திக்கற்ற கட்டிட காடுதனிலமர்ந்து
கணினியென்னும் அடிமையை
ஏவல் செய்யும்
விழிகருக்கும் பணியில்
புத்துணர்வு திரும்பவேண்டி
வலைபூக்கள் சொரிந்த
சாலைகளில் பயணிக்கும்
பயணிகள் அனைவருக்கும்
தாய்மொழி தங்கதமிழில்
சிரிப்பு தரவேண்டி சங்கமென்றை
கண்டளித்தாய் எமக்கு
செந்தமிழில் பெயரிட்டாய்
வருத்தப்படாத வாலிபர் சங்கமென..//

said...

//wow lovely,
Nice job you are did,I Like below lines. Keep it up...!//

வாங்க அனானி,

எங்க தலைக்காக இதைகூட செய்யாட்டி எப்பிடி...

said...

//எத்தனை படம் போட்டே புலி... ?எண்ணிசொல்லு சீக்கிரம்...?//
யப்பா ராமு, நான் எல்லாம் பொது வாழ்க்கைக்கு வந்து பல வருடங்கள் ஆச்சு. போ போ போயி தண்ணிய குடி

said...

ராமு!
பல இடத்துல பல பெயருக்கிட்ட ஏற்கனவே சொன்னது தான். உனக்காக மறுபடியும் சொல்லுறேன் கேட்டுக்கோ.
ஏமாத்தலாம் தப்பு இல்ல. ஏமாத்தவும் முயற்சி பண்ணலாம் அதுவும் தப்பு இல்ல. ஆனா யார ஏமாத்த முயற்சி பண்ணுற என்பது தான் இங்கன மேட்டரு. நல்லா யோசி. யோசி முடிச்சதுக்கு அப்புறமும் மறுக்கா யோசி. அப்புறம் சொல்லு பணத்த அனுப்பிட்டியா இல்லையானு.
உன் பதிலுக்காக நான் வெயிட் பண்ணுறேன்.
ஹே.... யாருகிட்டா
முடியுமானேன்
நடக்குமானேன்.
நாங்க எல்லாம்.....

said...

//யப்பா ராமு, நான் எல்லாம் பொது வாழ்க்கைக்கு வந்து பல வருடங்கள் ஆச்சு. போ போ போயி தண்ணிய குடி //

இன்னிக்கு புதன்கிழமைப்பா... நாளை கழிச்சுதான் அதல்லாம்... :-)

said...

//ராமு!
பல இடத்துல பல பெயருக்கிட்ட ஏற்கனவே சொன்னது தான். உனக்காக மறுபடியும் சொல்லுறேன் கேட்டுக்கோ.
ஏமாத்தலாம் தப்பு இல்ல.//


என்னா சொல்ல வர நீ...

// ஏமாத்தவும் முயற்சி பண்ணலாம் அதுவும் தப்பு இல்ல. ஆனா யார ஏமாத்த முயற்சி பண்ணுற என்பது தான் இங்கன மேட்டரு.//


இப்ப சொன்னீயே கரக்ட். நான் யாரையும் ஏமாத்தலே...

//நல்லா யோசி. யோசி முடிச்சதுக்கு அப்புறமும் மறுக்கா யோசி. அப்புறம் சொல்லு பணத்த அனுப்பிட்டியா இல்லையானு.//

சத்தியமா அனுப்பிட்டேன் , உன்னோட சுவிஸ் அக்கவுண்ட்'ல வரலேன்னு சொன்னே சரி போனா போகுதுன்னு சங்கத்து அக்கவுண்ட்'ல போட்டேன்.

ஆகா இப்பதான் மைல்டா டவுட் வருது சங்கத்தோட செயற்குழுக்கான செலவு என்னோட.. ஓ சாரீ புலி உன்னோட காசு போலே...

போ உனக்கில்லைன்னு போச்சு போ...

said...

//உன் பதிலுக்காக நான் வெயிட் பண்ணுறேன்.
ஹே.... யாருகிட்டா
முடியுமானேன்
நடக்குமானேன்.
நாங்க எல்லாம்..... //

இந்த மாதிரி உதார் விட்டு அடி வாங்கிறதிலே நீயும் ஒருத்தன்தானே...

ஓ சாரி என்னையே விட்டுட்டேன்...:-(


அதுக்காக உறுமிறாதே புலி....:-)

said...

ராம்,பங்காளி சரி சரி உங்க சண்டைல எனக்கு வர வேண்டிய பனத்த அனுப்ப மறந்துடாதீங்கப்பு... :-)

said...

என்னாது இது கக்கக்க போ னா என்னானு தல கேக்கறாரு...கட்டதொர கட்டி வெச்சு அடிக்கறது தப்பே இல்ல :-)

said...

//ராம்,பங்காளி சரி சரி உங்க சண்டைல எனக்கு வர வேண்டிய பனத்த அனுப்ப மறந்துடாதீங்கப்பு... :-) //

ஏ புலி இங்க பாரு புது கதையே....

said...

//என்னாது இது கக்கக்க போ னா என்னானு தல கேக்கறாரு...கட்டதொர கட்டி வெச்சு அடிக்கறது தப்பே இல்ல :-) //

கக்கக்க போ ஸ்யாம்,
:-)))))

said...

//ராம்,பங்காளி சரி சரி உங்க சண்டைல எனக்கு வர வேண்டிய பனத்த அனுப்ப மறந்துடாதீங்கப்பு..
ஏ புலி இங்க பாரு புது கதையே.... //
ராம் நீ ஒன்னும் கண்டுக்காத, அத நான் டீல் பண்ணிக்குறேன். பங்கு அத நம்ம தனியா பேசிப்போம். சின்ன பசங்க முன்னாடி அந்த பெரிய டீலிங்க எல்லாம் பேசுனா நல்லா இருக்காது. என்ன நான் சொல்லுறது

said...

ராம். நம்ம டீலிங்க நீ நம்ம வழிக்கு வரல. அதனால உன்ன எப்படி எங்கன டீல் பண்ணமுமோ உன்ன நாம் அங்கன பாத்துக்குறேன்.

said...

//ராம் நீ ஒன்னும் கண்டுக்காத, அத நான் டீல் பண்ணிக்குறேன். பங்கு அத நம்ம தனியா பேசிப்போம். சின்ன பசங்க முன்னாடி அந்த பெரிய டீலிங்க எல்லாம் பேசுனா நல்லா இருக்காது. என்ன நான் சொல்லுறது //

நீ சொன்னா சரி... பணம் வந்துச்சான்னு செக் பண்ணிப்பாருப்பே...

said...

//ராம். நம்ம டீலிங்க நீ நம்ம வழிக்கு வரல. அதனால உன்ன எப்படி எங்கன டீல் பண்ணமுமோ உன்ன நாம் அங்கன பாத்துக்குறேன். //

நீ என்னா அநியாத்துக்கு மிரட்டுறே... இரு தலைக்கிட்டே சொல்லி உன்மேல ஒழுங்கு நடவடிக்கை எடுக்கச்சொல்லுறேன்...:-)

said...

//இரு தலைக்கிட்டே சொல்லி உன்மேல ஒழுங்கு நடவடிக்கை எடுக்கச்சொல்லுறேன்//

தலைக்கும் ஒழுங்குக்கும் என்ன சம்பந்தம் :-)

said...

//தலைக்கும் ஒழுங்குக்கும் என்ன சம்பந்தம் :-) //

தலைக்கு வந்த சோதனையா..... தல நீ எங்க இருக்கே....????