Friday, September 29, 2006

பேய்....! பிசாசு...! ஆவீ...!

முணு நாலு வருசத்துக்கு முன்னாடி நடந்த சம்பவம் இது. கொஞ்சம் பயங்கரமான சமச்சாரம் வெறேங்க, அதனாலே பொறுமையவே படிங்க.

அப்பதேய்ன் குஷி படம் ரிலிஸ் ஆகி இருந்த சமயம், , இன்னிக்கு இந்த படத்தே பார்த்திராலாமின்னு அதுவும் ஞாயித்துகிழமை அதுவுமா நைட் ஷோவுக்கு நானு எங்க கோஷ்டி மொத்தம் ஆறுபேரு சகிதம் கூட்டமா கிளம்பி போனோம். போறேப்பவே ஏரியாக்குள்ளே ஏய் இங்கே பாரு போறமில்லே போறமில்லே... நைட்ஷோ பார்க்கப்போறமில்லேன்னு சத்தமா சவுண்ட் விட்டுக்கிட்டே வந்தான் பிரண்டு கணேசன்.. ஒரே சத்தமா கத்தி பத்துமணிக்கெல்லாம் தூங்கப்போறவய்ங்களெல்லாம் வெறுப்பேத்திட்டு தான் அந்த இடத்தே விட்டு கிளம்பிப்போனோம். பல பேரு வெளியே வந்து புலம்பிட்டுதான் போனாய்ங்க... அதிலெ ஒருத்தேய்ன்.

நிர்மல்:- "ஏலேய் உங்களுக்கு டிக்கெட்டே கிடைக்காதுங்கடா... போயிட்டு சும்மாதான் வரப்போறீங்க... தொலைஞ்சுபோங்கடா நீங்க திரும்பிவர வரைக்கும் இந்த ஏரியா கொஞ்சம் நிம்மதியா இருந்தா சரி.... "

கணேஷ்:- "ஆமாப்பா கலியுலக முனிவரு சாபம் விட்டாருடோய்... போடி போ போயி கவுத்தடிச்சு படு செவனென்னு, ஏலேய் நிருமலா நாளைக்கி நீ வேலைக்கு போயீ கழட்ட போகணும், எங்களுக்கு தான் அதில்லே அதுனாலேதான் நைட்ஷோ போறோம்....அப்புறம் மச்சான் வா தம்மடிக்க போலாமினு சாயங்காலம் கூப்பிடுவேல்லே அப்போதைக்கு பார்ப்போமிடி உன்னோட சாபத்தே..."

நானு:- "டேய் கணேசா ஏண்டா இந்த சவுண்ட் தேவையா... பேசமா வாடா, இப்போ யாரு கேட்டா நீயும் அவனும் தம்மடிக்கிற மேட்டரை.. சும்மா வாடா எங்கப்பா காதிலே விழுந்தா நானும் தம்மடிக்கிறேன்னு..நாளைக்கி என்னையே பெல்ட்'லே அடிப்பாருடா..... "

சங்கர்:- "டேய் ராமா உனக்காச்சிம் பரவாயில்லே.. உங்கப்பா உன்னையே வீட்டுக்குள்ளே வச்சு வெளுப்பாரு.... எங்க நைனா நடுரோட்டிலேயே ஓட ஓட விரட்டி அடிப்பாருடா...... "

கணேஷ்:- "தொடநடுங்கி பயலுகளா... ஏண்டா அப்பாவுக்கெல்லாம் இப்பிடி பயப்பிடிறீங்க.... உங்களுக்கெல்லாம் உங்கப்பாவே எப்பிடி வளர்க்கமின்னுத் தெரியலே... இப்போ என்னை எடுத்துக்கோ, நான் எப்பிடி வளர்த்துக்கிறேன் பாரு, நான் என்னா சொன்னாலும் சரின்னு கேட்பாரு எங்கப்பாரு..... "

நானு:- "உன்னைமாதிரி வீம்புக்கு விளக்குமாத்திலே அடிவாங்குற ஜோலி எங்களுக்கு வேணாமிட்டோய், ஆனா எதுக்கு போனமாசத்திலே ரெண்டுவாரம் உங்க அக்கா வீட்டுலே போயி கிடந்தே, பாண்டியமன்னன் திருச்சி உறையூருக்கு பட்டணபிரவேசம் போயிருந்தாரா... நீ மொத்து வாங்கீ ஊருக்கு ஓடிப்போனது நம்ம முக்குச்சந்து குஞ்சுகுளுவானுக்கும் தெரியுமிடா.... உனக்கு இந்த வாயி மட்டும் இல்லே, அந்த மணிநாயி கூட மதிக்காது..... வா செவனென்னு..."

வினோத்:-" நல்லா கேளு மாமா... நேத்திக்கு சின்னகடை தெருவுலே டீ குடிச்சிக்கிட்டு இருக்கிறப்போ இந்தபய வந்து என்னாடா ஊமையா உனக்கு குழந்தை பொறந்திருக்குன்னு சொல்லவே இல்லேன்னு எதிர்தாப்பலே நின்னுக்கிட்டு இருந்த என்னோட ஆளுக்கு கேட்கறமாதிரி சவுண்டுவிட்டான் செங்ககாட்டான்..!"

நானு:- "டேய் அடங்குடா.... உங்க ஆளு..அய்யோ கேட்கவே கொடுமைடா... ஏலேய் கணேசா வா பேசமே, பாரு ஊமையன் கூட சவுண்டுவிட ஆரம்பிச்சிட்டான்.... நாமேதான் படம் பார்க்கப்போறோம்... ஊருகாரயங்களுக்கு நம்மை படத்தை பயாஸ்கோப்பிலே காட்ட இல்லே...!"

வினோத்:-" டேய் அவனவன் காதல் பண்ணிபாருங்கடா... அப்போ தெரியுமில்லே, நாங்க படற அவஸ்தையெல்லாம்..!"

கார்த்திக்:-" அப்பா சாமிகளா தியேட்டர் வந்திருச்சிடா, மொக்கயனை முன்னாடிப்போய் டிக்கெட் எடுக்க சொன்னோம், எடுத்தானான்னு தெரியலெ..."

சரவணன்: - "டேய் பசங்களா, ஆறுப்பேத்துக்கும் டிக்கெட் எடுத்தாச்சிடா.!வாங்கடா உள்ளுக்க போவலாம். "

படம்மெல்லம் நல்லாதான் இருந்து ஒருபய கூட தூங்ககொள்ளமேதான் வெளியெ வந்தோம். அது ஞாயிற்றுக்கிழமைனலே சாதாரணமாகூட திறந்து இருக்கிற கடைகண்ணி எதுவுமே இல்லெ, அதுவும் மணி ஓன்னறையா ரெண்டொன்னு மறந்துப்போச்சு. அமிர்தம்,மீனாட்சி தியேட்டர்லே இருந்து தெற்குவெளி வீதி வரைக்கும் கொஞ்சகூட்டம் எங்ககூட வந்தாங்க. அதுக்கப்புறம் நாங்க மட்டுந்தேய்ன் நடந்துப்போறோம், ரோட்டிலே.... எங்க காலடி சத்ததை மீறீ ஒரு சத்தம் கேட்குது எல்லா பய காதுக்கும். டைமிலே எல்லாரும் திரும்பிப்பார்த்தோம் யாராவது பொம்பளையாலு யாராச்சிம் வர்றாங்களான்னு.... ஒருத்தரையும் காணோம்... லேசா பயம் அடிவயத்திலே இருந்து கிளம்பி ராக்கெட் கணக்கா ஜிவ்வ்ன்னு மேலே நோக்கி தொண்டை வழியா அம்பூட்டு பேருக்கும் பேசறேன்னு சொல்லி காத்தா வருது.



நானு:- "டேய் சனிபயலுவலா.... பயமுருத்தினுமின்னே எவனாவது கொலுசே பைலே போட்டுக்கிட்டு சேட்டை பண்ணிருக்கீங்களா... சொல்லீருங்கடா பயமாஇருக்கு, ஏலேய் கணேசா ஒன்னோட வேலைதானா இது.? "

கணேஷ்:-" இல்லடா...நான் எதுக்கு செய்யபோறேன் இந்தவேலையெல்லாம்......நேத்து ராத்திரி HBO'லே பார்த்தா பேய் படமெல்லாம் ஞாபகம் வருதுடா எனக்கு."

சரவணன்:- "டேய் நீங்க ரெண்டுபெரும் பேசறப்போகூட அந்த ஜல்ஜல்ன்னு சத்தம் கேட்டிச்சுடா.! "

வினோத்:- "அடேய் இப்போயும் கேட்குதுடா, போறப்பவே எங்க அம்மாச்சி சொன்னுச்சு, ஏண்டா பார்த்து சூதனாமா வந்துசேருடா, இங்கே பாரு நாமெல்லே போயீ பேய்,பில்லி,சூனியத்தோட சேர்ந்து வர்றோம். "

நானு:- "ஊமை செவன்னெனு வாடா. இங்கே பாரு கார்த்தியும், இந்த சவுண்டன்(கணேஷ்)னும் விட்டா இங்கே ... போயிருவானுக போலே... "

சங்கர்:- "கிளம்புறநேரத்திலே கொஞ்சநஞ்சமா பேசினே சவுண்டா... இப்போ பேசுடி கண்ணு,இப்போ பேசு....? "

கணேஷ்:- "டேய் சங்கரா ஏண்டா இந்த மொக்ககுத்து குத்துறே.... விடுடா, இங்கே பாரு நானும் நாலு வார்த்தை பேசலாமின்னு பார்க்கிறேன், ஒன்னுஒன்னா அதுவும் காத்து காத்தா வருதுடா, என்னோட சட்டைவேட்டியெல்லாம் நனைச்சு போச்சுடா.! "

நானு:-" சவுண்டா உன்னோட சட்டை நனைஞ்சது சரி, வேட்டி எப்பிடிரா நனைச்சு போச்சு... அப்புறம் நம்மகூட வர்றது பொம்பளை பேயின்னு நினைக்கிறேன், கொலுசு சத்ததேன் கேட்குது! "

கார்த்திக்:- "ராமா இந்த ஆராய்ச்சிகேள்வி தேவைதானா இப்போதைக்கு..? "

சரவணன்:- "ஆமாண்டா அவனவனுக்கு அவன் உசுரு மேலேயும் கீழயும் போயி வந்து இப்போ பேசுறெப்போ தொண்டைகுழியிலே எட்டிப்பார்க்கிது. இவியங்களுக்கு ஆராய்ச்சியெல்லாம் பண்ணச்சொல்லுது இந்த நேரத்திலே, "

சங்கர்: - "டேய் இங்க பாருங்கடா அமிர்தம் தியேட்டர் நம்ம வீட்டிலே இருந்து பத்துநிமிசம் நடைதான்.... ஆனா பயத்திலே இப்போ அந்த முக்குலே இருந்து இங்கே வர்றதுக்கு ஒருமணிநேரம் ஆனா மாதிரி இருக்கு.... இன்னும் ரெண்டு சந்து போகணுமிடா, இப்போ ஈரக்கொலைலே என்னோமோ புடுச்சு ஆட்டுறமாதிரி இருக்குடா..! "

நானு:-" டேய் ஒன்னு பண்ணுவோமா.... பேசமே ஓடுவோமாடா இங்கெயிருந்து... நடக்க நடக்கதானே நம்மக்கூட அந்த சத்தம் வருது... !"

ஓடியே எங்கதெருமுனைக்கு வந்துட்டோம், ஆனா அந்த சத்தம் நிக்கலே.... இங்கே இன்னோரு வினை ஆரம்பிச்சது, ஊருக்குள்ளே இருக்கிறே அம்பூட்டு நாயும் அங்கேனேதான் கிடந்துச்சுக, நாங்க ஓடி வந்தவுடேனே என்னோமோ வேத்துகிரகத்திலே இருந்து வந்தக மாதிரி தொரத்துக அம்பூட்டு நாயிகளும் எங்களை, ஓடினாதானே கொரைக்குதுன்னு மெதுவா மறுபடியும் நடக்க ஆரம்பிச்சோம், பேயிக்கிட்டே தப்பிச்சு நாயிக்கிட்டே மாட்டிக்கிட்டே கணக்கா சேர்த்துதான் மறுபடியும் கொரக்க ஆரம்பிச்சதுக, அப்போ ஒரு அதிசயம் நடந்த மாதிரி எங்க தெரு மணி நாயி சத்ததே கேட்டு ஓடி வந்துச்சு, அதுக்கு நாங்க பிஸ்கெட்ட்ல்லாம் வாங்கிப் போட்டுறதினாலே ஒரு சவுண்ட் விட்டுச்சு, அந்த எபக்ட்க்கு எல்லா நாயிகளுக்கும் ஓடிப்போயிருச்சுக,

நானு:-"அப்பா சாமி மணி நாங்க வாங்கி போட்ட பிஸ்கெட்டுக்கு ஒரு உதவி பண்ணியே, அப்பிடியே எல்லார் வீட்டு வரக்கும் வந்து ட்ராப் பண்ணிட்டு போயிரு..!!!"

கணேஷ்:- "ஏலேய் யாருகூட பேசிட்டு வர்றே நீயீ.. ??"

நானு:- "நம்ம கொலச்சாமி மணிக்கிட்டே!!"

கணேஷ்:- "அதுச்சரி நாயிக்கெல்லாம் பேசிக்கிறீங்களா..பேசுங்க பேசுங்க.. இன்னும் பாரு அந்த ஜல்ஜல் சத்தம் கேட்குது.. இந்த மணிநாயி வந்தும் கேட்குதினா எவன் ரத்தம் குடிக்க பின்னாடி வருதுன்னு தெரியலே.. ??"

சவுண்டன் பேசி முடிக்கிறக்குள்ளே மணி அவன் காலே கடிச்சிட்டு ஓடிப்போயிருச்சு, என்னா பிரச்சினையோ அவங்க ரெண்டு பேருகளுக்குள்ளே, என்னா சண்டைன்னு கூட தெரியலே.. அதுக்கப்புறம் அந்த பயலே இழுத்துக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடி அவங்க வீட்டுக்கு போயி தகவல் சொல்லி முடியறதுக்குள்ளே விடிஞ்சுப்போச்சு.

ஆனா விடியறவரைக்கும் விடாமே திரும்ப திரும்ப ஜல்ஜல்ன்னு எல்லா பய காதிலேயும் கேட்டுக்கிட்டேதான் இருந்திச்சு.

30 comments:

said...

நானே வருவேன்...

said...

வெள்ளிக்கொலுசா?, தங்க கொலுசா?

said...

அட நம்ம ஃபோட்டோ!

said...

// சங்கர்:- "டேய் ராமா உனக்காச்சிம் பரவாயில்லே.. உங்கப்பா உன்னையே வீட்டுக்குள்ளே வச்சு வெளுப்பாரு.... எங்க நைனா நடுரோட்டிலேயே ஓட ஓட விரட்டி அடிப்பாருடா...... " //

சொல்லவேயில்ல...

said...

எங்க வீட்ல எல்லாரும் ஊர்க்கு போயிருந்த சமயம், நான் மட்டும் வீட்ல தனியா இருந்தேன். வெளில அம்மாவாசை இருட்டு. கண்ண இறூக்க மூடிட்டா துக்கம் வந்திடும்னு எனக்கு நானே சொல்லிகிட்டு தூங்கறேன், ஜன்னல் பக்கமிருந்து யாரோ பெருசா மூச்சு உடற மாதிரி சத்தம். போக போக சத்தம் அதிகமாச்சே தவிர கொறையறமாதிரி தெரியல. போன் போட்டு யாரையாவது கூப்பிடலாமின்னு நினைச்சு லைட்ட போட்டேன். சரி என்னதான் சத்தம் வருதுன்னு ஜன்னலை தொறந்து எட்டிப்பாத்தா....

சப்புன்னு ஆகிப்போச்சு..

எங்க வீட்டு கோமாதா அப்பாவி மாதிரி முகத்தை வச்சிகிட்டு அசை போட்டுகிட்டு இருக்கு! அது வுட்ட மூச்சுதான் அது.

அர்த்த ராத்திரில அசடு வழிஞ்சிகிட்டே வந்து திரும்ப படுத்தேன்.

said...

//Anonymous said...
நானே வருவேன்... //

வேணாம் அனானி சாமி.... எனக்கு பயமா இருக்கு..

said...

//வெள்ளிக்கொலுசா?, தங்க கொலுசா? //

வாப்பா கதிரு,

யாருக்குத் தெரியும் அதெல்லாம், அன்னிக்கு பட்ட அவஸ்தையிலே இதை வேற பார்த்திருக்கனிமின்னு சொல்ல வர்றீயே.....

said...

//அட நம்ம ஃபோட்டோ! //

ஆத்தா ஆவீ வந்திட்டிய்யா.....

said...

//கணேஷ்:- "தொடநடுங்கி பயலுகளா... ஏண்டா அப்பாவுக்கெல்லாம் இப்பிடி பயப்பிடிறீங்க.... உங்களுக்கெல்லாம் உங்கப்பாவே எப்பிடி வளர்க்கமின்னுத் தெரியலே... இப்போ என்னை எடுத்துக்கோ, நான் எப்பிடி வளர்த்துக்கிறேன் பாரு, நான் என்னா சொன்னாலும் சரின்னு கேட்பாரு எங்கப்பாரு..... "
//
சூப்பர் டயலாக்...

கடைசியா பேய பாத்தீங்களா???

said...

ராம்,

பாவமய்யா உன்னோட நிலைமை, ஏதோ சத்தம் வந்ததுக்கு பேயீ, பிசாசுன்னு பயந்து போயி இருக்கிங்க

said...

//யாராவது பொம்பளையாலு யாராச்சிம் வர்றாங்களான்னு.... ஒருத்தரையும் காணோம்... லேசா பயம் அடிவயத்திலே இருந்து கிளம்பி ராக்கெட் கணக்கா ஜிவ்வ்ன்னு மேலே நோக்கி தொண்டை வழியா அம்பூட்டு பேருக்கும் பேசறேன்னு சொல்லி காத்தா வருது//

ஏன்யா ராயலு,
உன்னை பெரிய வீரன்னு இல்லய்யா இம்புட்டு நாளும் நெனச்சிருந்தேன். இப்படி போய் பயந்து நடுங்கிருக்கே? இதப் படிக்கிறதுக்கு எனக்கே வெக்கமா இருந்துச்சு.

ஷேம் ஷேம் பப்பி ஷேம்.

said...

அடடே வாங்க லிவிங்ஸ்மைல் வித்யா...

ஏங்க நான் அடி வாங்கிட்டு திரிஞ்ச கொடுமையான காலகட்டத்தை சொல்ல வேறச் செய்யணுமா என்னா...?

ஆனா நான் சிகரெட் அடிக்கமாட்டேன், அதுனாலே எங்கப்பாக்கிட்டே அதுக்காக அடிவாங்கினதில்லை.

said...

கதிரு,

சூப்பரா இருக்குப்பா உன்னோட பயந்த சம்பவம். ஆனா எங்களுக்கு அன்னிக்கு வந்த பயத்திலே எனக்கெல்லாம் ரெண்டு நாளா காய்ச்சல், சவுண்டன் பத்து நாளா ஆஸ்பத்திரிலே இருந்தான்.

என்னத்த அப்புறம் ஒரு வருசமா நைட்ஷோ'வே போகவேயில்லை.

said...

உங்க பின்னாடி வந்த பொன்னு முன்னாடி நாலு பொறுக்கி பசங்க கலாட்டா பண்ணிட்டு போறாங்கன்னு ஸ்டேசன்ல போய் கம்ப்ளெயிண்ட் கொடுத்ததையும், அடுத்த நாள் ஸ்டேசன்ல லாடம் கட்டினதையும் சொல்லாம விட்டுட்டீங்க ;)))

said...

//சூப்பர் டயலாக்... //

டாங்கீஸ் பாலாஜி, உன்னோட இந்த வாழ்த்தே அந்த பய சவுண்டன்'கிட்டே சொல்லிறேன்.

//கடைசியா பேய பாத்தீங்களா??? //


அதை ஏன் கேட்கிறே... அன்னிக்கு நைட் பூராவும் தூங்காமே அந்த நாய்கடிப்பட்ட நாயை தூக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு வேறே அலைஞ்சதில்லே நாங்க எல்லோருமே பேய் கணக்காதான் இருந்தோம்.

said...

//ராம்,

பாவமய்யா உன்னோட நிலைமை, ஏதோ சத்தம் வந்ததுக்கு பேயீ, பிசாசுன்னு பயந்து போயி இருக்கிங்க //

அனானி சாமி,

உங்களுக்கு இந்தமாதிரி அனுபவம் இல்லேன்னு நினைக்கிறேன். அதுதான் இப்பிடியெல்லாம் கேள்வி கேட்டு வச்சிருக்கீங்க......

அன்னிக்கு வந்த பயத்திலே மொத்தம் மூணு பேத்துக்கு காய்ச்சல் வந்திருச்சு, என்னையும் சேர்த்துதான்.... :(

said...

//ஏன்யா ராயலு,
உன்னை பெரிய வீரன்னு இல்லய்யா இம்புட்டு நாளும் நெனச்சிருந்தேன். இப்படி போய் பயந்து நடுங்கிருக்கே? இதப் படிக்கிறதுக்கு எனக்கே வெக்கமா இருந்துச்சு.//

வா தல,

அந்த நினைப்பு உண்மைதான், ரெண்டு நாளு காய்ச்சல் படித்து எந்திருச்சாலும் அடுத்த வருசமே?? மறுபடியும் நைட்ஷோ போயீட்டு வந்தோமே, பார்த்துக்கோ எங்களோட வீரதீரத்தே..!

ஆமாம் எதுக்கு உனக்கு வெக்கமா இருந்துச்சு..?

இங்கே எதும் பொம்பளை ஃபோட்டோ இல்லீயே...!!!

ஒரு வேளை......... :))))))

//ஷேம் ஷேம் பப்பி ஷேம். //

இது என்னா போயம் தல

said...

//உங்க பின்னாடி வந்த பொன்னு முன்னாடி நாலு பொறுக்கி பசங்க கலாட்டா பண்ணிட்டு போறாங்கன்னு ஸ்டேசன்ல போய் கம்ப்ளெயிண்ட் கொடுத்ததையும், அடுத்த நாள் ஸ்டேசன்ல லாடம் கட்டினதையும் சொல்லாம விட்டுட்டீங்க ;))) //

கவுத்திட்டியே கப்பி.... ஆமாம் அது எப்பிடி உனக்குத் தெரியும் நீ எதுக்கு தெற்குவாசல் போலிஸ் ஸ்டேசன்க்கு வந்தே...

அன்னிக்கு நீ எந்த செல்'லு

said...

ஒரு நாய் வந்து உன்னய காப்பாத்தும் நிலைமைல நீ இருந்து இருக்க....

said...

தலைப்பு ஆவீ இல்ல, ஆவி

ரொம்ப பயந்துட்டு விட்டீயோ, இந்த இழு இழுக்குது

said...

//சொல்லவேயில்ல... //

நீங்க கேட்கவே இல்ல

said...

Aha.... :O Naan escpae- andha poto paarthadhumey enakku nadukkam edukka aramichachu...vera nalla post - pottutu comment podunga..indha pakkam varen..Ippo an running away...

said...

//ஒரு நாய் வந்து உன்னய காப்பாத்தும் நிலைமைல நீ இருந்து இருக்க.... //

வாப்பா புலி,

ரொம்ப நாளு கழிச்சு வந்திருக்கே.
நீ சொல்றது உண்மைதாப்பா, என்னா செய்ய அந்த நிலைமைலே யாரும் வந்தாலும் அதிலிருந்து தப்பிக்கிறதுதானே நமக்கு தேவை....

//தலைப்பு ஆவீ இல்ல, ஆவி

ரொம்ப பயந்துட்டு விட்டீயோ, இந்த இழு இழுக்குது //

பார்த்தியா வந்துவுடேனே ஆரம்பிச்சிட்டியே உன்னோட நொணநாட்டியத்தே....? :-)

//நீங்க கேட்கவே இல்ல //

:-)

said...

//Aha.... :O Naan escpae- andha poto paarthadhumey enakku nadukkam edukka aramichachu...//

அடடே வாங்க மருதம்,

மொததடவை நம்ம பக்கம் வந்திருக்கீங்க. ஏங்க உங்களுக்கு இந்த போட்டோவுக்கே நடுக்கம் வந்திருச்சினா எங்களுக்கு அன்னிக்கு காய்ச்சலே வந்திருச்சிங்க,,,,

//vera nalla post - pottutu comment podunga..indha pakkam varen..Ippo an running away..//

ரொம்ப டாங்கீஸ்ங்க நல்லா போஸ்ட்ன்னு சொன்னதுக்கு.... திரும்பவும் வாங்க..... :-)))

said...

//கவுத்திட்டியே கப்பி.... ஆமாம் அது எப்பிடி உனக்குத் தெரியும் நீ எதுக்கு தெற்குவாசல் போலிஸ் ஸ்டேசன்க்கு வந்தே...

அன்னிக்கு நீ எந்த செல்'லு //

எவரெடி செல்லு :))

எப்படியோ இப்பவாச்சும் நடந்த உண்மையை ஒத்துக்கிட்டீங்களே ;))

said...

//ஒரு நாய் வந்து உன்னய காப்பாத்தும் நிலைமைல நீ இருந்து இருக்க.... //

:)))

said...

//எவரெடி செல்லு :))//

ஹி ஹி பார்த்தியா மறுபடியும் டபாய்க்கிறே பாரு....? உண்மையே சொல்லு மொத செல்'லா இல்லே பிள்ளையார் கோவிலே ஒட்டி இருக்கிறதா...?

//எப்படியோ இப்பவாச்சும் நடந்த உண்மையை ஒத்துக்கிட்டீங்களே ;)) //

நீ மொதல்லா ஒத்துக்கோ... அப்புறமா இன்னும் மிச்சத்தே சொல்லிறேன்.

said...

முந்திக்காலம்னா தெற்குவாசல் மார்க்கட் உருளைக்கிழங்கு சாயுபுட்ட மந்திரிச்சிருக்கலாம்..காய்ச்சலாவது ஒண்ணாவது எதுவும் அண்டியிருக்காது..

said...

//முந்திக்காலம்னா தெற்குவாசல் மார்க்கட் உருளைக்கிழங்கு சாயுபுட்ட மந்திரிச்சிருக்கலாம்..காய்ச்சலாவது ஒண்ணாவது எதுவும் அண்டியிருக்காது.. //

வாங்க தருமி சார்,

நான் போயி தெற்குவாசல் மசூதிலே இருக்கிறவர்ட்டே போயி மந்திரிச்சு அப்புறம் இன்னும் ரெண்டு இடத்திலெயும் மந்திருச்சு தாயத்தோட இருக்கிற கருப்பு கயித்தை கழுத்துலே கட்டிக்கிட்டு தான் ஒரு மாசத்துக்கு அலைஞ்சேன்.

அப்புறம் அது என்னோட அழகே கெடுத்ததுனாலே அவுத்திட்டேன்...:-)))

said...

ஏன் ராம், மறுபடி சத்தம் கேட்டதேயில்லையா??!!!