Wednesday, September 13, 2006

மதுரை புத்தகக் கண்காட்சி




எங்கூர் பக்கம் எதாவது கண்காட்சின்னா அதுவும் தமுக்கத்திலே சித்திரைப் பொருட்காட்சி இல்லன்னா மடீசியா போடுறே பொருட்காட்சிதான் பேமஸ். இப்போதான் மொதமுறையா புத்தககண்காட்சி போட்டுருந்தாங்க. நல்லாதான் இருத்திச்சு, சின்னப்புள்ளலே எதாவது பொருட்காட்சி போட்டா எங்கப்பாக்கிட்டே கூட்டிக்கிட்டு போகச்சொல்லி நச்சரிப்பேன். காரணம் என்னானா அங்கே போனா பெரிய தோச சைஸ்க்கு அப்பளம் சாப்பிடலாம், ராட்டினம் இருந்தா அதிலே சுத்தலாம். ஆனா இப்போ சில வித்தியாசங்கள் கண்கூடாக தெரிஞ்சுப் போச்சு, நாமும் வளர்ந்துட்டோமில்லே.




தமுக்கத்திலே நடுமையப் பகுதிலே அழகா செட் போட்டு நன்றாக செய்திருந்தார்கள் இக்கண்காட்சியை ஏற்பாடு செய்தவர்கள். சனிக்கிழமை என்பதனால் நன்றாக கூட்டம் வந்திருந்தது. சினிமா தியேட்டர்களிலும், ராஜாஜி,மாநகராட்சி ஈகோ பார்க்கிற்கு வரும் கூட்டத்தை விட கொஞ்சம்தான் அதிகம்.

நான் சனிக்கிழமை மாலைவேளையில் சென்று எனக்குத் தேவையான புத்தகங்கள் கிடைக்கின்றதா எனமுதலில் ஒவ்வோரு ஸ்டாலிலும் சுற்றிப் பார்த்தேன். சில புத்தகங்கள் தலைப்புக்களிலேயே வாங்கும்படி ஈர்த்தன, வெகுஜன எழுத்தாளர் எழுதிய சில புத்தகங்களும், சில புத்தகங்களில் புரட்டும் பொழுது கண்ணிற்கு தென்படும் வரிகளில் ஈர்க்கப்பட்டு வாங்க வேண்டுமென நினைத்த புத்தகங்கள் பல. இவ்வாறக படித்தும் ரசித்தும் சிலவற்றை வாங்க வேண்டுமேன முடிவு செய்து அன்றே வாங்கிய புத்தகங்களின் எண்ணிகை மொத்தம் பதினொன்று.

அன்றைய தினத்தில் ஒரு சுவராசியமான விஷயமெனில் நான் வாங்கிய கந்தப் புராணம், ஓஷோவின் மீண்டும் புல் தானாக வளர்கின்றது, பெரியாரின் பொன்மொழிகள் ஆகிய புத்தகங்களை தெரிவுச் செய்து பணம் செலுத்த சென்றப் போது அந்த பதிப்பகத்தாரின் காசாளார் என்னை உற்றுநோக்கி என்னவோ கேட்க வருவது போல முகத்தை பார்த்துக்கொண்டே இருந்தார்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலையில் மறுபடியும் சென்றேன். எவ்வகையான புத்தகங்கள் வாங்க வேண்டுமென அனைத்துப் புத்தகங்கள் அனைத்தையும் விருவிருவென எடுத்துக் கொண்டு பில்லுக்கு வரிசையில் நிற்க ஆரம்பித்தேன். ஆனால் முதன்முறையாக ஒரு ஸ்டாலில் ஆண்டாள் பிரியதர்சினியின் மன்மதஎந்திரம் கவிதைத் தொகுப்பை புரட்டிப் பார்த்து தாக்குண்டுப் போனேன், ஆம் கீழ்கண்டவைகள்தான் நான் முதலில் அப்புத்தகத்தில் வாசித்தவைகள்,

ஒருநாள் தினவு
உனக்கு
ஒருநாள் உணவு
எனக்கு.


நீங்கள் நினைத்தது சரியே... ஆம் அக்கவிதை தொகுப்பு பாலியல் தொழிலாளி பற்றியதே.

கண்ணதாசன்,பாலகுமரன்.வைரமுத்து,தபூசங்கர்,சாண்டில்யன்,இராமகிருஷ்ணன்,வடிவேல்! என அனைத்து தரப்பட்ட எழுத்தாளர்களின், மற்றும் நமது கெளதம் எழுதிய கிழக்கு பதிப்பகத்தாரின் வெளியிட்டான பத்துக் கட்டளைகள் புத்தகங்களும் வாங்கினேன். மொத்தம் நான் வாங்கிய புத்தகங்கள் முப்பத்தி ஒன்று. இம்முறை ஆங்கிலப் புத்தகங்களில் ஒன்றுகூட வாங்கவில்லை. ஆமாம் எத்தனை நாளைக்கு தான் ஒரு பக்கத்தை படிக்க லிப்கோ,கன்சியஸ்ன்னு பார்த்து அர்த்தம் கண்டுபிடிச்சு படிச்சிக்கிட்டு இருக்கிறது, நமக்கு என்ன தெரியுதோ அதை மட்டும் செய்வோமின்னு அதை வாங்கலை.

அங்கே கண்காட்சியிலே இருந்த எல்லா புத்தகத்தையும் தூக்கிட்டு வந்திரலமின்னு ஒரு நப்பாசை கூட இருந்துச்சு. நம்மளை மாதிரி விஐபி ஏதாவது தப்பு பண்ணினா ஏதாவது ஒரு மாளிகையிலே ஜெயில்ல வைப்பங்களாமே, நம்ம பெருசை போட்டுத் தள்ளிட்டு இந்த புத்தகக்கண்காட்சி இருக்கிற இந்த தமுக்கம் மைதானத்திலயே அடைச்சு வைக்கனுமின்னு கோரிக்கை விட வேண்டியதுதான், நல்லா ஓசியா பூரா புத்தகத்தையும் படிக்கலாம், கோழிகறி சாப்பிட்டுக்கிட்டே....

புத்தககண்காட்சி நிறைவுநாள் என்பதனால் நிறைய பிரபலங்களை காணமுடிந்தது. அதுவும் குறிப்பாக வைரமுத்து,ரவி தமிழ்வாணன் ஆகியோர் வருகைப் புரிந்திருந்தனர். அடுத்த வருடமும் ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் மதுரையில் புத்தகத்திருவிழா நடக்கும் என அறிவிப்பு கிடைத்தது. ஹீம் அடுத்த வருடமும் சென்று வந்து இதுப்போல் ஒரு பதிவிடுவேன்.

12 comments:

said...

ராம்,
நல்ல பதிவு. சின்ன வயசுல சென்னை தீவுத் திடல் சுற்றுலா பொருட்காட்சி போனது ஞாபகம் வந்துருச்சு. பதிவு எழுதியிருக்குற விதம் நல்லாருக்கு. பெரிய புத்தகப் புழுவா இருப்பே போலிருக்கே?

//தெரிவுச் செய்து பணம் செலுத்த சென்றப் போது அந்த பதிப்பகத்தாரின் காசாளார் என்னை உற்றுநோக்கி என்னவோ கேட்க வருவது போல முகத்தை பார்த்துக்கொண்டே இருந்தார்.//

என்னான்னு அவரையே கேட்டுருக்கலாம்ல? பதிவு இன்னும் சுவாரசியமா இருந்துருக்குமே?
:)

said...

என்ன 31 புஸ்தகமா? என்னைய்யா எல்லாத்தையும் எப்போ படிக்கப் போறீங்க?

///
ஒருநாள் தினவு
உனக்கு
ஒருநாள் உணவு
எனக்கு.
///

கவிதை ரொம்ப நல்லா இருக்கு. மன்மதஎந்திரம் தொகுப்பின் அறிமுகத்திற்கு நன்றி.

said...

நல்ல பதிவு ராம்...

//சினிமா தியேட்டர்களிலும், ராஜாஜி,மாநகராட்சி ஈகோ பார்க்கிற்கு வரும் கூட்டத்தை விட கொஞ்சம்தான் அதிகம்.
//

இப்போதெல்லாம் இது போன்ற புத்தக கண்காட்சிக்கு மக்கள் ஆதரவு அதிகமாகி தான் இருக்கு...

அந்த பார்க் failure-னு கேள்விப் பட்டேன்??

//என்னான்னு அவரையே கேட்டுருக்கலாம்ல? பதிவு இன்னும் சுவாரசியமா இருந்துருக்குமே?
//
அதானே...

அது சரி...போட்டோல இருக்க கடைகாரங்க கிட்ட அட்வர்டைஸ்மெண்ட் பணம் வாங்கியாச்சா??? :))

said...

ராம்,
//கந்தப் புராணம், ஓஷோவின் மீண்டும் புல் தானாக வளர்கின்றது, பெரியாரின் பொன்மொழிகள் //
பல தரப்பட்ட புத்தகங்களை வாங்கியிருக்க... அப்படியே படிச்சு பதிவுல போட்டுட்டனா நாங்களும் தெரிஞ்சிக்குவோம்...

நான் எல்லாம் இந்த மாதிரி புத்தக கண்காட்சிக்கு போனா தெனாலி ராமன் கதைகள், பீர்பால் கதைகள் தான் வாங்குவேன் ;)

said...

//ராம்,
நல்ல பதிவு. சின்ன வயசுல சென்னை தீவுத் திடல் சுற்றுலா பொருட்காட்சி போனது ஞாபகம் வந்துருச்சு. பதிவு எழுதியிருக்குற விதம் நல்லாருக்கு//

வாங்க தல,

ரொம்ப டாங்கீஸ் இது நல்ல பதிவுன்னு சொன்னதுக்கு.... :-)

// பெரிய புத்தகப் புழுவா இருப்பே போலிருக்கே?//

ஆமாம் தல அது வரமா சாபமான்னு கூட எனக்கு தெரியலே...

////தெரிவுச் செய்து பணம் செலுத்த சென்றப் போது அந்த பதிப்பகத்தாரின் காசாளார் என்னை உற்றுநோக்கி என்னவோ கேட்க வருவது போல முகத்தை பார்த்துக்கொண்டே இருந்தார்.//

என்னான்னு அவரையே கேட்டுருக்கலாம்ல? பதிவு இன்னும் சுவாரசியமா இருந்துருக்குமே?:) //

அதை எங்கம்மா கேட்டுட்டாங்க ஏண்டா இந்த ஒவ்வோரு புஸ்தகமும் ஒன்னுக்கு ஒன்னு முரண்பாட்டு கருத்துக்களை சொல்லுமே, எப்பிடிரா படிச்சு புரிச்சுக்க போறேன்னு........?

said...

//என்ன 31 புஸ்தகமா? என்னைய்யா எல்லாத்தையும்

எப்போ படிக்கப் போறீங்க?

வாங்க குமரன்,

பூராவுமே தமிழ் புத்தகங்கள் தான் அதுனாலே சீக்கிரம் படிச்சு முடிச்சிருவேன். :-)))

//
ஒருநாள் தினவு
உனக்கு
ஒருநாள் உணவு
எனக்கு.
///

கவிதை ரொம்ப நல்லா இருக்கு. மன்மதஎந்திரம்

தொகுப்பின் அறிமுகத்திற்கு நன்றி. //

அக்கவிதை தொகுப்பை முழுவதும் படித்து பாருங்களேன்.

said...

//நல்ல பதிவு ராம்...//

வாப்பா கப்பி... டாங்கீஸ்ப்பா நல்ல பதிவுன்னு சொன்னதுக்கு.... :-)))

//இப்போதெல்லாம் இது போன்ற புத்தக கண்காட்சிக்கு

மக்கள் ஆதரவு அதிகமாகி தான் இருக்கு...//

ஆமாம் கப்பி நல்லா இருத்திச்சு, விழாகுழுவினர் கூட்டத்தை சமாளிக்க நல்ல ஏற்பாடுகள் செய்திருந்தனர். சனி & ஞாயிற்றுக்கிழமை என்பதனால் நன்றாக வந்திருந்தது. உன்னைத்தான் அங்கெனே காணோம்... ஊர்ப்பக்கம் எதாச்சிம் நடந்தா வந்து எட்டி பார்க்கணுமில்லே, எத்தனை தடவை தமுக்கம் ஏரியாவிலே சுத்திருப்பே, காலேஜை கட் அடிச்சிட்டு..... :-)))

//அந்த பார்க் failure-னு கேள்விப் பட்டேன்??//

அதைப் பத்தி விபரம் ஏதும் தெரியலைப்பா, ஆனா ஒருநாள் ஞாயிற்றுக் கிழமைப் போயிருந்தேன். நல்ல கூட்டம் வந்திருந்துச்சு.

////என்னான்னு அவரையே கேட்டுருக்கலாம்ல? பதிவு

இன்னும் சுவாரசியமா இருந்துருக்குமே?//
அதானே...//

இது என்னா.....????

//அது சரி...போட்டோல இருக்க கடைகாரங்க கிட்ட

அட்வர்டைஸ்மெண்ட் பணம் வாங்கியாச்சா??? :)) //

அடபாவி என்னோட கலையார்வத்தை பாரட்டுவேனு பார்த்தா இப்பிடி வாருறே..... :-)))))

said...

ராம் ,

எப்பிடி இருக்கிங்க...? மதுரை வந்திங்களா...? புக் ஃபேர் வந்திருந்திங்களா..? நான் டெய்லி அங்க ஈவ்னிங் வந்தனே... தினம் சாயந்திரம் உலகப் படம் போட்டாங்க தெரியுமா...

மதுரை வந்திருக்கிங்க எனக்கு ஒரு கால் பண்ணிருக்கலாம்..

நல்லா இருந்தா சர்...

said...

//ராம்,

பல தரப்பட்ட புத்தகங்களை வாங்கியிருக்க... அப்படியே படிச்சு பதிவுல போட்டுட்டனா நாங்களும் தெரிஞ்சிக்குவோம்...//

வாய்யா விகடன் புகழ் பாலாஜி,

பதிவுப் போட மேட்டர் கிடைக்கமே இருக்கிறப்போ போட்டுறேன்.... :-)

//நான் எல்லாம் இந்த மாதிரி புத்தக கண்காட்சிக்கு போனா தெனாலி ராமன் கதைகள், பீர்பால் கதைகள் தான் வாங்குவேன் ;) //

நானும் வாங்கினேன் பீர்பால் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகளும், அதை வீட்டுக்கு போனவுடேன தம்பி புடுங்கிட்டான்.

said...

//ராம் ,

எப்பிடி இருக்கிங்க...? மதுரை வந்திங்களா...? புக் ஃபேர் வந்திருந்திங்களா..? நான் டெய்லி அங்க ஈவ்னிங் வந்தனே... தினம் சாயந்திரம் உலகப் படம் போட்டாங்க தெரியுமா...//

வாங்க லி.ஸ்.வித்யா மதுரை வந்து மூணு நாள் இருந்தேங்க.... படத்தை நானும் பார்த்தேன் என்னுடைய சிற்றறிவுக்கு ஒன்னும் புரியலேங்க..... :-)))

//மதுரை வந்திருக்கிங்க எனக்கு ஒரு கால் பண்ணிருக்கலாம்..//

அடுத்த தடவை வர்றேப்பா கண்டிப்பா பண்ணுறேன்.

//நல்லா இருந்தா சர்... //

டாங்கீஸ் லி.ஸ்.வித்யா

said...

ராம்,
இதுக்கு இந்த விளம்பரம் எல்லாம்???

அது எதிர்பாராம நடந்த விபத்துனு நான் முன்னாடியே சொன்னனே...

நான் அத ஏற்கனவே மறந்துட்டேன்...நீயும் அத மறந்துடு ;)

said...

//ஏய் போலி ஆவி இன்னும் அடங்கலியா நீயீ....//

நான் ஏன் அடங்கணும் ராம்?

பேசாம சவமேன்னுதான் கிடந்தேன்.
என் குருநாதர்தான் என்னை திறந்துவிட்டார். அவர்கிட்டே போய் கேளுங்க!